என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Must have served 2/3 of the sentence"
- தமிழக சிறைகளிலிருந்து விதிமுறைகள் உட்பட்டு தகுதியுடைய கைதிகள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
- கொடூர குற்றம், பலாத்காரம், பெண்க ளுக்கு எதிரான குற்றம் போன்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் விடுதலைப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள்
சேலம்:
இந்தியாவின் 75 -வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழக சிறைகளிலிருந்து விதிமுறைகள் உட்பட்டு தகுதியுடைய கைதிகள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை தவிர ஆண்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது. கொடூர குற்றம், பலாத்காரம், பெண்க ளுக்கு எதிரான குற்றம் போன்ற செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் விடுதலைப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் . ஏதேச்சையாக நடந்த சம்பவங்களில் தண்டனை மற்றும் சிறு குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 3-ல் 2 பங்கு தண்டனையை அனுபவித்து இருக்க வேண்டும், குறிப்பாக அவர் நன்னடத்தை கொண்டவராக இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இடம் பெற்றுள்ளது. அதன்படி சுமார் தமிழகம் முழுவதும் 150 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சேலம் மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்