search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Corporation"

    • நெல்லை மாநகராட்சியில் உள்ள நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன.
    • அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இரவோடு இரவாக வேலையாட்களை நியமித்து இணைப்பு கொடுத்து வருவதாகவும், வேறு யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால் அதற்காக ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் உள்ள நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

    குடிநீர் இணைப்புகள்

    பாளை மண்டலத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் அங்கு குடிநீர் இணைப்புகள் முறைகேடாக அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இங்கு கே.டி.சி. நகர் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சமீபத்திய காலங்களில் நூற்றுக்கணக்கான குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ரூ.30 ஆயிரம் லஞ்சம்

    இதில் அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இரவோடு இரவாக வேலையாட்களை நியமித்து இணைப்பு கொடுத்து வருவதாகவும், வேறு யாரேனும் குடிநீர் இணைப்பு கேட்டால் அதற்காக ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தெரியாமலேயே கூடுதலாக குடிநீர் இணைப்புகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வைத்து கொடுத்துள்ளதாகவும், அவ்வாறான புதிய இணைப்புகளுக்கு மாநகராட்சியில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த பகுதியில் உள்ள சிலர் கூறுகின்றனர்.

    வருவாய் இழப்பு

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாநகர பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீருக்கான இணைப்பு பெறுவதற்கு ரூ.6,500 முன்வைப்பு தொகை கட்ட வேண்டும். அவர்கள் வசிக்கும் தெருவில் தார்ச்சாலை இருந்தால் அதை உடைத்து குழாய் அமைக்க ரூ.1,650 ஒரு நபருக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் வசூலிக்கிறது.

    ஆனால் பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பெரும்பாலான குடியிருப்புகளுக்கு இதுபோன்ற எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சட்டவிரோதமாக கீழநத்தம் பஞ்சாயத்து வரையிலும் அரசியல் கட்சியினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி குடிநீர் இணைப்பை வழங்கி உள்ளனர்.

    இதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் புகார் கூறி உள்ளோம். அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றனர்.

    ரகசிய சர்வே

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வார்டிலும் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு இணைப்புகள் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    விரிவாக்கம் செய்யப்பட்ட கே.டி.சி. நகர் பகுதியில் சட்ட விரோத இணைப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையான சர்வேக்கு பின்னர் அனைத்து சட்டவிரோத இணைப்புகளும் மொத்தமாக துண்டிக்கப்படும் என்றார்.

    • மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கட்டிடங்களில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று தச்சநல்லூர் மண்டலத்தில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கட்ராமன் தலைமையில் உடையார்பட்டி சாலைத்தெருவில் 2 கட்டிடங்கள், நெல்லை மண்டலத்தில் பாண்டியாபுரம் வடக்கு தெருவில் ஒரு கட்டிடத்திலும், திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்திலும், தெற்கு மவுண்டு ரோடு பகுதியில் 2 கட்டிடங்கள் என மொத்தம் 6 கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    எனவே மாநகராட்சிக்கு நிலுவை வரி பாக்கிகளை உடனே கணினி வரி வசூல் மையத்தில் செலுத்துமாறு ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் அருணாச்ச லம் முன்னிலை வகித்தார். உப தலைவர் சின்னத்துரை, இயக்குனர்கள் அருந்தவசு, கணேசன், சரவண கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், ரோஸ்மேரி ஜானகிராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மொத்த லாபத்தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 419 என கணக்கிடப்பட்டது.

    இதன் பின்னர் இந்த ஆண்டுக்கான கடன் வழங்கும் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், இதேபோல் பங்கு தொகையையும் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரத்து 500 ஆக உயர்த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் சரவணன் பேசியதாவது:-

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    மேலும் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சீறிய நடவடிக்கையால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள 33 அரசு பள்ளிகளில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    மாநகரில் 55 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் விரைவில் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகளை தீர்க்கும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள புதிதாக 300 பேர் நியமனம் செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும் போது, மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    மேலும் தி.மு.க. கவுன்சி லர்கள் பழையபேட்டை வாகன முைனயம் அருகில் உள்ள ஆடு அறுக்கும் நிலையத்தை மறுடெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து பேசிய 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் வழக்கம் போல் இந்தாண்டும் அரசு விதிகளை பின்பற்றியே டெண்டர் விடப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை கவுன்சிலர்களின் தலையீடு அதிகம் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
    • போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை, ஜூலை:

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று போட்டி நடைபெற்றது.

    அதனை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு சதுரங்கம் விளையாடினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் சாப்டர் பள்ளியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
    • வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தினை கடந்த 3-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    2-வது முறையாக தூய்மை பணி

    இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி' மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

    எனவே இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமை தூய்மை பணிகள் நடந்த நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    உறுதிமொழி

    அதன் தொடர்ச்சியாக தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் கேஆர் ராஜு, உதவி கமிஷனர் லெனின் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கவுரவிப்பு

    எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை கைகளில் அணிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.தொடர்ந்து பணி ஓய்வுபெற உள்ள 3 தூய்மைப் பணியாளர்களை சால்வை அணிவித்து கவுரவித்தனர். அதன் பின்னர் வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேரணி

    அதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் இருந்து தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் வண்ணாரப்பேட்டை வரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். இதே போல் பாளை மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் டார்லிங் நகர், ராஜேந்திர நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, நடராஜன் ஆகியோர் தலைமையில் பாரதி நகர், அத்தியடி தெரு, ராவுத்தர் தெரு ஆகிய பகுதிகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு மக்கள் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகரமானவை என்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கடைகளிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. மாநகரப் பகுதி முழுவதுமாக இன்று 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் வண்ணார்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×