search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online shopping"

    • அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்துமே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பெண்களை விட ஆண்களே அதிகம் செலவு செய்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். சார்பில் நாடு முழுவதும் 25 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்களின்படி ஆண்கள் சராசரியாக ரூ.2,484 ஆன்லைனில் ஷாப்பிங் செய்துள்ளனர். ஆனால் பெண்களோ ரூ.1830 மட்டும் செலவு செய்கிறார்களாம். இதன்மூலம் பெண்களை விட ஆண்கள் 36 சதவீதம் அதிகம் ஷாப்பிங் செய்வதாக 'டிஜிட்டல் சேனல்கள் மற்றும் நுகர்வோர் தி இந்தியன் பெர்ஸ்பெக்டிவ்' அறிக்கை தெரிவித்துள்ளது.

    அறிக்கையின்படி 47 சதவீத ஆண்களும், 58 சதவீத பெண்களும் பேஷன் ஆடைகளை வாங்கி உள்ளனர். அதே நேரத்தில் 23 சதவீத ஆண்கள் மற்றும் 16 சதவீத பெண்கள் ஆன்லைன் மூலம் மின்னணு சாதனங்களை ஷாப்பிங் செய்துள்ளனர். ஜெய்ப்பூர், லக்னோ, நாக்ப்பூர், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்கள் ஆன்லைனில் பேஷன் ஆடைகளுக்கு 63 சதவீதம் அதிகமாகவும், மின்னணு சாதனங்களுக்கு 21 சதவீதம் அதிகமாகவும் செலவழிப்பது தெரிய வந்துள்ளது.

    • எதையாவது ஆர்டர் செய்கிறார்கள்.
    • தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள்.

    இன்று பருப்பு முதல் லேப்டாப் வரை அனைத்தையும் ஆன்லைன் ஷாப்பிங்கிலேயே வாங்கிக்கொள்கிறோம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மாதத்துக்கு இரண்டு முறையாவது பெரும் தள்ளுபடியில் பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கின்றன. தள்ளுபடி போதையில் மயங்கி சிலர் தேவையே இல்லையென்றாலும் எதையாவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

    இப்படி மாதம் ஒரு ஷாப்பிங் செய்து கொண்டிருந்தவர்கள், வாரம் ஒருமுறைக்கு மாறி, கடைசியில் தினமும் எதையாவது ஆர்டர் செய்கிறார்கள். தள்ளுபடிக்காக காத்திருக்கிறார்கள். பொருட்களை வாங்கவில்லையென்றாலும் கூட ஷாப்பிங் தளத்துக்குச் செல்வதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்கின்றனர்.

    தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது இப்படி அந்த இணையதளங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இந்த மனநிலையை (buying-shopping disorder) ஒருவிதமான குறைபாடு என்று எச்சரிக்கிறது ஹனோவர் மெடிக்கல் ஸ்கூல். இதனால் குடும்பத்தின் அமைதி குலைந்து பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை யும் செய்கிறது.

    • ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது.
    • உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது.

    பொருட்களை ஒவ்வொன்றாக வாங்க அலைந்து திரிந்த காலம் போய், இன்று செல்போனில் விரல் நுனியை உரசினால் பாடம் செய்த கறிவேப்பிலை, புற்று மண் முதல் படம் பார்க்கும் டி.வி., கணினி வரை அனைத்து பொருட்களும் வீடு தேடி வந்து சேருகிறது.

    ஆன்லைன் ஷாப்பிங்

    ஆம். ஆன்லைன் ஷாப்பிங் உலகம் நம்மை கபளீகரம் செய்து விட்டது. கடை கடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கிய நாம் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆர்டர் செய்யலாம். நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருள் உங்களுக்கு கிடைத்து விடுகிறது. ஆர்டர் செய்த பொருள் தாமதமாக கிடைத்தாலும் பெரிதுபடுத்துவதில்லை. ஆன்லைன் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகை, ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு பொருள் இலவசம், இலவச டெலிவரி என்று பொருட்களை வாங்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. எதற்கு அலைந்து திரிந்து கடைக்கு சென்று வாங்க வேண்டும்.போக்குவரத்து செலவு மிச்சம். அதிகபட்ச சலுகையில் விலை சற்று குறைவாக வேண்டிய பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். அலட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள் .

    மருந்து முதல் விருந்து வைக்கும் பொருட்கள் வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைத்தாலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வருவது, பழுதான, உடைந்த செயல்படாத பொருட்கள் வருவது என்பது அடிக்கடி நிகழ்கிறது. இந்த பஞ்சாயத்துகள் கூட பல நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு சென்று விடுகின்றன. அதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கிறது.

    பிரபலமாகி மக்களை ஆட்கொண்டு வரும் ஆன்லைன் பற்றி பலருக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வாருங்கள் அதைப்பற்றி இங்கே காண்போம்.

    ஆன்லைனில் 'புதிதாக சந்தையில் என்ன வந்திருக்கிறது'என்று தேடும்போது அது தற்போது உங்களுக்கு கட்டாயம் தேவையா? என்று யோசித்து விட்டு 'ஆம்' என்றால் மட்டுமே ஆர்டர் போடுங்கள். உங்களது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து வைக்க வேண்டாம். ஏதாவது ஒரு பொருளை வாங்க நீங்கள் ஆசைப்படும்போது கிரெடிட்,டெபிட் கார்டு குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து வைத்து இருந்தால் உடனே ஆர்டர் போட்டுவிடுவீர்கள். அதையே தேடி எடுத்து பதிவேற்றம் செய்வதற்கான நேரத்தில் தேவையற்ற பொருளை வாங்கலாமா? என யோசிக்க அவகாசம் கிடைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பல நிறுவனங்கள் தனது பொருளை விற்பனை செய்கின்றன.

    குறுந்தகவல் அவசியம்

    நீங்கள் வாங்கும் பொருளை விற்பனை செய்வது யார் என்பதிலும் கவனமாயிருங்கள். அவர்களை பற்றிய கருத்து பதிவுகளை கவனிப்பது முக்கியம். ஆன்லைனில் நிறைய சலுகை அறிவிப்பார்கள். விலை குறைவாக இருந்தாலும், அது உங்கள் கையில் கிடைக்கும் வரை ஆகும் செலவுகளை ஒப்பீடு செய்யுங்கள்.பொருளை பார்த்து விலை குறைவு என்றவுடன், 'அந்த பொருளை மற்றவர் வாங்கிவிட்டால்?' என்கிற வேகத்தில் ஆர்டர் போட வேண்டாம். அது பலரால் பயன்படுத்தப்பட்ட பொருளா? அது சிறப்பானதா? என்று பாருங்கள். பொருளை பற்றி உள்ள விளக்கத்தை முழுமையாக படிக்காமல் ஆர்டர் போடவே வேண்டாம். ஆர்டர் செய்யும்முன், பொருட்கள் கிடைக்கும் காலத்தோடு வர்த்தகம் நடைபெறும் நாட்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பொருளை தருவார்களா? என்று கேட்டறிந்து கொள்வது நல்லது. ஆன்லைனில் ஆர்டர் போட்டவுடன் வரும் மெயில் மற்றும் செல்போன் குறுந்தகவல்களை பத்திரப்படுத்த வேண்டும். பொருள் கிடைப்பதில் குளறுபடி ஏற்பட்டால், இந்த தகவல்களை கொண்டே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்த குறுந்தகவல் இல்லாவிட்டால், எந்த நிவாரணத்தையும் பெற முடியாது.

    தவறாமல் படிக்கவும்

    செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் என எதை நீங்கள் ஆர்டர் செய்திருந்தாலும் பார்சல் கொண்டு வருபவர்களை கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதுதானா? என்பதை சோதித்து பார்த்துவிட்டு, பெற்ற பிறகே அவர்களை அனுப்பவும்.நீங்கள் வாங்கிய பொருள் எலக்ட்ரானிக் பொருளாக இருப்பின், வாங்கியவுடன் அது செயல்படுகிறதா? என்பதை சோதிக்கவும். அதில் பிரச்சினை இருந்தால் உடனடியாக மாற்றி கொள்ள முடியும்.நேரில் பொருள் வாங்கும்போது ஆராய்ந்து வாங்குகிறோம். ஆன்லைனில் வாங்கும்போது அதற்கான வாய்ப்பில்லை. ஒரு பொருளை ஆர்டர் செய்யும்முன் அதை பற்றிய விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். நேரில் வாங்கும்போது அடுத்தவரின் ஆலோசனை கேட்போம். ஆன்லைனில் வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ரேட்டிங் என்ன, ஏற்கெனவே பொருள் வாங்கியவர்களின் அனுபவங்களையும் தவறாமல் படிக்க வேண்டும்.

    ரிட்டன் பாலிசி

    நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன்னால் ஷாப்பிங் செய்யும் இணையதளத்திற்கு சென்று பொருட்களுக்கான தொகையை திரும்ப பெறும் ரிட்டன் பாலிசி, ரீஃபண்ட் பாலிசி போன்ற விவரங்களை முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ரிட்டன் பாலிசி இருந்தால் அதன் விதிமுறைகள் அனைத்தையும் படித்து பார்க்க வேண்டும். எத்தனை நாட்களில் பொருட்கள் ரிட்டன் செய்யப்படும், எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, ரிட்டன் செய்ய வேண்டிய பொருட்களை வாங்க உங்கள் வீட்டுக்கே வருவார்களா அல்லது நீங்கள்தான் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டுமா? என்பதையும் பார்க்க வேண்டும்.நாம் ஒரு பொருளை கேட்க, நமக்கு அனுப்பப்படும் பொருள் வேறாக இருக்கலாம். ஆர்டர் செய்து பெறும் பொருள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கலாம். ஆர்டர் செய்த பொருள் வராமல்கூட போகலாம்.

    அதனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோரே, சற்றும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அவ்வாறு இருந்துவிட்டால் உங்கள் பணத்துக்கு உத்தரவாதம் கிடையாது. அதனால் மிகவும் கவனம் தேவை.

    கேஷ்பேக் சலுகை

    ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அப்பொருளுக்கு கேரண்டி - வாரண்டி என்ன? என்ற விவரங்களை பார்க்க வேண்டும். பொருளுக்கு ஏதாவது தள்ளுபடி வழங்கப்படுகிறதா? அதே பொருளுக்கு வேறு தளங்களில் அதிக தள்ளுபடி கிடைக்குமா? என்று பார்க்க வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கேஷ்பேக் போன்ற சலுகைகளையும் நீங்கள் பெற முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வாங்கும் பொருளை திரும்ப வழங்குவதாக இருந்தால் கேஷ்பேக் போன்ற சலுகைகள் திரும்ப பெறப்படுமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தவணை முறை ஆபத்தா?

    ஆன்லைனில் வாங்க விரும்பும் பொருள் அதிக விலை கொண்டதாக இருந்தால் பெரும்பாலும் தவணை (ஈ.எம்.ஐ.) முறையில் வாங்குவார்கள். இப்போதெல்லாம் குறைந்த விலை கொண்ட பொருளாக இருந்தால் கூட தவணை முறையில் வாங்க நினைக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறைந்த பணம் செலுத்தினால் போதும் என்பது உங்களுக்கு சுலபமாக தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் நீங்கள் பொருளின் அசல் விலையை விட அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, நீங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும்போது, கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வாங்கினால், அதற்கு வட்டி பிடிக்கப்படுகிறதா, எவ்வளவு வட்டி பிடிக்கப்படுகிறது என்ற விவரத்தை எல்லாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும்.பொருட்களை ஆர்டர் செய்யும்போது அதை டெலிவரி செய்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுமா என்பதை நீங்கள் ஆர்டர் செய்யும்போதே கட்டாயம் பார்க்க வேண்டும்.

    பொதுவாக, அதிக விலை கொண்ட பொருட்கள் வாங்கும்போது டெலிவரி கட்டணம் இருக்காது அல்லது குறைவாக இருக்கும். ஆனால் மிக நீண்ட தூரத்திலிருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டாலோ அல்லது பொருளின் பாதுகாப்பு தன்மையை பொறுத்து டெலிவரி கட்டணம் வசூலிக்கப்படும். எனவே பொருளின் விலை மற்றும் டெலிவரி கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு அது கடையில் விற்பனை செய்யும் விலையை விட மிக அதிகமாக இருந்தால் நீங்கள் கடையில் அப்பொருளை வாங்குவதே சிறந்தது.

    • இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்துள்ளனர்.
    • முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

    பெங்களூரு:

    பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தீபாவளிக்கு பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கினர். அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றினை ஆர்டர் செய்ய அவருக்கு வந்த பொருள்தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

    கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் வாங்குவதற்காக ஆர்டர் செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆர்வத்துடன் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.

    மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிஷன்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்துள்ளனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். 

    • ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.
    • நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம்.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தையை நிறைத்து கொண்டிருக்கின்றன. நம் வீடு மற்றும் அலுவலக வேலை நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன பொருட்கள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. நாம் சந்தையை ஒவ்வொரு நாளும் கவனிக்க வேண்டும். போனிலும் சந்தை உள்ளது, வீட்டின் அருகிலும் சந்தை உள்ளது.

    நடை பயிற்சி, தொலைதூர பயணம், மலையேறுதல், கடற்கரை செல்லுதல் போன்ற பழக்கத்தால் மன மாற்றத்தை அடைகிறோம். ஷாப்பிங் செய்வதும் அத்தகைய மன மாற்றத்தை தரக்கூடிய ஒரு பழக்கம் தான். இணைய தளம், கடை வீதி, ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில் புதிய பொருட்களை பார்ப்பதால் இருக்கமான மனம் லேசாகிறது நம் அறிவும் விரிவடைகிறது. வாரத்தின் 6 நாட்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பார்த்த பொருட்களையே பார்த்துப் பார்த்து மனம் சலித்திருக்கும். ஒரு நாள் குடும்பத்தோடு ஷாப்பிங் சென்று, மெதுவாக நடந்து, புதிய புதிய பொருட்களை கண்டு, அதன் பயன்பாட்டை அறிந்து, வாங்கி, பயன்படுத்தி மகிழும் கலை தான் ஷாப்பிங் ஆகும்.

    ஷாப்பிங் செய்வதற்கு முன் நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும். அந்த பொருளை வாங்குவதற்கு முன் அந்த பொருள் புதிய பரிமாணத்தில் வந்துள்ளதா என்று சந்தையில் தேடிப்பார்க்க வேண்டும். அப்படி வந்திருந்தால் விலை கூடுதலாக இருந்தாலும் வாங்கலாம். காரணம் பழைய பொருளை விட புதிய நவீன பொருள் நம் வேலை நேரத்தை கூடுதலாக மிச்சப்படுத்தும். இந்த தேடுதலை நீங்கள் முழுமனதோடு செய்து பொருளை வாங்கும் போது மன நிறைவு உண்டாகும். ஷாப்பிங் செய்வதும் கலை தான் என்பதை உணரமுடியும்.

    மனமும் அறிவும் சூழ்நிலை காரணமாக மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றன. வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதற்கும் திரையரங்கு சென்று படம் பார்ப்பதற்கும்; வீட்டில் குடும்பத்தினரோடு உணவு உண்பதற்கும் உணவு விடுதி சென்று உணவு உண்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. புதிய சூழல்; புதிய மனிதர்கள்; புது வகையான உணவுகள்; குடும்பத்தினர் முகத்தில் புது வகை மகிழ்ச்சியை காண்பது, அவர்களுடனான இணக்கம் உயர்வது; மற்ற மனிதர்களிடம் இருக்கும் நல்ல பண்பை காண்பது, கற்றுக்கொள்வது; இதனால் மனம் புத்துணர்வு பெறுகிறது, புரிந்து கொள்ளும் தன்மையில் சிறப்பான மாற்றம் பெறுகிறது, தன்னம்பிக்கை அடைகிறது. இவை கண்ணுக்கு தெரியாத மனம் செய்யும் ஷாப்பிங். வாழ்வதில் விருப்பத்தை அதிகரிக்க நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் ஆகும்.

    பாட்டி காலத்தில் அரிசி பானை, மரப்பெட்டி போன்றவற்றில் பணத்தை சேமித்தார்கள். அதற்கு வட்டி இல்லை; பணமதிப்பும் குறைந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்று நிதித்துறை சிறப்பாக வளர்ந்து உள்ளது. ஒவ்வொரு நாளும் பண மதிப்பை கூட்டும் பல நவீன சேமிப்பு திட்டங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. எதிர்கால ஒய்வு காலத்துக்கு பயன்படும் நவீன சேமிப்பு திட்டங்களையும் ஷாப்பிங் செய்யலாம். சேமிப்பு என்பதும் பயன்படும் ஒரு வகை பொருள் தான். ஷாப்பிங் என்றால் நிகழ்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வது மட்டும் அல்ல எதிர்காலத்துக்கு பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு செலவு செய்வதும் ஷாப்பிங் தான்.

    பணம் ஈட்டுவது நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள தான். மேலே கூறிய கருத்துக்களை மனதில் கொண்டு நவீன வாழ்க்கைக்கான ஷாப்பிங் செய்யுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.

    • உங்களது அந்தரங்க தருணங்களை ஹேக்கர்கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
    • ‘பாஸ்வேர்ட்', ‘ ‘கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    பெண்கள், இளைஞர்கள் போன்றோர் அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கியிருந்தேன். நமது மாணவச் செல்வங்கள் 'ஆன்லைன்' விளையாட்டுக்களில் மூழ்கினால், அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும் ஆபத்து குறித்து கவலையோடு பகிர்ந்திருந்தேன். புதிது, புதிதாக முளைக்கும் கொரோனா வைரஸ் 'வேரியண்ட்'டுகளைப் போன்று, 'சைபர்' கிரிமினல்கள் புதுப்புது தொழில்நுட்ப அவதாரம் எடுப்பதால், 'சைபர்' மோசடிகள் குறித்து அனைவரும் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்திருந்தேன்.

    புகைப்படங்களை 'மார்பிங்' செய்வதற்கான செயலிகள் எளிதாக கிடைப்பதால், முன்னாள் நண்பர்கள் கூட 'மார்பிங்' 'பிளாக்மெயிலர்'களாக மாறி சில பெண்களை வதைப்பது, வளைப்பது பற்றி விளக்கியிருந்தேன். உங்களது செல்போன் அல்லது கணினி கேமராக்களையே பயன்படுத்தி, உங்களது அந்தரங்க தருணங்களை 'ஹேக்கர்'கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து எச்சரித்திருந்தேன். டி.ஜி.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்களின் பெயர்களில், அவர்களது புகைப்படங்களுடன் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் பற்றி எச்சரித்திருந்தேன். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி செயல்படும் பல 'டுபாக்கூர்' கடன் செயலிகள், பயனர்களை 'பிளாக்மெயிலிங்' செய்து அநியாய வட்டி வசூலிப்பது பற்றி விரிவான தகவல்களுடன் பதிவிட்டிருந்தேன்.

    ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்கு சிறு வெற்றிகள் தந்து ஆசைகாட்டும் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் உங்களுடன் ஆடுவது தனிநபர் அல்ல, ஆயிரம் பேரின் மூளை வலிமைகொண்ட 'கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பதால், இறுதியில் தோற்பதும் ஓட்டாண்டி ஆகப்போவதும் நீங்கள்தான்- ஏமாறாதீர்கள் என்று விளக்கி இருந்தேன். 'பிட்காயின்' போன்ற 'கிரிப்டோ கரன்சிகளை' எலான் மஸ்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் ஆதரித்தாலும்கூட, எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தமுடியாத 'கிரிப்டோ கரன்சி'களில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏமாறவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். அழகிய பெண்களின் புகைப்படங்களுடன் சில 'ஆன்லைன்' திருமண தகவல் மையங்கள் விதவிதமாக மோசடி செய்வது குறித்த பல தகவல்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். பிரபல வங்கிகளின் தலைமையகத்திலிருந்து பேசுவதுபோல் பேசி, உங்களது வங்கி விவரங்களை கேட்டுவாங்கி கொள்ளையடிக்கும் 'சைபர்' கிரிமினல்களைப் பற்றி பல சம்பவங்களுடன் விளக்கி இருந்தேன்.

    நல்ல சம்பளத்துடன் வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி, 'அட்வான்ஸ்' தொகை கட்டச்சொல்லி பணம்பறிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, நமது கம்ப்யூட்டர்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்கான தொலைநிலை அணுகல் செயலிகளை தவறாகப் பயன்படுத்தி, நமது கம்ப்யூட்டரில் உள்ள வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடும் 'சைபர்' கிரிமினல்கள் பற்றி எச்சரித்திருந்தேன்.

    'வாட்ஸ் அப்' போன்ற தளங்கள் மூலமாக, முன்பின் தெரியாத யாராவது ஒருவர் ' கியூ.ஆர்' குறியீடுகளை அனுப்பி அதனை 'ஸ்கேன்' செய்யுமாறு கேட்டால் திட்டவட்டமாக மறுத்துவிடுங்கள் என்று தெரிவித்திருந்தேன். 'டேட்டிங்' செயலிகள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப்பார்த்து இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், இந்த 'டேட்டிங்' செயலிகளை பின்தொடர்ந்துவரும் 'பிளாக்மெயில்' கும்பல்களிடம் உங்கள் பணத்தையும் மானம், மரியாதையையும் இழக்காதீர்கள் என்று எச்சரித்திருந்தேன்.

    ஆபாசப் படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர்' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும் போலியான 'பாப்-அப்' விளம்பரங்கள் மூலமாக நடைபெறும் 'பிளாக்மெயில்' மோசடிபற்றி விளக்கமாக குறிப்பிட்டிருந்தேன். 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யூபிஐ' 'பேமெண்ட்' செயலிகளை பயன்படுத்தி 'சைபர்' கிரிமினல்கள் பணம் பறிப்பது பற்றி சம்பவங்களுடன் விளக்கியிருந்தேன். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', ' 'கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருந்தேன். 'சைபர்' கிரிமினல்களிடம் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களின் வழக்குகளை காவல்துறைப் பணியின்போது கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், இனியாவது மக்கள் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்த தொடரை எழுத முன்வந்தேன். இந்த தொடர், மிகச்சிறந்த எச்சரிக்கை உணர்வை விதைத்திருப்பதாக பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

    முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி

    • எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள்.
    • உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்கள் ஏமாந்து போவதற்கு மிக முக்கியமான காரணங்கள், அறியாமை, பேராசை, பயம் அல்லது பதட்டம் ஆகியவை தான் என்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிஜிட்டல் துறை பொது மேலாளர், லட்சுமி வெங்கடேஷ். மேலும் அவர்கள் கூறியது பின்வருமாறு:-

    நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்போது அதன் அடிப்படை என்ன, எந்தெந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், என்பது அவசியம்.

    உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்து உள்ளது, உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் அனுப்பியுள்ள இணைப்பை நீங்கள் கிளிக் செய்து மேற்கொண்டு நாங்கள் கேட்கும் விவரங்களை கொடுத்தால், உங்களுக்கு அந்த பரிசு கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அல்லது வங்கியில் இருந்து அழைப்பது போலவும் அல்லது எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்டில் இருந்து அழைப்பது போலவோ அழைத்து நீங்கள் இந்த விவரங்களை உடனடியாக கொடுக்காவிட்டால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் அல்லது உங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்படும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து நம்மை பயமுறுத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் நாம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும்.

    டெபிட் கார்டின் பின்னாலேயே அதற்கு உண்டான பாஸ்வேர்டு என்ன என்று நாம் எழுதி வைக்கிறோம் அல்லது மொபைல் போனில் விபரங்களை சேமித்து வைக்கிறோம் அல்லது நண்பர்கள் யாருக்காவது நாம் வாட்ஸப் மூலமாக அனுப்புகிறோம். இது எல்லாமே தவறு. உங்கள் மொபைல் காணாமல் போய் தீயவர்கள் கைகளில் கிடைத்தால் இந்த விவரங்களை அவர்கள் மிகவும் எளிதாக தவறான வழியில் பிரயோகித்து உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து எல்லா பணத்தையும் எடுக்க முடியும்.

    முக்கியமாக பொதுவெளியில், ரயில்வே ஸ்டேஷன் அல்லது பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வைபை உபயோகித்து எந்த விதமான பணப்பரிவினை செய்யக்கூடாது. நீங்கள் அங்கே பொது வெளியில் உள்ள வைபை உபயோகித்து பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்கலாம். பொதுவெளியில் உள்ள வைபை மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஏனென்றால் பொது வெளியில் உங்களுடைய வங்கி கணக்கின் சம்பந்தப்பட்ட விவரங்கள் சேகரிக்கப் படலாம்.

    ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் போதோ நீங்கள் ஒரு புதிய இடத்துக்கு சென்றாலோ அல்லது சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், அந்த இடங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை க்ளோனிங் செய்யக்கூடிய ஸ்கின்னிங் என்று சொல்லப்படக்கூடிய ஒரு கருவியை பொருத்தி உங்களுடைய கார்டு விவரங்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே நீங்கள் சுற்றுலா தலங்களில் எப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு உபயோகிக்கிறீர்களோ உடனடியாக அதனுடைய பின் நம்பரை நீங்கள் மாற்றிவிட்டால் உங்களுக்கு பாதுகாப்பு அதிகமாகும்.

    உங்கள் கணக்கில் ஏதேனும் தவறான பரிவர்த்தனை யாராவது செய்தால் உங்களுக்கு எஸ்எம்எஸ் வங்கியில் இருந்து அனுப்பப்படும். நீங்கள் எஸ்எம்எஸ் வசதியை டிஆக்டிவேட் செய்து வைத்திருப்பீர்களே ஆனால் உங்களுக்கு அந்த எஸ்எம்எஸ் கிடைக்காது. பணம் பறிபோன பின்னர்தான் உங்களுக்கு அந்த விஷயம் தெரிய வரும். எனவே உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    நீங்கள் பணம் பெறுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் யு பி ஐ பின் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் பணம் பெறுவதற்காக இதை கேட்பார்கள் அதை கொடுத்தவுடன் உங்களுடைய பணம் பறிபோய்விடும்.

    உங்களுடைய மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கையே நீங்கள் முடக்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கணக்கில் எந்த பரிவர்த்தனம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உங்களுடைய இமெயில் முகவரி ஏதாவது இருந்தால் அந்த ஈமெயில் முகவரிக்கான பாஸ்வேர்டு உடனடியாக மாற்றிவிடவும்.

    எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள். உங்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்காமல் எந்த வங்கியும் உங்களுடைய கணக்குகளையும் உங்களுடைய டெபிட் கார்டை முடக்க முடியாது.

    நீங்கள் டிஜிட்டல் வழியாக ஏமாற்றப்படும் போது உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அது தேசிய சைபர் கிரைம் தொடரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எவ்வளவு விரைவில் அந்த பணம் எங்கிருந்து எந்த கணக்கு சென்று அங்கிருந்து வேறு எந்த கணக்கு சென்றாலும் அந்த தொடரில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக அரசாங்கமே முடக்கிவிடும். என்று கூறி முடித்தார்.

    ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் புகார் அளித்ததையொட்டி மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #CentralGovernment #OnlineShopping
    புதுடெல்லி :

    ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் பலர் அரசுக்கு புகார் செய்தனர்.

    இதன் எதிரொலியாக ‘பிளிப்கார்டு’, ‘அமேசான்’ போன்ற ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



    அதன்படி, ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. சில உற்பத்தி பொருட்களை ஆன்-லைனில் மட்டுமே விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

    ஒரு கம்பெனி ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுடனோ, அந்த நிறுவனங்களின் இதர குழுக்களுடனோ பங்குதாரராக இருந்தால் அந்த கம்பெனியின் உற்பத்தி பொருட்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. #CentralGovernment #OnlineShopping

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆன் லைனில் செல்போன் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு செங்கல் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #OnlineShopping #SwankyNewMobile
    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் கஜானன் காரத். இவர் செல்போன் வாங்குவதற்காக பிரபல  ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் கடந்த 9-ம் தேதி முன்பதிவு செய்தார். செல்போனுக்கான தொகை ரூ.9,134-ம் ஆன் லைன் மூலமாகவே செலுத்தினார்.

    இதற்கிடையே, கடந்த 14-ம் தேதி அந்த ஆன் லைன் நிறுவனத்திடம் இருந்து கஜானன் காரத்துக்கு பார்சல் வந்தது. புதிய செல்போனை எதிர்பார்த்து பார்சலை திறந்தவர் அதிர்ச்சி அடைந்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் போனுக்கு பதிலாக செங்கல் மட்டுமே இருந்தது.



    இதுகுறித்து கஜானன் கராத் பார்சல் கொண்டு வந்த கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவர்களோ, பார்சல் விநியோகிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களுடையது. அதில் இருக்கும் பொருட்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டனர்.

    இதனால் மனம் நொந்து போன கஜானன் காரத், இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன் லைனில் செல்போன் முன்பதிவு செய்தவருக்கு செங்கல் அனுப்பி வைத்த விவகாரம் அவுரங்காபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #OnlineShopping #SwankyNewMobile
    ×