search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organ donation"

    • மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
    • கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.

    அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

    • விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்
    • கல்லீரல், கிட்னி வேலூர் சி.எம்சி. ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை போளூர் ஆரணி ரோட்டில் உள்ள எட்டி வாடி அருகே பைக்கில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.

    அவருடைய இதயம் ஒரு கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும்.கல்லீரல், ஒரு கிட்னி, ஆகியவை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும் ஹயந்திகா என்ற மகளும், துஷ்யந்த் என்ற மகனும் உள்ளனர்.

    • பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என இந்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.), 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    சேலம் சரகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதாவது, இந்த உரிமத்தில், தமிழ்நாடு அரசு என்பதை டி.என் என ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    யூனியன் ஆப் இந்தியா என்பதை மாற்றி இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என்றும், இஸ்யூடு பை கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு என தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.

    உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இல்லையா? என்பதும், அவசர கால தொடர்பு எண் , உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம்பெற்றுள்ளது.

    அதுபோல் பதிவுச்சான்றிதழில் (ஆர்.சி) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும்,பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
    • 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    சென்னை:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

    இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்களான அந்த குழந்தையின் பெற்றோரும் அதற்கு உடன்பட்டனர்.

    இதையடுத்து உடல் உறுப்புகளை ஆபரேசன் செய்து அகற்றுவது தொடர்பாகவும், தானம் தேவைப்படுபவர்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப் பட்டது.

    மிகவும் சிறிய வயது குழந்தையின் உறுப்புகள் என்பதால் பொருத்தும் தகுதி உடையவர்கள் கிடைப்பதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

    இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

    அந்த 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

    • பைக் மோதியதில் மூளைச்சாவு
    • சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    மாணவன் மீது பைக் மோதல்

    இவருடைய மூத்த மகன் சுதீஷ் (வயது 11) அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தந்தையுடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக குடியான் குப்பம் மெயின் ரோட்டில் சுதீஷ் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

    சிறுவனின் இதயம் கல்லீரல் கிட்னி கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சிறுவன் சுதீசுக்கு கோகுல், ரோகித் என இரு சகோதரர்கள் உள்ளனர்.

    • மற்றவர்களின் நலனை பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம்.
    • மனித நேயத்திற்காக உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆரோக்கியமான வலுவான இந்தியா மாநாட்டை டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். சிக்கிம் ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் இந்த மாநாட்டிற்கு முன்னிலை வகித்தார். இந்தியாவில் உடல் உறுப்பு, கண் தானத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்தும் எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, நமது சொந்த நலன் மட்டுமல்ல, மற்றவர்களின் நலனையும் பற்றி சிந்திப்பதே நமது கலாச்சார பாரம்பரியம் என்று கூறினார். உறுப்பு தானம் பற்றிய பிரச்சினை அத்தகைய பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


    மனித நேயத்திற்காக தங்கள் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் முன்வருவதை ஊக்குவிக்க, மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்று மத்திய மந்திரி கேட்டுக்கொண்டார். உறுப்பு தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க அரசாலோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலோ மட்டும் சாத்தியமில்லை என்றும், அந்த இயக்கம் வெற்றிபெற அது மக்கள் இயக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    உடல் உறுப்பு, கண் தானம் குறித்த தேசிய மக்கள் இயக்கம் வெற்றி பெற உழைக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக் கொண்டார். உடல் உறுப்பு தான இயக்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதற்கு தமது அமைச்சகம் முழு மனதுடன் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
    • 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜாமணி. இவர்களுடைய மகன் கார்த்தி (வயது 24). இவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி இரவு திருவள்ளூரில் இருந்து வந்தவாசி நோக்கி தனது நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து, அவரது பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி கதறி அழுதது காண்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    • ரிஷாந்த் என்ற 16 மாத ஆண் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி :

    டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அக்குழந்தை அனுமதிக்கப்பட்டது. மூளையில் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 8 நாட்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில், கடந்த 24-ந் தேதி, அக்குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

    அதையடுத்து, குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர்கள் பேசி உறுப்பு தானம் அளிக்க சம்மதம் பெற்றனர். குழந்தையின் சிறுநீரகங்களும், கல்லீரலும் எடுக்கப்பட்டு, வேறு 2 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. அந்த குழந்தைகள் உயிர் பிழைத்தனர். மேலும், இதய வால்வுகளும், விழி வெண்படலமும் எடுக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேமித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மிக இளம் வயதில் உறுப்பு தானம் அளித்தவர் என்ற பெருமை, அந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது.

    • விபத்தில் மரணமடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    • கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்தார்

    பெரம்பலூர்:

    திருச்சி புத்தூர் பாத்திமா தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 65). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தார்.கடந்த மாதம் 30-ந்தேதி மகேந்திரன் தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழக்குடிகாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு திருமாந்துறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து கடந்த 10-ந்தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில், மகேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதில் அவரது கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்படுகிறது. மேற்கண்ட விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • கடந்த 23-ந்தேதி பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு விவசாயி படுகாயம் அடைந்தார்.
    • விவசாயியை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி புதுவசூர் பேங்க் நகரை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 66) விவசாயி.

    இவர் கடந்த 23-ந்தேதி அந்த பகுதியில் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரகாசத்திற்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்‌.

    இன்று காலை அவரது கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும், கண்கள் வேலூர் சி.எம்.சி.க்கும் தானமாக வழங்கப்பட்டது.

    பிரகாசத்திற்கு கலா என்ற மனைவி பாலாஜி, ராஜசேகரன் என்ற மகன்கள் உள்ளனர்.

    அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தேசிய உடல் உறுப்பு தான தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல டாக்டர் மனோஜ் குமார் சாஹு கலந்து கொண்டு இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவது குறித்து பேசினார்.

    அப்போது அவர் “அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர் “ 1.5 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவை என்ற நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 5,000 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடக்கிறது. அதே போல் சுமார் 2 லட்சம் பேர் கல்லீரல் தானம் கிடைக்காததால் இறக்கின்றனர்” என்றார்.

    மேலும் இந்தியாவில் உடல் உறுப்பு தான விகிதம் 0.01 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
    பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணைய தளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம்.

    தமிழக அரசு

    தொடர்பில்லா சேவைகளை பெறவும், ஆதாரை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.



    ×