search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Organic farming"

    • அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.
    • அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அங்கக பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான பயிற்சி வடவல்லநாடு கிராமத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் தலைமை தாங்கி பேசினார். விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் சுரேஷ், விதை சான்று துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். அறிவியல் மைய பொருட்பறிஞர் முருகன் அங்கக பண்ணையத்தின் முக்கியத்துவம் குறித்தும், பயன்கள் குறித்தும், விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    வேளாண்மை துணை அலுவலர் பரமசிவம் வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் சிவபெருமாள் துறை செயல்பாடுகள் குறித்து கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி, மகேஸ்வரி, முத்துசங்கரி ஆகியோர் செய்து இருந்தனர். பயிற்சியில் வடவல்லநாடு கிராமத்தை சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர்.

    • பட்டதாரி வாலிபர் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.
    • மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கொண்ட பிரபல சுற்றுலாத்தலம். மலைவாசஸ்தலமாக இருக்கக்கூடிய கொடைக்கா னலுக்கு பல சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    மேலும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மட்டும் அல்லாது இங்கு விளையக்கூடிய மலைக் காய்கறிகளும் பிரபலம்.குறிப்பாக மலைப்பகுதியில் விளையக்கூடிய உருளை க்கிழங்கு, வெள்ளை பூண்டு பீன்ஸ், கேரட், கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் இங்கு பயிரிட ப்பட்டு வருகிறது.கொடைக்கானலைச்சுற்றி இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொடை க்கானல் அருகில் இருக்கக்கூடிய வடகவுஞ்சி கிராமத்தில் குத்தகைக்கு விவசாய நிலத்தை எடுத்து அதில் இயற்கையாக விவசாயம் செய்து வருகிறார் நந்தகுமார் என்ற இளைஞர். 26 வயதே ஆன இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். விவசாயம் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக வடகவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்த கைக்கு எடுத்து அதில் உருளைக்கிழங்கு, வெள்ளை ப்பூண்டு உள்ளிட்ட மலைக் காய்கறிகளை பயிரிட்டு இயற்கை முறையில் விவ சாயம் செய்து வருகிறார்.

    மேலும் அப்பகுதியில் இருக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை இடை த்தரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகிறார். மேலும் தினமும் விவசாயம் குறித்து சமூக வலைத்தளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்து வருவது இணையதள வாசிகள் இடையே பெரும் வர வேற்பை யும் பெற்றிருக்கிறது.இணையதளத்தையே முதலீடாக வைத்து வாட்ஸ் அப் குரூப் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு இடைத்த ரகர்கள் இன்றி இவர் நிலத்தில் விளையும் விளை பொருட்களை கூரியர் மூலமாக அனுப்பி வைக்கி றார்.

    மேலும் மலைத்தேன் உள்ளிட்டவை வாடிக்கை யாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிரு க்கிறது. நாடே விவசாயத்தை இழந்து வரும் இச்சூழலில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய இளம் விவசாயிகள் உருவாக வேண்டும் என்பதே ஒற்றைக் கருத்தாக உள்ளது.

    மேலும் பழமையை மறந்து வரும் இக்காலச் சூழலில் இந்த இளைஞர் நந்தகுமார் மண் வீடு, மண் சட்டியில் சமையல் செய்து பழமையை புதுமையாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

    • 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
    • மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது.

    காங்கயம் :

    உரம் விலை உயர்வு, உரங்களின் மானியம் குறைந்துள்ளது ஆகியவற்றாலும் மத்திய அரசு அலட்சியத்தாலும் உணவுப்பொருள் உற்பத்தி குறையும் பேராபத்து உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    பயிர்களுக்குத் தழைச்சத்து கொடுக்கும் யூரியாவைத் தவிர அனைத்து உரங்கள் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியமும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ எடை கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.1000-க்கு விற்கப்பட்டு வந்தது. இது ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மணிச்சத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் விலையும் அதிகரித்துள்ளது. நுண்ணூட்டுச் சத்துக்களைக் கொடுக்கும் உரங்களும் விலை உயர்வில் இருந்து தப்பிவிடவில்லை.இன்று காம்ப்ளக்ஸ் உரம் எங்கும் கிடைப்பதில்லை. நிலத்திற்கு தலைச்சத்து கொடுக்கும் யூரியாவைக் கூடுதலாகப் போட்டால் நோய் பெருமளவில் தாக்கும். விளைச்சல் வெகுவாகக் குறையும். சமையல் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி எண்ணையே பூர்த்தி செய்து வருகிறது. பருப்பு நுகர்வில் இது 60 சதவீதமாக உள்ளது.

    இந்தச் சூழ்நிலையில் உரம் விலையைக் கூட்டினால் இறக்குமதி அதிகரிக்கும். நாட்டிற்கு அந்நிய செலவாணி இழப்புக்கூடும். உணவுப் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்.இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 140 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில் உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவது என்பது பேராபத்து.

    இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உரப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தியதே ஆகும். இலங்கையிடமிருந்து இந்திய அரசு இந்த பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாமல் போனால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். 1947-ல் இந்தியாவின் மக்கள் தொகை 27 கோடி. மக்கள் தொகைப் பெருக்கத்தை அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

    இன்று நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உணவு கொடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு உரம் விலை உயர்வை அரசு கைவிட வேண்டும்.மேலும் உரங்களின் மீதான சரக்கு - சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும். படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறுவதே இந்தியாவை வல்லரசாக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×