search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai -Mysore"

    • சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா எம்.எல்.ஏ., தெற்கு ரெயில்வே புதிய பொது மேலாளர் ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அதில் கூறியுள்ளதாவது:-

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கும் தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸை தினசரியாக மாற்ற வேண்டும்.

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, பெங்களூர் வழியாக மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்திற்கு பயனில்லாமல் இயக்கப்படும் திப்ரூகர் - கன்னியாகுமரி ரெயிலை மதுரை, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.

    நெல்லை, தாம்பரம் ரெயிலுக்கு சங்கரன்கோவில் ரெயில் நிறுத்தமும், நெல்லை, பாலக்காடு பாலருவி ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிறுத்தமும் வழங்க வேண்டும். முருக பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளை நீட்டித்து, கூடுதல் நடை மேடைகளுடன் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இதுகுறித்து ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுவதாக பொது மேலாளர் கூறினார். தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூரு, மைசூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பொது மேலாளர் கூறினார் என தெரிவித்தார்.

    ×