search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mutton Recipes"

    • கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
    • சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருள்கள் :

    சீரக சம்பா அரிசி - 4 கப்

    மட்டன் - அரை கிலோ

    இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 4

    தக்காளி - 3

    பச்சை மிளகாய் - 4

    மிளகாய் தூள் 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

    தேங்காய் - ஒரு மூடி

    தயிர் - அரை கப்

    லெமன் - 1

    புதினா - ஒரு கட்டு

    கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு

    நெய் - அரை கப்

    எண்ணெய் - அரை கப்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    கிராம்பு - 3

    பட்டை - 3 சிறிய துண்டு

    ஏலக்காய் - 3

    பிரிஞ்சி இலை - ஒன்று

    சோம்பு - ஒரு ஸ்பூன்

    செய்முறை :

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    * தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.

    * அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    * ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.

    * பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.

    * சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.

    • மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
    • எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - முக்கால் கிலோ

    வெங்காயம் - 250 கிராம்

    தக்காளி - 150 கிராம்

    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்

    கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்

    தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது

    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிப்பு

    கடுகு - அரை டீஸ்பூன்

    மிளகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    காய்ந்த மிளகாய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, ​​மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.

    எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.

    நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!

    இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.

    • மதுரை கறி தோசை மிகவும் பிரபலம்.
    • இந்த தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    கீமா மசாலா செய்ய

    மட்டன் கீமா - கால் கிலோ

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    சீரகம் தூள் - அரை டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    கரம் மசாலா - அரை டீஸ்பூன்

    கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    கரி தோசை செய்ய:

    தோசை மாவு

    மட்டன் கீமா மசாலா

    கொத்துமல்லி இலை

    எண்ணெய்

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குழைய வதக்கவும்.

    இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்.

    இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்.

    20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.

    அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்.

    மறுபுறம் மசாலா நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ஈரல் - 500 கிராம்

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    வர மிளகாய் - 5

    மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - இரண்டு கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

    • ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை செய்யலாம்.
    • இன்று ஆட்டுக் குடலில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    சீரகம், மிளகுத்தூள் - தலா 2 டீஸ்பூன்

    மஞ்சள்த்தூள் - சிறிதளவு

    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

    உப்பு, எண்ணெய்,

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில், குடலை நன்றாக வாசனை வராத அளவு கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து இஞ்சி, பெருஞ்சீரகத்தை தட்டி வைக்கவும்.

    மிளகு சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம் இஞ்சியை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்த வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் கழுவிய குடல், மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம் 1 டீஸ்பூன், உப்பு போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 15 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மேலும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக சிறிது கொத்தமல்லி, மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆட்டுக் குடல் சூப் ரெடி

    • சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    எலும்பில்லாத மட்டன் - 300 கிராம்

    சின்ன வெங்காயம் - 20

    பூண்டு - 20 பற்கள்

    இஞ்சி - 1 இன்ச்

    குண்டு வரமிளகாய் - 10

    தக்காளி - 1

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிது

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை தட்டிக் கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும்.

    மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!

    • இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - 200 கிராம்,

    துவரம்பருப்பு - 50 கிராம்,

    கடலை பருப்பு - 50 கிராம்,

    கத்தரிக்காய் - 2,

    வாழைக்காய் - 1/2 காய்,

    புளி - 10 கிராம்,

    மாங்காய் - 1/2,

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

    பட்டை - 5 கிராம்,

    பிரிஞ்சி இலை - 2,

    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.

    வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையான ஸ்நாக்ஸ் இது.
    • மட்டன் கீமா வைத்து சூப்பரான பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் கீமா - 150 கிராம்

    வெங்காயம் - 1 + 1

    இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

    சோம்பு - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 2

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

    பஜ்ஜி மாவு - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    ஒரு வெங்காயத்தை பொடியாகவும். மற்றொரு வெங்காயத்தை நீள வாக்கிலும் வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத் போட்டு தாளிக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன் கீமா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். மட்டனில் தண்ணீர் இருக்கும். தனியாக அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டிய தேவையில்லை.

    கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும்.

    வேக வைத்த மட்டன் கீமா ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பஜ்ஜி மாவு, சிறிது உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் அனைத்தையும் போட்டு நன்றாக கலக்கவும்.

    பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் வேக வைத்த மட்டன் நீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மட்டன் கலவையை உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கீமா பக்கோடா ரெடி.

    • சிலருக்கு பரோட்டா விருப்ப உணவாக இருக்க சால்னா முக்கிய காரணமாக இருக்கும்.
    • இன்று ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் எலும்பு கறி - கால் கிலோ

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 4

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1/2 டிஸ்பூன்டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சோம்பு - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    மிளகு - 1/4 டீஸ்பூன்

    கல்பாசி பூ - 2

    ஏலக்காய் - 2

    பட்டை, லவங்கம் - சிறிது

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    மட்டன் எலும்பு கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி பூ, ஏலக்காய், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    பின்னர் சுத்தம் செய்யப்பட்ட மட்டன் எலும்பு கறியை போட்டு அதனுடன் தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி 8 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூடான ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.

    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் மண்டி பிரியாணியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிதாக வெட்டிய மட்டன் - அரை கிலோ,
    வெங்காயம் - 4
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 7,
    இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
    வெண்ணெய் எண்ணெய் - தேவையான அளவு,
    சீரக சம்பா அரிசி - அரை கிலோ,
    கொத்தமல்லி, புதினா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

    சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன்  அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்தி, நாண், புலாவ், இட்லி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 500 கிலோ,
    பட்டை - 1 துண்டு,
    ஏலக்காய் - 3,
    கிராம்பு - 4,
    மிளகு - அரை தேக்காரண்டி,
    வெங்காயம் - 4,
    பச்சைமிளகாய் - 7,
    தக்காளி - 3,
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    தனியா தூள் - கால் டீஸ்பூன்
    மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி,
    தயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும மட்டன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மட்டன் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×