என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NR Congress"
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம் தொகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி குறைக்கவில்லை. தொழிற்சாலைகள் கொண்டு வருவேன், விவசாயத்தை மேம்படுத்துவேன், அரசு ஊழியர் சம்பளம் உயர்த்துவேன் என மோடி கூறினார். இதில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை.
பா.ஜனதாவின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது.
காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பொது, அரசியல் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவர். எதிர்கட்சி வேட்பாளருக்கு என்ன அனுபவம் உள்ளது? பணம் இருப்பது மட்டும்தான் அனுபவம். பணம் இருந்தால் என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் உழைப்பவர்களுக்கும் சீட் கிடைக்காது. பணம் மட்டும்தான் அவரிடம் உள்ளது. ரங்கசாமி பண அரசியல் செய்கிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்த வைத்திலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வெற்றி பெற்றால் மத்திய அரசிடம் கேட்டு புதுவைக்கு பல புதிய திட்டங்களை கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின்போது துணைத்தலைவர் பெத்த பெருமாள், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் கே.எஸ்.பி. ரமேஷ், தி.மு.க. தங்கவேலு, இந்தியகம்யூனிஸ்டு நாரா.கலைநாதன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மதி.மு.க. கபிரியேல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சீவி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.
அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் எதிர் தரப்பில் அ.தி.மு.கவின் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. புதுவையை பொறுத்தவரை தமிழகத்தில் அமையும் கூட்டணியே இங்கேயும் தொடரும்.
இதன்படி புதுவையிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அதே நேரத்தில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுவையில் மாநில கட்சியாக திகழ்கிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது.
அந்த கட்சியின் வேட்பாளர்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.
இதனால் காங்கிரசுக்கு எதிராக தமிழகத்தில் உருவாகும் அ.தி.மு..க, பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் பேச்சு உள்ளது. இதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நேற்று உறுதி செய்தார்.
கட்சியின் ஆண்டு விழாவையொட்டி நிருபர்களை சந்தித்த ரங்கசாமி, அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார்.
அதோடு புதுவை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார். வழக்கமாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பொறுத்தவரை அதிரடியாக எந்த முடிவையும் அறிவிக்க மாட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இறுதிவரை யாருடன் கூட்டணி என்று சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் செய்த பிறகுதான் வேட்பாளர் யார்? என்றே தெரியவந்தது.
தற்போதைய பாராளுமன்ற தேர்தலிலும் வேட்புமனு தாக்கலுக்கு நெருக்கத்தில்தான் அறிவிப்பு வெளியிடுவார் என கட்சியினரே எதிர்பார்த்தனர்.
ஆனால், இதற்கு நேர் எதிராக கட்சியின் ஆண்டு விழாவில் உறுதிபட பாராளு மன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என உறுதிபூண்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்து 9-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது.
அதேபோல வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சியடையவும் உதவியாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினோம். உள் கட்டமைப்பை வலுப்படுத்தினோம். மாணவர், இளைஞர், மீனவர், முதியோர், தொழிலாளர், அரசு ஊழியர், வர்த்தகர்கள் என அனைவருக்குமான திட்டங்களை நிறைவேற்றினோம். இதன்மூலம் புதுவை மாநிலமே பெரும் வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரங்கசாமி அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார்?
பதில்: தகுந்த நேரத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றது போல ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்வோம். வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவார்.
கே: பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் இடம்பெற்றுள்ளீர்களா?
ப: நாங்கள் கூட்டணியில்தான் உள்ளோம். கடந்த கால கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கே: அ.தி.மு.க., பா.ஜனதாவோடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இல்லையே?
ப: சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலிலேயே அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்தோம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்தோம், பிரச்சாரமும் செய்தோம்.
கே: பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது?
ப: சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை நாங்கள் பாராட்டினோம். பல நல்ல வளர்ச்சி திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.
கே: புதுவை முதல்-அமைச்சர் கவர்னரோடு மோதல்போக்கை கடைபிடிக்கிறாரே?
ப: கவர்னரின் அதிகாரம் என்ன என்பதை முழுமையாக உணர்ந்தவர் முதல்- அமைச்சர். அவர் மத்திய மந்திரியாக இருந்த போதே கவர்னருக்கு என்னென்ன அதிகாரம் உள்ளது என்பதை பட்டியலிட்டு சொல்லியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டும் சமீபத்தில் யாருக்கு என்ன அதிகாரம்? என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடமை உள்ளது. அதைவிடுத்து கவர்னரோடு மோதல் போக்கில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை. முடிந்துள்ள 2½ ஆண்டு கால ஆட்சியில் புதிதாக எந்த திட்டமும் புதுவையில் கொண்டுவரப்படவில்லை. நடைமுறையில் இருந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை. பொதுப்பணித்துறை மூலமாக தார்சாலை போடும் பணியாவது நடக்கிறதா?
கே: புதுவை முதல்- அமைச்சர் உங்களை மோடியின் தம்பி என கூறியுள்ளாரே?
ப: மகிழ்ச்சி. அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் மோடியின் தம்பி என்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
கே: பொங்கல் பரிசு, தீபாவளி பரிசு எதையும் புதுவை அரசு தரவில்லையே?
ப: மக்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டியது அரசின் கடமை. அந்த கடமையை செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.
கே: காங்கிரஸ் அரசின் குறைகள் பற்றி நீங்கள் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
ப: சட்டமன்றத்தில் நாங்கள் பேசியுள்ளோம். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் அரசின் குறைகளை நிறைய தெரிவித்துள்ளனர். நாளிதழ்களிலும் அரசின் குறைகளை கூறியுள்ளனர். சமீபத்தில்கூட சட்ட ஒழுங்கை பற்றி கூறியுள்ளனர். பாராளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது இதையெல்லாம் எடுத்துக்கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #bjp #admk #nrcongress #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்