என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nia"
- கோவை சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- 8 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை:
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆய்வில் கிடைக்கும் தகவலை வைத்து அடுத்தகட்ட சோதனையும், விசாரணையும் நடைபெறும் என்று தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
கோவை சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
8 மாவட்டங்களில் நடந்த சோதனையில் 4 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு மையங்களை நடத்தி வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
- தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- 25 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது. தமிழகத்தின் 21 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் ஆறு மடிக்கணினிகள், 25 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் கோவை மாவட்டத்தின் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை அடுத்து ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு, இந்த வழக்கு என்.ஐ.ஏ.-வுக்கு மாற்றப்பட்டது. அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே இன்று தமிழகம் முழுக்க என்.ஐ.ஏ. சோதனை மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
- நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் உக்கடம் உள்பட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
சென்னை:
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார்.
தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அவரே அந்த சதித்திட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முபினுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவருடன் படித்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி தடயங்களைக் கைப்பற்றி வருகிறார்கள்.
குண்டு வெடிப்பை நிகழ்த்த முபினும், அவரது கூட்டாளிகளும் பல இடங்களில் ரகசிய கூட்டங்களை நடத்தி உள்ளனர். மேலும் தாக்குதல் நடத்துவதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக பலர் அவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதும், பலர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என கண்ட றிந்து அவர்களை கைது செய்யவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்ட னர்.
இந்நிலையில், முபினின் நண்பர்கள், அவருடன் அரபிக்கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் என 8 மாவட்டங்களில் இன்று ஒரே நேரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. உக்கடம் அல்-அமீன் காலனியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஹபீப் ரகுமான் என்பவர் வீட்டுக்கு இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் அவர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. புதிய நபர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போனையும் அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். சோதனையின்போது சில ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
உக்கடம் என்.எஸ்.கார்டனில் உள்ள பைசல்ரகுமான் என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். போத்தனூரில் நாசர் என்ற மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் இந்த சோதனையானது நடந்தது. சோதனை நடந்த இடங்களில் பிரச்சனைகள் எதுவும் நிகழாமல் இருக்க உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. திரு.வி.க. நகரில் வசிக்கும் முகம்மது அப்துல்லா பாஷா என்பவர் வீட்டுக்கு அதிகாலையில் அதிகாரிகள் அதிரடியாகச் சென்று இந்த சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பூர், வில்லிவாக்கம், பல்லாவரம் உள்ளிட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடலூர் மங்கலம்பேட்டையில் முகமது சுலைமான் வீட்டிலும், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பக்ரூதின் அலி அகமது வீட்டிலும் சோதனை நடந்தது.
இன்றைய சோதனையின் போது பல இடங்களில் இருந்து லேப்-டாப், செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த ஆவணங்களை கொண்டு தொடர் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 3 முறை சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று 4-வது முறையாக இந்த சோதனை நடந்தது. ஒரே நாளில் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
#WATCH | Tamil Nadu: NIA searches underway at several locations in Tiruchirappalli. Further details are awaited. pic.twitter.com/8aFRv6mMvo
— ANI (@ANI) February 10, 2024
- நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள்.
- பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் வீடு உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் 10 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இவைகளை ஆய்வு செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன் மற்றும் 2 நிர்வாகிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், தென்னகம் விஷ்ணு ஆகிய இருவரும் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஓமலூரில் போடப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். யார்-யாருடன் அவர்கள் செல்போனில் பேசியுள்ளனர் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதன் முடிவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது.
- விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?.
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக-வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. இந்த சோதனையை நடத்தியுள்ளது. தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்?. என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னிடம்தான் விசாரணை செய்திருக்க வேண்டும். பிப்ரவரி 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது தானும் நேரில் சென்று ஆஜராக இருக்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.
இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புடையவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
- கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
- வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு முன்பு இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு தொடர்பில் இருப் பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோத னையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் களத்தில் தனியாகவே நின்று ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.
இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாலாஜியின் மனைவியிடம் விசாரித்து விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
சாட்டை துரைமுருகன் தனது சாட்டை வலைதளம் மூலமாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 மணி நேர சோதனைக்கு பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் எழுதிய விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் மற்றும் திருப்பி அடிப்பேன் என்ற இன்னொரு புத்தகம் ஆகிய 2 புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.
வருகிற 7-ந்தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். அந்த சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வெளியான காணொளி குறித்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 நாம் தமிழர் கட்சியினர் மீது அப்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படை யில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். யூடியூபரான இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில் நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டு கள் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் அந்த கட்சி யில் இருந்து விலகிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த படியே விளம்பர பேனர்கள் தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரஞ்சித்குமாரின் வீட்டிற்குள் சென்றனர்.
வேறு யாரும் உள்ளே வராதபடி வாயில் கதவை அவர்கள் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்ட னர். பின்னர் அவரது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அவரிடமும் விசாரித்தனர்.
இவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. அதன்பேரி லேயே இவரது வீட்டில் சோதனை நடப்ப தாக கூறப்படுகிறது.
கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவருடைய வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அப்பகுதி யில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார்.
இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் மதிவாணனின் ஸ்டூடியோவிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை யொட்டி கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந் தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதிரடியாக விஷ்ணு வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகா ரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பேச்சாளருமான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இடும்பாவனம் கார்த்திக் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் அனுப்பி உள்ளார்.
சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெல்லியில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
- குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் மட்டூ. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள அவர் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜாவித் மட்டூ பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், டெல்லியில் பதுங்கி இருந்த ஜாவித் மட்டூவை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்தது.
குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது.
- தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.
2018, டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த 324 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 2022-ல் 31, 2021-ல் 15, 2020-ல் 9 மற்றும் 2019-ல் 14 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 குற்றம் சாட்டப்பட்டவர்கள், 2022-ல் 30 பேர், 2021-ல் 15 பேர், 2020-ல் 9 பேர் மற்றும் 2019-ல் 12 பேர் குற்றவாளிகள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- மும்பை 1993 வெடிகுண்டு மற்றும் 2008 தாக்குதல் சம்பவங்களில் தாவூத்திற்கு தொடர்புண்டு
- தாவூத்தின் சகோதரி மகள், அவர் கராச்சியில் வசிப்பதை உறுதிப்படுத்தினார்
இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா, மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இவரை பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. "இன்டர்போல்" (Interpol) எனப்படும் சர்வதேச காவல்துறையால் உலகெங்கும் "சிகப்பு அலர்ட்" தேடுதல் அறிவிப்பு விடப்பட்டிருக்கும் தாவூத்தின் தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) மற்றும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தாய்பா (Lashkar-e-Taiba) ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் பல நாசவேலைகளை நடத்தியவர், தாவூத்.
1993 மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவம், 2008 மும்பை தாக்குதல், புனே 2010 ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் தொடர்புடையவர்.
இந்தியாவை விட்டு தப்பி சென்ற தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுத்திருப்பதாக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக குற்றம் சுமத்தி வந்தாலும், பாகிஸ்தான் அதனை மறுத்து வந்தது. ஆனால், 2023 ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பர்கரின் மகள் அலிஷா பர்கர், தாவூத் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அப்துல்லா காசி பாபா தர்காவிற்கு பின்புறம் ரஹிம் ஃபாகி எனும் பகுதிக்கு அருகே வசிப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இந்திய அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இருநாட்டு உறவை குலைப்பதில் தாவூத்திற்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், உடல்நிலை சீர்கெட்டதால், இரு தினங்களுக்கு முன் கராச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புகளுடன் தாவூத் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடலில் விஷம் செலுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிகிறது.
தாவூத் சிகிச்சை பெரும் தளம் முழுவதும் வேறு எந்த நோயாளியும் சேர்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு நிலவுவதாகவும் தெரிகிறது.
- கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
- கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
பெங்களூரு:
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.
புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.
44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- கவர்னர் மாளிகை அருகே அக். 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
- கவர்னர் மாளிகையில் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடியான கருக்கா வினோத் 4 பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிக்கொண்டு கவர்னர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான்.
இதில் 2 பெட்ரோல் குண்டுகள் வாசல் அருகே சற்று தூரத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருக்கா வினோத்தை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசினான்.
இந்த குண்டுகள் கவர்னர் மாளிகை அருகில் செடிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இப்படி பரபரப்பான நேரத்தில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கருக்கா வினோத்தின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் அவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை எழுந்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கிண்டி கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
தடயவியல் நிபுணர்களின் துணையுடன் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் கருக்கா வினோத் எங்கிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினான்? அது எந்தெந்த இடங்களில் போய் விழுந்து வெடித்தது? என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரரான சில்வானுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் கூடுதலாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக காவலர் சில்வானுவை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனர். புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையே ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் என்.ஐ.ஏ. காவல் கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பின்னர் கருக்கா வினோத்தை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
- குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர்.
- ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான ஜான் யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் களமச்சேரியில் நடந்த கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பெண்கள் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்களில் 12 வயது சிறுமி உள்பட மேலும் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சி பகுதியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பிறகு டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய டொமினிக் மார்ட்டினை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அதில் யெகோவாவின் சாட்சிகள் சிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த அமைப்பு நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும், டொமினிக் மார்ட்டின் மட்டுமே குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்தநிலையில் இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். அவர்களில் தொடுபுழா அருகே உள்ள கொடிகுளம் வண்டமட்டத்தை சேர்ந்த ஜான் (வயது76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் தான், களமச்சேரி குண்டு வெடிப்பில் சிக்கினார். 55 சதவீதம் தீக்காயம் அடைந்திருந்த அவர், ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஜான் இறந்ததை தொடர்ந்து, களமச்சேரி குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்