search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New tower light"

    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
    • பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரவீந்திரநாத் எம்.பி தொடங்கி வைத்தார்.

    பெரியகுளம:

    பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் (2019-2020)ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரவீந்திரநாத் எம்.பி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலைய வெளிப்புறத்தில் புதிதாக அமைய உள்ள நூலகத்திற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க நகர செயலாளர் அப்துல்சமது, நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட பேரவை இணை செயலாளர் முருகானந்தம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் தவமணி, கீழவடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×