என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Northern State worker commits suicide"
- மதுக்கரை கணேஷ்நகரில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- கடந்த 4 வருடங்களுக்கு முன் சபரிவாசனின் அண்ணன் மணிகண்டன் என்பவர் தற்கொைல செய்து கொண்டார்.
கோவை,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரவி ரசாக் ( வயது 27). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் மதுக்கரை கணேஷ்நகரில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் சொந்த ஊரில் உள்ள தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரவி ரசாக் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஊருக்கு செல்ல முடியாமல் இருப்பது குறித்து பேசினார். இதன் காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகங்கையை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மகன் சபரிவாசன் (24). கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் சின்ன தடாகத்தில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன் சபரிவாசனின் அண்ணன் மணிகண்டன் என்பவர் தற்கொைல செய்து கொண்டார். இதனால் அவர் கடந்த சில நாட்க ளாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அறையில் இருந்த சபரிவாசன் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்