search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pass"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலத்தின் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது.
    • அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 15,794 மாணவர்களில் 15,228 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 18,533 மாணவிகளில் 18,265 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக கோவை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 493 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.42 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.55 என மொத்தமாக 97.57 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதன் மூலம் கோவை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 96.21 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று கோவை மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது வெளியான தேர்வு முடிவில் 97.57 சதவீதம் பெற்று மீண்டும் 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

    கோவையில் உள்ள மத்திய ஜெயில் கைதிகளில் 12 பேர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத வெற்றி ஆகும்.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. 35 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 1200-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அதில் 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 6 ேபர், 351-400 வரை 8 பேர், 301-350 வரை 15 பேர், 251-300 வரை 27 பேர், 201-250 வரை 42 பேர், 151-200 வரை 107 பேர், 101 முதல் 150 வரை 211 பேர், 93 முதல் 100 மதிப்பெண்கள் வரை 93 பேர் என 509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 162 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

    தஞ்சாவூர் :

    தஞ்சை தமிழ்பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் தியாகராஜன் வெளியி–ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு (TURCET 2020) எழுதித் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க 1.8.2022 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டார்செட் 2020-ல் தேர்ச்சி பெற்றவர்கள் முனைவர் பட்டச் சேர்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன்பிறகு 2020 தேர்வுத் தகுதி செல்லாது. நீட், செட், யூ.ஜி.சி., ஜே.ஆர்.எப், கேட்தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 பருவத்திற்குப் பிறகு முனைவர் பட்டச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்பெறும் நுழைவுத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்று பதிவாளர் முனைவர் தியாகராஜன் தெரிவித்தார்.

    தற்போது ஆய்வியல் நிறைஞர் (எம்பில்) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் 15.8.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார்.
    • சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டி பாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45). இவரது மனைவி சுமதி. அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு சஞ்சய் (15), சந்துரு (13) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். கடந்த மாதம் வந்த தேர்வு முடிவில் 3 பாடத்தில் சஞ்சய் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனக்கூறி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே 10-ந் தேதி தொடங்கி நடைபெற்றது.

    தேர்வு முடிவுகள்

    இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 818 பேர் எழுதினர். இதில் 19 ஆயிரத்து 197 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.21 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    மாணவிகள் அதிகம்

    மாணவர்கள் 9 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து 564 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.62 சதவீதம் ஆகும்.

    மாணவிகள் 11 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.28 சதவீதம் ஆகும்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 9,201 மாணவர்கள், 10,739 மாணவிகள் என மொத்தம் 19,940 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 8,247 மாணவர்கள், 10,504 மாணவிகள் என மொத்தம் 18,751 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.04 சதவிகித தேர்ச்சி ஆகும்.

    மாணவர்கள் 89.63 சதவிகிதமும், மாணவிகள் 97.81 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம்

    தென்காசி மாவட்டத்தில் 8,285 மாணவர்கள், 9,329 மாணவிகள் என மொத்தம் 17,614 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,001 மாணவர்களும், 8,914 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.35 சதவீத தேர்ச்சியாகும்.

    11-ம் வகுப்புத் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், அவர்கள் 12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் அவர்கள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    பிளஸ்-1 வகுப்புகள் தொடக்கம்

    இதற்கிடையே மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ்1 வகுப்புகள் இன்று ெதாடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். முதல் 2 நாட்கள் நல்லொழுக்க பயிற்சிகள் மட்டுமே நடைபெற உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி ஜெயஸ்ரீ-594 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம், தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குபதிவியியல் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணினிபயன்பாடுகள் 100 மதிபெண் பெற்றுள்ளார்.

    பள்ளியில் 2-ம் இடம் பெற்ற மாணவி அம்சவள்ளி-590 மதிபெண் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் மதிப்பெண்பெ ற்றுள்ளார்.பள்ளி அளவில் 3-ம் மதிப்பெண் 588 இரண்டுபேர் பெற்றுள்ளனர். மாணவி நவினா தமிழ் 96, ஆங்கிலம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 37 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவ-மாணவிகள் 590-க்கும் மேல் 2 பேர், 580 க்கும் மேல் 11பேர், 550க்கும் மேல் 55 பேர், 500க்கும் மேல் 188 பேர் அதிக மதிப் பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, இயக்குனர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஈரோட்டில் பிளஸ் - 2 பொதுத் தேர்வில் 95.72 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இதில் ஆதிதிராவிடர், நலத்துறை பள்ளிகள் 82.21 சதவீதம், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 86.89 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிற துறைகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

    இதுகுறித்து பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் தேர்வு நடந்த 5 பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஆசனூர்-74 சதவீதம், பர்கூர்-80 சதவீதம், கெத்தேசால்-75 சதவீதம், தலமலை-44 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் ஆசனூர்-68 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், பூர்த்தி செய்யாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பர்கூர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை 418 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 418 பேருக்கு ஒரு தமிழாசிரியர், ஒரு ஆங்கில ஆசிரியர் உள்ளனர்.

    இது குறித்து கேட்டால் இந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையில் வருவதில்லை வேறு துறைகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தான் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுகிறது.

    பள்ளி கல்வித் துறையில் காலிப்பணியிடங்களில் 95 சதவீதத்தை நிரப்பி விட்டு மீதி ஆசிரியர்கள் இருந்தால் இது போன்ற பிற துறை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவுக்கான காரணத்தை ஆராய குழு அமைத்து அதனை சரிசெய்ய முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
    • இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.1 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது.

    ×