search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NATO"

    • உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது.
    • நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக ஃபின்லாந்து தேசிய கொடி ஏற்றப்பட இருக்கிறது.

    நேட்டோ அமைப்பில் 31 ஆவது நாடாக ஃபின்லாந்து இணைய இருக்கிறது என நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் அறிவித்து இருக்கிறார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக நேட்டோ அமைப்பு இருக்கிறது. வரும் மாதங்களில் ஃபின்லாந்தை தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய இருக்கிறது.

    "இது ஒரு வரலாற்றுப்பூர்வமான வாரம். நாளை முதல், ஃபின்லாந்து கூட்டமைப்பின் முழு நேர உறுப்பினர் ஆகிறது. நேட்டோ தலைமையகத்தில் முதல் முறையாக நாளை நாங்கள் ஃபின்லாந்து கொடியை ஏற்ற இருக்கிறோம். ஃபின்லாந்து பாதுகாப்பு, நார்டிக் பாதுகாப்பு மற்றும் நேட்டோ அமைப்பு முழுவதிற்கும் நல்ல நாளாக இருக்கும்," என்று ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

     

    ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய ஆட்சேபனை இல்லை என கடைசி நாடாக துருக்கி நாளை கையெழுத்திட இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான ஆவணங்களை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோனி ப்ளிங்கனிடம் துருக்கி ஒப்படைக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ மற்றும் பாதுகாப்பு துறை மந்திரி அண்டி கைகொனென் மற்றும் வெளியுறவு துறை மந்திரி பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    "இது எங்களுக்கு பெருமை மிக்க தருணம் ஆகும். சந்திப்பின் போது, ரஷ்யாவின் தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு அதிக ஆதரவு அளிக்க நேட்டோவை வலியுறுத்துவதே ஃபின்லாந்துக்கு மிக முக்கிய குறிக்கோள் ஆக இருக்கும். ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பகுதி முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தவே நாங்கள் நினைக்கிறோம்," என்று ஹாவிஸ்டோ தெரிவித்துள்ளார்.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச ராணுவமான நேட்டோ படையில் இருந்து விலகும் அதிபர் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். #UShouse #USexitNATO #NATO
    வாஷிங்டன்:

    இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த  ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார்.


    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

    ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.  #UShouse #USexitNATO #NATO

    3 லட்சம் ராணுவ வீரர்கள், நவீன தளவாடங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக ரஷியா மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தியுள்ளது. #Russia #Vostok2018
    மாஸ்கோ:

    சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக போரிடும் ரஷியா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி வருகின்றது. போரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றது.

    உக்ரைன் நாட்டை உடைத்து, அதன் ஒரு பகுதியை தன்னுடன் இணைத்து கொண்டது. பிரிட்டனில் உளவாளிகள் மீது ரசாயன தாக்குதல் விவகாரம் ஆகியவற்றில் ரஷியா மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாகவே மோதி வருகின்றது. சமீபத்தில் டிரம்ப் - புதின் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள விவகாரங்கள் பேசி தீர்க்கப்பட்டாலும், பனிப்போர் அப்படியேதான் இருக்கிறது. 

    ரஷியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளும் இன்னும் நீங்க வில்லை. ஆனால், இதற்கெல்லாம் அசராத ரஷியா மேற்கு நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி வருகிறது.

    சுமார் 3 லட்சம் ராணுவ வீரர்கள், 1000 போர் விமானங்கள், 900 டாங்கிகள் பங்கேற்கும் இந்த போர் ஒத்திகைக்கு “வோஸ்டாக்-2018” அல்லது “கிழக்கு-2018” என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய போர் ஒத்திகை 5 நாட்களுக்கு தொடர்ந்து நடக்க உள்ளது. 

    ராணுவ டாங்கிகள், விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.



    ரஷியாவுடன் சீனா மற்றும் மங்கோலியா நாட்டு ராணுவமும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. சீனா 3200 ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது.

    தங்களது எல்லை அருகே நேட்டோ மூலம் ஐரோப்பிய நாடுகள் அளவுக்கதிகமாக படை பலத்தைப் பெருக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தப் போர் ஒத்திகை நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

    இதுகுறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், கடந்த 1981-ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் நடைபெற்ற ஸாபாட்-81 போர் ஒத்திகையைவிட அதிக எண்ணிக்கையில், தளவாடங்களும், போர் வீரர்களும் விஸ்டோக்-2018 இல் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஏறத்தாழ நிஜமான போருக்கு இணையான சூழலை ஏற்படுத்தி, இந்தப் போர் ஒத்திகை மேற்கொள்ளப்படும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்திருந்தார். ரஷியா - சீனா இணையும் இந்த போர் ஒத்திகையை அமெரிக்கா கவனமாக பார்த்து வருகின்றது. 
    ×