search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nainar nagendran"

    • சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    நெல்லை:

    நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வரப்பட்டு வருகிறது.

    சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை.

    இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார்.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டமளிப்பு விழா பா.ஜனதாவின் பிரச்சார மேடை என்பது கூறுவது தவறு.
    • பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை.

    நெல்லை:

    நெல்லை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று ராமையன்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சண்டை ஏற்படுவதால்தான் நான் வெளியேறினேன். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

    உள்கட்சி விவகாரத்தில் பா.ஜனதா தலையிட முடியாது. இதுகுறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதே நேரத்தில் இதற்கு முன்பு இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளது. ஆகவே ஒன்றாக சேர மாட்டார்கள் என்று கூற முடியாது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா நடுநிலைமையாகவே இருக்கும்.

    அ.தி.மு.க. அலுவலகம் அருகே சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் நடக்காமல் தி.மு.க. பார்த்திருக்க வேண்டும். அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கும் அளவுக்கு தி.மு.க. சென்றிருக்க கூடாது. தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சியாக பா.ஜனதா உள்ளது.

    நான் பா.ஜ.க.வில் சேரும்பொழுது அ.தி.மு.க.வில் உள்ளவர்களை என்னோடு யாரையும் அழைக்கவில்லை. அப்படி அழைப்பு விடுத்திருந்தால் அநேகம் பேர் வந்திருப்பார்கள்.

    அ.தி.மு.க.வின் வாழ்வுக்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இணைந்த கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    பட்டமளிப்பு விழா பா.ஜனதாவின் பிரச்சார மேடை என்பது கூறுவது தவறு.

    பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வேண்டியது அவரது கடமை.

    தி.மு.க. அரசு கல்குவாரி திறப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்கு முடிவு எட்டப்பட வேண்டும். குவாரிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

    தி.மு.க. அரசு உடனே நடவடிக்கை எடுத்து கல்குவாரிகளை திறந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடுகிறார். #bjp #tamilisai #ponradhakrishnan
    சென்னை:

    பா.ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 184 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்றிரவு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார்.

    ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும், சிவகங்கையில் எச். ராஜாவும், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகிறார்கள். #bjp #tamilisai #ponradhakrishnan
    ×