search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamphlet"

    • ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விழிப்புணர்வு.
    • கடைவீதி, பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் மாவட்ட தொழுநோய் அலுவலர் அறிவுறுத்தலின் படியும் இடையூர் சங்கேந்தி வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன மேற்பார்வையில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிழ்ச்சி பள்ளியின் தலைமை யாசிரியர் நித்தையன் தலைமையில் நடைபெற்றது.

    இடையூர் சங்கேந்தி மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், ஸ்பர்ஷ் தொழு நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் வருவதை தடுப்பது குறித்தும் விரிவாக விழிப்புணர்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் .மேலும் கடைவீதி, பேருந்து நிலையம் போன்றவற்றில் விழிப்புணர்வு துண்டுபிர சுரங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, செல்வசிதம்பரம், அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் பங்கேற்றனர்.

    • நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி கால்நடை மருத்துவமனைக்கு வந்தடைந்தது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி கால்நடை அரசு மருத்துவ மனை மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    நகராட்சிஆணையர் (பொ), கால்நடை மருத்துவர்கள் சந்திரன், இலக்கியா ராஜசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் வி.ஐ.ஏ. ஷிப் கேட்டரிங் காலேஜ் பிரைட் பீப்புள் சமுதாய கல்லூரி மாணவ- மாணவிகள், நகராட்சி ஊழியர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியானது நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கால்நடை மருத்துவ மனைக்கு வந்தடைந்தது.

    இதில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    • பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்
    • சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் சூசை நகர் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடியின் ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்துக் கூறினர்.

    மேலும் மத்திய அரசு செயல்படுத்திய சாதனை பட்டியலை நோட்டீஸ் மூலமாக வீடு வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் சுனாமி காலனி, லேபர் காலனி உட்பட சுற்றுவட்டார பகுதிக்கு பகுதிகளுக்கும் சென்று வழங்கினர்.

    இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும் தெற்கு மண்டல பார்வையாளருமான உமரி. சத்தியசீலன்,மாவட்டத் துணைத் தலைவர் தங்கம்,கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மண்டல் தலைவர் மாதவன், துணைத் தலைவர் பொய்சொல்லான், பொதுச் செயலாளர் மகேஷ்,மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் மாசாணம், ஒன்றிய மகளிர் அணி தலைவி செல்வி, லட்சுமி, காளீஸ்வரி மற்றும் ராஜ்குமார் தீபன் முனியசாமி முருகேசன் முத்துகிருஷ்ணன் செல்வம் மிக்கி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது
    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரின் ஆலோசனை படி 29-வது வார்டுக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு, மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் 14-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    • பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார்.
    • இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்கப் பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக பொதுக்கூட்டத்தை விளக்கியும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் தஞ்சையில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    பழைய பஸ் அருகில் உள்ள கடைகள், பேருந்துகளில் உள்ள மக்கள் , பொதுமக்களுக்கு வீதி வீதியாக நேரடியாக வழங்கினார். இந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம் என முழக்கங்கள் இட்டு அனைவருக்கும் வழங்கினார்.

    அன்னைத் தமிழை அரியணை ஏற்றி போற்றுவோம், ஆதிக்க இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், இந்தியாவின் பன்முகத் தன்மையை காப்போம் என்ன முழக்கங்கள் இட்டு வீதி வீதியாக சென்றனர். இந்த நிகழ்வில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ அரசு உதவி பெறும் பள்ளியில் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினர்.

    பள்ளி தலைமை ஆசிரியை சகோ.பவுலின் தெரசாள் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி ஊழியர் ஞானசேகரன், ஆசிரியை எஸ்தர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

    சமூகப்பணித்துறை பேராசிரியர் வனிதா பேசுகையில், கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது என பாராட்டி பேசினார்.

    சமூகப்பணித்துறை தலைவர் முத்துக்குமார் வழிகாட்டுதல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக பள்ளி ஆசிரியை ரோஸ்லின் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தை ஒருங்கிணைத்த கல்லூரி சமூகப்பணித்துறை மாணவ-மாணவிகளான ஜோ, புவனா, தேவி, அலெக்ஸ், அசோக், வனஜா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் தெரசாள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அரசு உதவி பெறும் பள்ளியான வடக்குவாசல் புனித ஜான் டி பிரிட்டோ பள்ளியில் ஏற்படுத்தியதன் மூலம் வல்லம் அடைக்கலமாதா கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    • விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வு.
    • துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வட்ட சட்டப்பணி குழு மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    முகாமில் பாபநாசம் மாவட்ட உரிமையல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி கலந்துகொண்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    பாபநாசம் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டுமென அறிவுத்தினார்.

    விழாவில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், தீயணைப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சாதனை துண்டு பிரசுரம் திருமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது.
    • மாவட்ட செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டில் தி.மு.க.வினர் வினியோகம் செய்தனர்.

    திருமங்கலம்

    தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சரித்திர சாதனையை பொது மக்களிடம் கொண்டு சென்றிடும் வகையில் பள்ளியில் பசியாறு எனும் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் நடந்தது.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களிடம் தி.மு.க.வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். திருமங்கலம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பொமக்களிடம் துண்டு பிரசுரங்களை நேரில் விநியோகம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன்,பொருளா ளர் பொடா.நாகரா ஜன், மாவட்ட அணி அமை ப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு,திருமங்கலம் நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர்,திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலை வர் ஆதவன்அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
    • இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்பது குறித்தும், போதை பொருளுக்கு அடிமையான ஒருவரை எவ்வாறு மீட்க வேண்டும் என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் ராஜா பேசினார்.

    பின்னர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டு பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழிஉட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பொறை யார், வைத்தீஸ்வ ரன்கோவில் ஆகிய பகுதிகளில்இயங்கி வரும் அச்சக உரிமையாள ர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பேசும்போது:-

    பிரிண்டிங் பிரஸ் வைக்க சட்ட உரிமம் பெற வேண்டும்.கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டுப் பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் போஸ்டர்கள் அச்சடிக்க வருபவர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை கைபேசி எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தார்.

    • பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர்.
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி காலில் சக்கரம் மாட்டி சென்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் விழிப்பு ணர்வு பேரணியை அட்லா ண்டிக் பன்னாட்டு பள்ளி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிலம்புச்செல்வன் தலைமையில் புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி சேதுசாலை, அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக நகரின் முக்கிய வீதியில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

    பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர். பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சாமியப்பன், நிமல் ராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அருகில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றினர். பேரணியில் மாணவர்கள் காலில் சக்கரம் மாட்டி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைபொது மக்களிடம் வழங்கினர். 

    அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் தட்டு மற்றும் கப்புகள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொள்முதல் செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாது என அத்தனூர் பேரூர் செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வாரச்சந்தைக்கு சென்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், சணல் பைகள், காகித கவர்கள், சில்வர் கண்ணாடி டம்ளர்கள், வாழை இலைகள், பாக்கு மட்டைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 
    ×