search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Veg"

    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால், முட்டை சேர்த்து சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 100 கிராம்
    முட்டை - 2
    வெங்காயம் - 2,
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - சிறிது,
    உப்பு - 1/2 ஸ்பூன்,
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    மிளகு தூள் - சிறிதளவு
    மிளகாய் தூள் - சிறிதளவு,
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று சத்தான சுவையான கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்
    நாட்டு முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    ப.மிளகாய் - 2
    மிளகுதூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து அரைடீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

    கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீன், தேங்காய் சேர்த்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வஞ்சிர மீன் - 250 கிராம்
    சோளமாவு - 2 ஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
    எலுமிச்சை பழம் - பாதி
    மிளகு பொடி - 1 ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை:

    இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இந்த விழுதோடு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.

    அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் இந்த வாழை இலை மீன் மசாலா மிகவும் பிரபலம். இன்று இந்த வாழை இலை மீன் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    மீன் துண்டுகள் - 6,
    பெரிய வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 3,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ,
    மல்லித் தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத் தூள், சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.
    நல்லெண்ணெய் - 100 மிலி,
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
    வாழை இலை - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த மீனில் சிறிது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    நன்றாக ஊறிய மீனை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழை இலையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் சிவந்த பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    நன்றாக வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சோம்புத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு போட்டுக் கிளறவும்.

    நன்றாகக் கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்தபின் திக்கான மசாலா வந்தபின் இறக்கிக் கொள்ளவும்.

    வாழை இலை எடுத்து வறுத்து மீனில் மசாலாவை தடவி இலை வைத்து சுருட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான வாழை இலை மீன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
    வெங்காயம் - 4
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 7,
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
    கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன்  அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீனில் வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூடான சாதத்துடன் சாப்பிட இந்த தொக்க அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முள் இல்லாத மீன் - 250 கிராம்,
    சோம்பு - சிறிதளவு,
    வெந்தயம் - சிறிதளவு,
    நசுக்கிய பூண்டு - 6
    பெருங்காய பவுடர் - சிறிதளவு,
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்,
    சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் மிளகாய்த்தூள், சோம்புத்தூள், பெருங்காய பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதக்கியதும் மீனை அதில் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நன்றாக தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இறால் - 1/2 கிலோ
    முள்ளங்கி - 1/4 கிலோ
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 1/4 மூடி
    பட்டை - 2
    லவங்கம் - 2
    இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 7
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி



    செய்முறை  :

    இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை கீறிக் கொள்ளவும்.

    தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

    முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

    முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும். இன்று இந்த கனவா மீன் தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கனவா மீன் - அரை கிலோ
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தனியாத் தூள் - அரை டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, சீரகம், சோம்பு, பட்டை, கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கனவா மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி சேர்தது வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி நன்றாக குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம்செய்த கனவா மீனைக் கொட்டி வதக்குங்கள். சிறிது நேரம் மூடி போட்டு வேகவிடவும்.

    உப்பை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வையுங்கள்.

    அனைத்தும் நன்றாகச் சேர்ந்து தொக்கு பதம் வந்தவுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்குங்கள்.

    சூப்பரான கனவா மீன் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஹோட்டலில் செய்வதைப்போல் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - 1/2 கிலோ,
    சோளமாவு, மைதா - தலா 25 கிராம்,
    முட்டை - 1,
    கொத்தமல்லி - சிறிது,
    எண்ணெய், உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 2,
    பூண்டு - 6 பல்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சைமிளகாய் - 5,
    சோயா சாஸ், தக்காளி சாஸ், வெங்காயத்தாள் - தேவைக்கு.



    செய்முறை :


    கொத்தமல்லி, வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா, முட்டை, உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து அதில் மீனை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    ஊற வைத்த மீனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மீன்  சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

    கடைசியாக அதில் கொத்தமல்லி, வெங்காயத்தாள் போட்டு சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மீன் மஞ்சூரியன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வான்கோழி பிரியாணி எப்படி சுவையாக இருக்குமோ, அதேப்போல் வான்கோழி வறுவலும் ருசியாக இருக்கும். வான்கோழி வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வான்கோழி - 1/2 கிலோ
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    அரைப்பதற்கு...

    தேங்காய் - 1 கப் (துருவியது)
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 5

    மசாலாவிற்கு...

    தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் - 2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்த வான்கோழியை போட்டு அதனுடன், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

    பின் அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் வான்கோழியை சேர்த்து, நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சுவையான வான்கோழி வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒரு குடும்பத்துக்கு அரை கிலோ ஆட்டிறைச்சி எடுத்து சமைப்பதே குதிரைக்கொம்பாக உள்ள நிலையில் உட்கார்ந்த இடத்தில் ஒருவர் 22 கிலோ முழு ஆட்டை முழுவதுமாக தின்று தீர்த்துள்ளார். #22KgMutton #Muttoneatingchallenge
    சென்னை:

    நோய்களுக்கு பயந்து அசைவப் பிரியர்கள் பலர் சைவத்துக்கு மாறிவிட்டாலும், சிலருக்கு உணவில் அசைவம் இல்லாவிட்டால் சாப்பிட இயலாது. என்னதான் அசைவப் பிரியர்களாக இருந்தாலும் அதிகபட்சமாக ஒருவரால் அரை கிலோ இறைச்சிக்கு மேல் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.

    ஆனால், பந்தயத்துக்காக ‘கிரில் மட்டன்’ என்றழைக்கப்படும் வெறும் சுட்ட ஆட்டிறைச்சியை தேனில் துவைத்து, இவர் சப்புக்கொட்டி சாப்பிடும் காட்சி, இவர் நவயுக பகாசுரனாக இருப்பாரோ.., என பார்ப்பவர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.

    22 கிலோ எடையுள்ள முழு ஆட்டையும் விழுங்கி முடித்த பிறகும் திருப்தி அடையாத இந்நபர் எலும்பு இடுக்கில் ஒட்டிக்கிடக்கும் துணுக்களவு இறைச்சியையும் சோற்றுத்தட்டில் உதறி எடுத்து, ரசித்து சுவைக்கும் சுகமே அலாதியானது. #22KgMutton  #Muttoneatingchallenge

    இதை வீடியோ வடிவில் காண..,



    பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் நன்றாக தாய்ப்பால் சுரக்கும். இன்று இந்த சுறா புட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சுறா மீன் - 300 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - 1½ டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 5,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
    வெங்காயம் - 100 கிராம்,
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 50 மி.லி.,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    சுறா மீனை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து தோலுரித்து உதிர்த்து கொள்ளவும்.

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் சுறா மீனை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் நன்றாக உதிர்ந்து நன்கு வதங்கியதும் இறக்கி, கொத்தமல்லித்தழையை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சுறா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×