search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Royal Kings"

    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 117 ரன்கள் எடுத்தது.
    • நெல்லை அணியின் பாபா அபராஜித் அரை சதம் அடித்தார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹரிஷ் 7 ரன்னிலும், சூர்யபிரகாஷ் 28 ரன்னிலும் அவுட்டாகினர். சஞ்சய் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா அபராஜித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், நெல்லை அணி 15.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    • திருப்பூர் அணி சார்பில் மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார்.
    • நெல்லை அணியின் ஈஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நெல்லை அணியின் துல்லியமான பந்துவீச்சில் திருப்பூர் அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாப்னா 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்தது.

    நெல்லை சார்பில் ஈஸ்வரன் 3 விக்கெட், ஹரீஷ் 2 வ்க்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது.
    • பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதினன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய திண்டுக்கல் அணி திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார். ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் விளாசினார். நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் 133 ரன்கள் குவித்து வெற்றியை எட்டியது. துவக்க வீரர் நிரஞ்சன் 18 ரன்னிலும், சூர்யபிரகாஷ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பாபா அபராஜித், சஞ்ய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்தனர். பாபா அபராஜித் 59 ரன்களும் (நாட் அவுட்), சஞ்சய் யாதவ் 55 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர். இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

    இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியையும், 2வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்சையும் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் நெல்லை அணி, புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்தார்.
    • திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை பந்துவீச்சாளர் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மழை காரணமாக போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நெல்லை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில், துவக்க வீரர்களான விஷால் வைத்யா, கேப்டன் ஹரி நிஷாந்த் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதிரடியாக ஆடிய விஷால் வைத்யா, 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். துவக்க ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. ஹரி நிஷாந்த் 27 பந்துகளை எதிர்கொண்டு, 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மணி பாரதி (1), ராஜேந்திரன் விவேக் (12), மோகித் ஹரிஹரன் (3) என சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    மோனீஸ் 10 ரன்களும் (நாட் அவுட்), பிரதீப் 14 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, திண்டுக்கல் அணி 12 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்தது. நெல்லை தரப்பில் ஸ்ரீ நிரஞ்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். அதிசயராஜ் டேவிட்சன், சஞ்சய் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. 

    • நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை எட்டியது.
    • அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய சேலம் அணியில் கவின் 48 ரன்களும், டேரில் பெராரியா 60 ரன்களும் விளாச, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது.

    துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் சூரியபிரகாஷ்- பாபா அபராஜித் இருவரும் பொறுப்புடன் விளையாடி, ஸ்கோரை உயர்த்தினர். சூரிய பிரகாஷ் 35 ரன்களும், அபராஜித் 32 ரன்களும் அடித்தனர். பாபா இந்திரஜித் 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் அஜிதேஷ் அதிரடியாக ஆடி பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அஜிதேஷ் 25 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். ஜிதேந்திர குமார் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார்.

    இதனால் நெல்லை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் நெல்லை அணி 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார்.
    • நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் ஜமால் (11), கோபிநாத் (10) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவின் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். அதன்பின், டேரில் பெராரியோ, நெல்லை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் சேர்த்தார்.

    மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையிலும், பெராரியோ நிலைத்து நின்று நம்பிக்கை அளித்தார். அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார்.

    இதனால் சேலம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. பெராரியோ 60 ரன்களுடன் களத்தில் இருந்தார். நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ் தலா 2 விக்கெட் எடுத்தனர். ஆர்யா யோகன் மேனன், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. நெல்லை ராயல் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

    • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
    • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

    பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

    முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

    • துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
    • அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

    நெல்லை:

    ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

    சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

    இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

    ×