search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parenting"

    • குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்.
    • அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    பொதுவாகவே குழந்தைகளுக்கு முதலாம் வகுப்பு படிக்கும் போதே அவர்களுக்கு கொடுக்கும் வீட்டுப்பாடங்களை அதை முடிப்பதற்கும், அவர்கள் தங்களுடைய பாடங்களை புரிந்து படிப்பதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சில குழந்தைகள் பாடங்களை படிப்பதற்கும், தேர்வை எதிர்கொள்வதிலும் சிரமப்படுவார்கள். சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இல்லாததாலேயே அவர்கள் இவ்வாறு சிரமப்படுவார்கள். அதற்கு பெற்றோரும், ஆசிரியரும் தான் பொறுப்பு. நாம் எப்போதும் குழந்தைகளை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். உன்னால் முடியும். இதை எவ்வளவு எளிதாக செய்ய முடியும், இதை செய்தால் நான் உனக்கு பரிசு தருவேன் என்று அவர்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    எப்போதுமே குழந்தைகளை பாசிட்டிவ் முறைகளை சொல்லிக்கொடுத்து தான் வளர்க்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க கூடாது. அது அவர்கள் மனநிலையை மாற்றி படிப்பின் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்திவிடும். எனவே முதலில் ஏன் உன்னால் படிக்க முடியவில்லை. ஏன் படிப்பில் உனக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டாம்.

    நாம் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதால் அந்த பாடங்கள் அவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது புரியாமல் இருக்கலாம். இதனால் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் புரிந்து பாடங்களை படிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவது அவர்களின் வழக்கமான ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    குழந்தைகள் படிக்கும் பழக்கத்தை உருவாக்குவதற்கான சில வழிகள்:

    தினசரி அட்டவணையை உருவாக்குவது மற்றும் அதை ஒட்டிக்கொள்வது. அது குழந்தைகளை மிகவும் ஒழுங்கமைக்க உதவுகிறது மற்றும் வீட்டுப்பாடம் மற்றும் படிக்கும் நேரத்தை அவர்கள் ஒதுக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    மற்றொரு வழி, படிக்கும் இடத்தை உருவாக்குவது. குழந்தைகள் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

    ஓய்வு எடுப்பதும் முக்கியம்- குழந்தைகள் பல மணிநேரம் படிப்பதை விட, மூளைக்கு ஓய்வு அளிக்க இடையிடையே சிறிய இடைவெளிகளை எடுக்க வேண்டும். அவர்களின் தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முடித்த பிறகு அல்லது அவர்களின் தினசரி அட்டவணையைப் பின்பற்றிய பிறகு, குழந்தைகளுக்கு பரிசு அளிக்க வேண்டும். இது அவர்கள் ஊக்கத்துடன் இருக்க உதவும்.

    குழந்தைகள் தேவைப்படும்போது உதவி கேட்க வேண்டும் - அது பெற்றோர், ஆசிரியர் அல்லது ஆசிரியரியர்களிடம் இருந்து தயங்காமல் உதவியை கேட்டு பெறுவதற்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இறுதியாக, குழந்தைகள் பாடங்களையோ அல்லது வீட்டுபாடங்களையோ ஒத்திவைப்பதைத் தவிர்க்க வேண்டும்- ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், குழந்தைகள் அதை கடைசி நிமிடம் வரை ஒத்திவைப்பதற்கு பதிலாக உடனடியாக அதை செய்ய அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

    இந்த படிகள் பிள்ளைகளின் படிப்புப் பழக்கத்தை உருவாக்க உதவும், அது அவர்களின் கல்வி வாழ்க்கை முழுவதும் அவர்களுக்குச் சிறப்பாக சேவை செய்யும். நல்ல படிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, குழந்தைகள் பள்ளியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிக்கும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

    பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைக்கு நேர்மறையான படிக்கும் பழக்கத்தை வளர்க்க உதவுவதில் நீங்கள் முக்கிய பங்குவகிக்கிறீர்கள்.

    முதலில், உங்கள் படிப்பில் (நீங்கள் இன்னும் பள்ளியில் இருந்தால்) அல்லது வேலையில் விடாமுயற்சியுடன் இருப்பதன் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது முக்கியம். குழந்தைகள் உதாரணம் மூலம் சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள், எனவே கற்றல் என்பது அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்குக் உணர்த்துவது முக்கியம்.

    இரண்டாவதாக, உங்கள் வீட்டில் கற்க ஒரு பிரத்யேக இடத்தை உருவாக்குங்கள். இது வாழ்க்கை அறையின் அமைதியான மூலையாகவோ அல்லது ஒரு தனி அறையாகவோ இருக்கலாம். கவனச்சிதறல்கள் இல்லாத மற்றும் உங்கள் பிள்ளை படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய பகுதியாக இது இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, உங்கள் பிள்ளைக்கு ஒரு வழக்கமான படிப்பு அட்டவணையை உருவாக்க உதவுங்கள். இது அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ஒவ்வொரு நாளும் அல்லது வாரமும் நேரத்தை ஒதுக்குவதை உறுதி செய்யும்.

    அடுத்து, உங்கள் பிள்ளையின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருங்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அவர்களை ஊக்குவித்து, அவர்கள் சிரமப்பட்டால் மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உதவுங்கள். குழந்தைகள் தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக உணரும்போது அவர்கள் செழித்து வளர்கிறார்கள், எனவே அவர்களின் படிப்பு முழுவதும் உங்கள் ஊக்கத்தை அவர்களுக்குக் காட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக, ஏராளமான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பள்ளியில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் திறனை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்.

    • உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம்.
    • பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம்.

    உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம். பொதுவாக டீன்ஏஜ் எனும் பதின் பருவமான 13 வயது 19 வயது வரை குழந்தைகள் வளர்ப்பில் சிக்கலான பருவமாகவே பார்க்கப்படுகிறது. குழந்தை பருவத்திற்கும் வளர் பருவத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் உடலுறுப்புகளின் வளர்ச்சி, பலவித ஹார்மோன்களின் சுரப்பு என ஏற்படும் உடல் மாற்றங்கள், நடத்தையிலும் உணர்ச்சிகர பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

    இந்த பதின் வயதில் குழந்தைகளை பெற்றோர்கள் சரியாக கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் காலம்காலமாக தொடர்கின்றன. பதின் வயதில் பெரும்பாலான குழந்தைகளிடம் கட்டுப்பாட்டை மீறிய எதிர்மறை நடத்தைகள் அதிகம் இருக்கும். இதற்கு உடலியல் மாற்றங்களே முக்கிய காரணம்.

    மேலும், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம். தனித்துவத்தை தேடும் நோக்கில் மற்றவர்களிடம் மரியாதையின்றி கோபப்பட்டு நடந்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். குறுகிய மனப்பான்மை, பெற்றோருடன் விவாதம் செய்வது. குடும்பத்தினருடன் பேசுவதைத் தவிர்ப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது, விதிமுறைகளை மீறுதல் என அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். உடலியல் மாற்றங்களால் நிகழும் நடத்தை மாற்றங்கள் இவை என்பதால் இது சாதாரணமானதுதான். இதிலும் ஒரு படி அதிகமாக நாம் முதலில் குறிப்பிட்ட எதிர்மறை பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் கவலைக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

    இதில் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரிடம் பெற்றோர் மனம்விட்டு பேசினாலே இந்த பிரச்னைகள் சரியாகி விடும். இரண்டாவது கட்டத்தில் உள்ள பதின் பருவத்தினரின் நடத்தைகளில் பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு துரிதமாக சாமர்த்தியமாக செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் ஆரோக்கியமற்ற நடத்தைகளால் பதின் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

    பதின் பருவத்தினருக்கு புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்தையும் ஒருவித பதற்றத்துடன் அணுகுவது, சிறிய பிரச்சினைகளை பெரிதாக்குவது, கூச்சல் போடுவது, முற்றிலும் பொறுமையின்றி இருப்பது என்று எல்லாம் இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சலினால் புகை, மது என தவறான பாதைகளில் செல்கின்றனர். இளைஞர்களை விட பதின் வயதினர்தான் போதைப்பொருள் பழக்கத்திற்கு இன்று அதிகம் அடிமையாகின்றனர்.

    போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு அப்போது இருப்பதில்லை. பதின் வயது மாற்றங்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் இருக்கும். மகன் அல்லது மகளின் உடல், மனதில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தீரக்க முடியும்.

    • சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.
    • தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள்.

    குழந்தைகள் பதின் பருவத்தை அடையும்போது தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் இதில் தலையிடும்போதே அவர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.

    அதன் பின்னர் அவர்களை கண்காணித்து தவறு இருந்தால் உடனடியாக சுட்டிக்காட்டவேண்டும். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.

    பதின் பருவத்தினர் கோபப்பட்டாலும் கத்தினாலும் பெற்றோர்களாகிய நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பொறுமையாகப் பேசி புரிய வைக்க வேண்டும்.

    பதின் வயதினருக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் தேவையானது அன்பும் ஆதரவும். அந்தவகையில் உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை இனிமேல் நீங்கள் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களுக்காக நேரம் செலவழித்து பேசுவது பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பதின் பருவத்தினர் நேர்மையாக இருக்க இது உதவும்.

    வீட்டின் முக்கிய முடிவுகளில் அவர்களை முன்னிலைப்படுத்தலாம். பதின் பருவத்தினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை பிசியாக வைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். நேரடியாக பல விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

    அதாவது படிப்பு மட்டுமின்றி, வேறு கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களின் திறமையை கண்டறிய முடியும். படிப்பு, கலைகளில் நேரம் செலவழிப்பதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற நேரம் கூட இருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முடியாத பட்சத்தில், இறுதியாக மன நல ஆலோசகரை அணுகலாம். சாதாரணமாக பதின் பருவத்தினரை ஏதாவது பொது இடத்திற்கு வெளியில் அழைத்து சென்று மனநல மருத்துவரிடம் பேச வைக்கலாம். பதின் வயதில் ஏற்படும் சில உணர்ச்சிகள், பெற்றோரிடம் சொல்ல முடியாதவையாக கூட இருக்கலாம்.

    பதின் பருவத்தில் வரும் மாற்றங்கள் சாதாரணமானவை என்றாலும் அந்த நேரத்தில் பதின்பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துகின்றோமோ அதன்படி அவர்களின் எதிர்கால குணங்கள், நடத்தைகள் உருவாகின்றன.

    • வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது.
    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.

    பல வீடுகளில் குழந்தைகளின் வீட்டு பாடங்களை பெற்றோர்கள் தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் செய்ய கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழக்கத்தை கற்பிக்கவும் தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றேனின் உதவியுடன் குழந்தை செய்யமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.

    ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பிள்பற்ற வேண்டும்.

    தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையை சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது.

    இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வார்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே..

    * குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    * குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிக என்று நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள், மாறாக, வீட்டுப்பாடத்தை, நீங்களே செய்யாதிர்கள். இது குழந்தைக்கு வீட்டுப் பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.

    * வீட்டுப்பாடம் என்பது குழந்தைகளுக்கு புதியதொரு விசயத்தை கற்றுக்கொடுக்க உதவுகிறது. அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு சுற்றுக்கொடுக்கள், வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக அவர்களிடம் உரையாடிக் கொண்டே இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்ய வில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' என்று கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

    * வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.

    • வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள். நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும்.

    அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள். அடிக்கடி ஆசிரியரை சத்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    • பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம்.
    • வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள்.

    குழந்தைகளுக்கு வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் உண்டு. அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் ஆழமாக பதிந்துவிடும். சில விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகலாம்.

    தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்காக பெற்றோரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட. சில கேள்விகளுக்கான பதில் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

    அதனை தெரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர குழந்தைகளுக்கு தவறான தகவல் கொடுக்கக்கூடாது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தக்கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து அந்த கேள்விக்கான பதிலை தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

    பெற்றோருக்கு தெரியாத சில விஷயங்கள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கலாம். அவர்களிடம் இருந்து அந்த விஷயத்தை பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் அதுபற்றி விவாதியுங்கள். நிறை, குறைகளை அவர்களுடைய மனம் நோகாமல் தெரியப்படுத்துங்கள்.

    எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள், நிறை குறைகளை பட்டியலிடும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் விமர்சன கண்ணோட்டத்துடன் எதையும் அணுகி நன்மை, தீமைகளை எளிதில் அறிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக வளர்வார்கள். எதையுமே அலசி ஆராய்ந்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள பழகிவிடுவார்கள்.

    பெரியவர்களுக்கு தோணாத சந்தேகங்கள் கூட குழந்தைகளுக்கு தோன்றலாம். அப்படி மனதில் உதிக்கும் சந்தேகங்களை நோட்டில் எழுதச் சொல்லுங்கள். அந்த கேள்விகளுக்கான பதிலை அவர்களையே தேடி கண்டுபிடிக்க சொல்லுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது சாத்தியம் என்பதால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். செல்போனை இதுபோன்ற பயனுள்ள தேடலுக்கு பயன்படுத்த கொடுங்கள்.

    வாசிப்பு பழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மறக்காதீர்கள். தினமும் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். அன்று படித்த பக்கங்களில் இருந்து கேள்வி கேளுங்கள். சரியாக பதில் அளித்தால் பரிசு வழங்கும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இது குழந்தைகளிடத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். படித்த விஷயங்களை சிந்தித்து பார்த்து அதன்படி செயல்படும் ஆர்வத்தை மேலோங்கச் செய்யும்.

    எந்த ஒரு விஷயத்தையும் சிந்தித்து செயல்படும் குழந்தைகளிடம் வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் எண்ணம் தோன்றாது. ஆழ்ந்து கற்று அதில் இருக்கும் தகவல்களை அறிந்து கொள்வார்கள். மதிப்பெண் பெறும் எந்திரமாக அல்லாமல் தாங்கள் கற்றறிந்த விஷயங்களை கொண்டு தங்களுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    • நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது.

    உங்கள் குழந்தையின் கற்றல், அறிவு திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான நினைவாற்றல் திறன் கொண்ட ஒரு குழந்தை பள்ளியில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். எனவே குழந்தையின் நினைவாற்றலை மேம்படுத்த உணவுமுறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் சில...

    * நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.

    * நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.

    * இலந்தைப்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

    * கருஞ்சீரகம் மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்துக்காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.

    * நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    * தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு ஸ்பூன் கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும்.

    * வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.

    * பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் வளரும்.

    * நினைவாற்றல் அதிகரிக்க செய்வதில் பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.

    • பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
    • குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.

    பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது

    உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.

    இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.

    மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.

    பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.

    குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்டும் மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள்.

    சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

    1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

    2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

    3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

    4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

    5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

    6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

    7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

    8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

    9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

    10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

    11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

    12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

    - இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

    மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையால் பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது.
    பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக்கல் பிரச்சனை இப்போது குழந்தைகளையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி  இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன. பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை.

    ‘‘நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப்போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறுகளிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

    அதை பெரும்பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க சில உணவுப்பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உப்பின் அளவை குறைப்பது முக்கியம். டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.

    பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது. கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.

    அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம். இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது..

    அறிகுறிகள்...

    சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தனமாக இருக்கக் கூடாது.

    உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால்தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும். கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், ‘லித்தோட்ரிப்ஸி’ முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. ‘யூரிட்ரோஸ்கோபி’ முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.
    குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.

    ‘`பொதுவாக அம்மாக்கள், தங்கள் வேலைக்கு என ஒரு அட்டவணை வைத்திருப்பார்கள். அதில் ஒன்றாக, மாலை நேரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரம் பிள்ளைகளின் ஹோம்வொர்க்குக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துக்குள் குழந்தைகளை வீட்டுப்பாடம் முடிக்க வைத்து, சீரியல், இரவு சமையல் என தங்களின் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்ல வேண்டுமே என்கிற அவசரம் அவர்களுக்கு இருக்கும்.

    ஆனால், உங்களின் அவசரத்துக்கு குழந்தைகளால் ஈடுகொடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஒரு மணி நேரமா சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் படிக்கல’ என்பது போன்ற உங்களின் கோபம், பதற்றம், கண்டிப்பு போன்றவை குழந்தைகளை அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைத்தையும் கற்க வைத்துவிடாது. ரைம்ஸையோ, எழுத்துக்களையோ, கணித எண்களையோ அவர்கள் கற்கும்வரை பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அதற்கு முதல்படியாக, உங்கள் அட்டவணையில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும்!

    படிக்க, விளையாட, சாப்பிட என குழந்தைகளை அந்தந்த நேரத்துக்கான செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்துங்கள். அதே நேரம், செல்போன், டி.வி, அவுட்டிங் என்பதை எல்லாம்விட உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அதிகப்படியான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி செய்யும்போது, வீட்டுப்பாடத்துக்கான நேர நிர்ணயத்துக்குள் முடிக்கவைக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போகும்.



    குழந்தைகளுக்குப் புரியும்படி பாடம் கற்றுக் கொடுப்பதற்கான வழி என்ன தெரியுமா? அதை அவர்களுக்குப் பிடிக்கும் விதங்களில் கற்றுக்கொடுப்பதுதான். அதற்கு உங்களின் கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்யுங்கள். ஒரு வாரமாக கஷ்டப்பட்டும், திட்டியும், அடித்தும் சொல்லிக்கொடுத்து அவர்கள் மனதில் பதியாத ரைம்ஸை, நடனம், கதை என உடல் அசைவுகளின் வாயிலாகவும், சந்தோஷமான மனநிலையிலும் சொல்லிக்கொடுங்கள்.

    அது நிச்சயம் அவர்கள் மனதில் பதிந்துவிடும். ‘சர்க்கிள் ஷேப்’பை கற்றுக்கொடுக்க, புத்தகத்தில் உள்ள வட்டத்தையே நம்பாமல் பூரி, வளையல், தட்டு என்று வாழ்க்கையில் இருந்து அவர்களுக்கு அந்த வடிவத்தைக் காட்டுங்கள். மேலும், கண்ணால் பார்த்து, வாய்விட்டுப் படித்து, எழுதிப் பார்த்து என இந்த மூன்று முறைகளில், எந்த முறையில் பாடம் கற்க உங்கள் குழந்தைக்கு விருப்பம் என்பதைத் தெரிந்து, அதற்கேற்ற வகையிலும் சொல்லிக் கொடுங்கள்.

    கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு சற்று கூடுதல் மெனக்கெடல் தேவைப்படும்தான். ஆனால், அது இயலாத காரியம் என்றில்லை. இவர்களுக்கு அடிப்படைகளை தெளிவுறப் புரியவைப்பது, மீண்டும் மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது, கூடுதல் பொறுமையுடன் கற்றுக் கொடுப்பது அவசியம்.

    சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் படிப்பில் அக்கறை வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கற்றுக் கொடுக்கும் பாடத்தின் அருமை உங்களுக்குப் பெரிதாக தெரியலாம். குழந்தைகளுக்கோ அது ஒரு வீட்டுப்பாடம்… அவ்வளவுதான். விளையாட்டு, பொழுதுபோக்குபோல அன்றாடமான ஒரு விஷயம்தான் அவர்களைப் பொறுத்தவரை படிப்பும். 
    ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை.
    பெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள்.

    பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.

    இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம். 
    ×