search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non Veg Recipes"

    • மட்டன் தால்சா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ

    பச்சை மிளகாய் - 2

    தக்காளி - 2

    சின்ன வெங்காயம் - 12

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    கத்திரிக்காய் - 1

    மாங்காய் - 1/2

    கொத்தமல்லி - சிறிது

    பிரியாணி இலை - 1

    பட்டை - 1

    கிராம்பு - 2

    ஏலக்காய் - 2

    துவரம் பருப்பு - 1/2 கப்

    கடலை பருப்பு - 1/4 கப்

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    புளிச்சாறு - 1/4 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு..

    வெங்காயம் - 1/2 கப்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், மாங்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

    * கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    * மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் சின்ன பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் மட்டனை கழுவிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும். அதன் பின் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் போதுமான நீரை, அதாவது வழக்கமாக பருப்பு வேக வைக்க ஊற்றும் அளவை விட அதிகமாக நீரை ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மட்டனும், பருப்புக்களும் நன்கு வெந்ததும், கத்திரிக்காய், மாங்காய் சேர்த்து புளிச்சாற்றினையும் சிறிது ஊற்றி மூடி வைத்து, 10 நிமிடம் காய்கறிகள் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், மிளகு மற்றும் சிறிது வெங்காயத்தை சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள மட்டன் தால்சாவில் ஊற்றி கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியை தூவினால், மட்டன் தால்சா தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • தென் மாவட்டங்களில் மட்டன் உப்புகண்டம் மிகவும் பிரபலம்.
    • பழைய சோறு, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டு இறைச்சி - 1 கிலோ

    பூண்டு - 20 பல்,

    காய்ந்த மிளகாய் - 15

    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். உப்பு சிறிதளவு தான் போட வேண்டும். ஏனெனில் மட்டன் காயும் போது சுருங்கும். அதனால் உப்பு அதிகரித்து விடக்கூடாது.

    இந்த விழுதினை நறுக்கி வைத்த மட்டனில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும்.

    இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் வற்றும் வரை 1 வாரம் காய வைக்கவும். நன்றாக காய்ந்த உடன் காற்று புகாதா டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது.

    தேவைப்படும் போது உப்புக்கண்டத்தை எடுத்து அம்மிக்கல்லில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.

    சுவையான ருசியான உப்புக்கண்டம் ரெடி.

    • முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள்.
    • சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் - அரை கிலோ

    வரமிளகாய் - 18

    வெங்காயம் - 2

    பட்டை - 2

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

    சோம்பு பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வாக்கி, பின் மட்டனை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு பொடி, சீரகப் பொடி மற்றும் மட்டன் மசாலா சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    பின் குக்கரை மூடி 2 விசில் போட வேண்டும்.

    வரமிளகாயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மிளகாய் விழுதுடன் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து, அதனை குக்கரில் உள்ள மட்டனுடன் சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை நீங்கி, மட்டனுடன் மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், காஷ்மீரி மட்டன் குருமா ரெடி!!!

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் சூப்பரான சுவையான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

    சீஸ் துருவல் - 1 கப்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்கு

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    ஓரிகானோ - அரை டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    பிரெட் தூள் - 2 டீஸ்பூன் + தேவையான அளவு

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    மிக்சியில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகுத்தூள், தனி மிளகாய் தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ, பிரெட் தூள் 2 டீஸ்பூன், வெண்ணெய், சோயா சாஸ் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    சோள மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

    சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து உருண்டையாக உருட்டி மெல்லிய பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவில் அதில் உருண்டையை வைத்து மெலிதாக பூரி போல் தட்டவும். பின்னர் அதன் நடுவில் சிறிதளவு சீஸை வைத்து நன்றாக மூடி சதுரமான வடிவில் செய்யவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த பைட்ஸை சோள மாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் சீஸ் பைட்ஸ் ரெடி.

    • இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.
    • இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்

    வறுத்த சிறு பருப்பு - 1 கப்

    எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ

    பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)

    கேரட் - 4 (நறுக்கவும்)

    உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)

    பட்டாணி - சிறிதளவு

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    மசாலா தூள் - தேவைக்கு

    மிளகாய் தூள் - தேவையான அளவு

    தக்காளி - 4 (நறுக்கவும்)

    பட்டை, ஏலக்காய் - சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

    செய்முறை:

    அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.

    பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.

    சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

    • சிக்கனில் விதவிதமான ஸ்நாக்ஸ் செய்யலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2

    எலும்பில்லாத சிக்கன் - 1 கப்

    நெய் - 1 டீஸ்பூன்

    முட்டை - 2

    சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்

    சாட் மசாலா - 1 டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    ஆரிகானோ - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டீஸ்பூன்

    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கபாப் ஸ்டிக் - 10

    உப்பு - சுவைக்கு

    பிரெட் துள் - தேவைக்கு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    சிக்கனை வேக வைத்து உதிர்த்து கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் வேக வைத்து உரித்த சிக்கன், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ஆரிகானோ, தனி மிளகாய் தூள், சாட் மசாலா, சில்லி பிளேக்ஸ், நெய் சேர்த்து நன்றாக பிசைத்த பின்னர் கடைசியாக 2 டீஸ்பூன் பிரெட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி பரப்பி வைக்கவும்.

    2 கபாப் ஸ்டிக்கை எடுத்து கொண்டு அதில் சிக்கன் மசாலாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கபாப் ஸ்டிக்கில் வைத்து தட்டையாக தட்டவும். இவ்வாறு அனைத்து மசாலாவையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த ஸ்டிக்கை முட்டை கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் ஸ்டிக் ரெடி.

    • சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 200 கிராம்

    உருளைக்கிழங்கு - 2

    ப.மிளகாய் - 2

    உப்பு - சுவைக்கு

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    மலாய் அல்லது கிரீம் - 2 டீஸ்பூன்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    முட்டை - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி சிறிது உப்பு, சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    குக்கரில் சிக்கனை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து 1 விசில் 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை எடுத்து விட்டு அதில் தண்ணீர் வற்றும் வரை சிக்கனை அடுப்பில் வைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றியதும் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி போட்டு மசிக்கவும்.

    அடுத்து அதில் மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், வெண்ணெய், மலாய் அல்லது கிரீம், உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும். இது சற்று தளர்வாக தான் இருக்கும்.

    ஒரு தட்டில் பிரெட் தூளை கொட்டி நன்றாக பரப்பி விடவும்.

    அப்போது சிக்கன் மசாலாவை சிறிது எடுத்து பிரெட் தூளில் போட்டு பிரட்டி வேண்டிய வடிவில் பிடிக்கவும். சிக்கன் மசாலா தளர்வாக இருக்கும் என்பதால் பிரெட் தூளில் பிரட்டினால் மட்டுமே சரியான வடிவில் வரும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    அடுத்து மற்றொரு முறை பிடித்து வைத்த கட்லெட்டை முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதை மிதமான தீயில் வைத்து தான் செய்ய வேண்டும்.

    இப்போது சூப்பரான சிக்கன் மலாய் கட்லெட் ரெடி.

    • சப்பாத்தி, நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    முட்டையை வறுக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தலா 1/4 டீஸ்பூன்

    வேகவைத்த முட்டை - 7

    மசாலா செய்ய

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை - நறுக்கியது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பிறகு அதில் வேகவைத்த முட்டையை கீறி சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

    * மசாலா வெந்ததும் அதில் கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

    * பிறகு வறுத்த முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் வெங்காயம் முட்டை மசாலா தயார்.

    • இந்த ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
    • குழந்தைகளுக்கு சிக்கன் 65 என்றால் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 3

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகு தூள் - 1 டீஸ்பூன்

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

    அரிசி மாவு - 1 டீஸ்பூன்

    முட்டை - 1

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கன் துண்டுகளை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் பொரித்து, எடுத்து விட வேண்டும்.

    பின் அந்த எண்ணெயில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, அதன் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி ரெடி!!!

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் மூளை - 5

    சின்ன வெங்காயம் - 200 கிராம்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 2 டீஸ்பூன்

    சீரக தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - 2 டீஸ்பூன்

    உப்பு -தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * மட்டன் மூளையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தண்ணீர் சூடானதும் அதில் மட்டன் மூளையை போட்டு அதனுடன் 1/2 டீஸ்பூன், சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீரில் இருந்து எடுத்து, அதில் உள்ள நரம்புகளை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    * தக்காளி குழைய வதங்கி எண்ணெய் பிரிந்தது வரும் போது அதில் நறுக்கிய மட்டன் மூளையை சேர்த்து கலந்து, அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

    * தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்ததும் இதில் சிறிது அளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மிளகு மசாலா தயார்.

    • 30 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தக்காளி - 4 நறுக்கியது

    சின்ன வெங்காயம் - 100 கிராம்

    பூண்டு - 10 பல்

    பச்சை மிளகாய் - 1

    தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    கடுகு - அரை தேக்கரண்டி

    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * கருவாட்டை இரண்டு மூன்று முறை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்தது வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    * அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * மசாலாவில் பச்சை வாசனை போனதும் இதில் கருவாடை போட்டு கிளறவும்.

    * சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

    * கிரேவி திக்கான பதம் வந்ததும் இறுதியாக சிறிது கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.

    * இப்போது சூப்பரான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி.

    • சிக்கனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/2 கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூ

    முந்திரி - ஒரு கைப்பிடி

    மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

    மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

    மஞ்சள்தூள் - சிறிதளவு

    மிளகு - அரை ஸ்பூன்

    சீரகம் - அரை ஸ்பூன்

    சோம்பு - கால் ஸ்பூன்

    கசகசா - கால் ஸ்பூன்

    பட்டை, கிராம்பு - சிறிதளவு

    ஏலக்காய் - 2

    ஜாதிக்காய் - 1

    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

    நெய் - 4 ஸ்பூன்

    எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்

    சோயா சாஸ் - ஸ்பூன்

    தயிர் - 1 ஸ்பூன்

    பால் - 2 ஸ்பூன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

    பாதி முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி மிளகு அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதமுள்ள முந்திரியை போட்டு சிவந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.

    சிக்கனில் உள்ள நீரே போதுமானதும். சிக்கன் நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழைதூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான செட்டிநாட்டு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.

    ×