search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parents குழந்தை"

    குழந்தைகளுக்கு கண்களில் மை வைப்பது என்பது இந்தியாவில் பாரம்பரியமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கண்மை வைப்பது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கை காரணமாக கண் மையைப் பல குழந்தைகளுக்கு தன் பெற்றோர் இடுகின்றனர்.

    கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா?

    குழந்தைக்கு கண்களில் மை வைக்கலாமா? எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

    ஏன் கண் மையைக் குழந்தைகளுக்கு வைக்கின்றனர்?

    குழந்தையின் கண்கள் இன்னும் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கின்றனர்.

    தொற்றுகள், சூரிய கதிர்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையாலும் சிலர் மை இடுகின்றனர்.

    குழந்தைக்கு கண் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் மை வைக்கின்றனர்.

    ஏன் குழந்தையின் கண்களில் மை வைக்க கூடாது?

    கடைகளில் விற்க கூடிய கண் மையில் அதிக அளவு லெட் இருக்கிறது. இதனால் குழந்தையின் கண்களில் மை இட்டால், அதிக அளவு லெட்டின் தாக்கத்தால் மூளை, மற்ற உறுப்புகள், எலும்பு மஞ்சை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தசோகை, குறைந்த ஐ.கியூ போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.

    சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.

    குழந்தையை குளிக்க வைக்கும்போது சின்ன, குறுகிய துளைகளின் வழியாக மையில் உள்ள கெமிக்கல்கள் சென்று கண், மூக்கு போன்ற இடங்களில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்.

    கண் மை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மிகவும் ரசாயனத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.

    மேலும், உங்கள் விரல்களில் உள்ள தூசு, அழுக்கு, நகங்கள் மூலமாக குழந்தைக்கு பாதிப்பும் ஏற்படலாம்.

    உங்கள் கை விரலில் உள்ள அழுக்கு, தொற்று மூலமாக கிருமிகள் குழந்தைக்கும் பரவும். இது குழந்தையின் உடல்நிலையைப் பாதிப்படைய செய்யும்.
    18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கும், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவற்றின் டிரைவர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி(பொறுப்பு) ஜெய்தேவராஜ் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) ஜெய்தேவராஜ் பேசியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. அதை மீறி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டினால் வாகன உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். மேலும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தான் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும். அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மது அருந்தி விட்டும், செல்போன் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டக்கூடாது. 

    அப்படி ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் துறைமங்கலத்தில் இருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு நேரிடையாக ஷேர் ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தில்லா பெரம்பலூராக மாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×