search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Music"

    • இசை பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.
    • பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்களிடம் வகுப்பு கிடையாது என அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் மாவட்ட அரசு இசை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இசைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் யோகா, பாட்டு, ஓவியம், இசை, பரதம் போன்ற கலைகள் மாணவ- மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இசைப் பள்ளியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட இசை பள்ளி நிர்வாகம் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த பயிற்சி வகுப்புகளை திடீரென நிறுத்திவிட்டு திங்கள், செவ்வாய் கிழமை களில் மாலைநடை பெறும் என அறிவித்து நடத்தி வருகிறது.

    இந்நிலை யில் திங்கட்கிழமை பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ- மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர்களிடம் இன்று வகுப்பு கிடையாது என திடீரென அறிவித்ததால் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்து இசைப்பள்ளியை முற்றுகையிட்டு போரா ட்டம் நடத்தினர். இதனால் இசைப்பள்ளி அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக இசை தினம்- கலை விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மதுரை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் சார்பாக வருகின்ற 18-ந் தேதி அன்று மாலை 4.00 மணி அளவில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் "தமிழ்நாடு நாள்" மற்றும் உலக இசை தினம்- கலை விழா நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மதுரை அகில இந்திய வானொலி நிலைய குரலிசை கலைஞர் பாலாமணி ஈஸ்வர் டி.வி.ராமா னுஜாசாருலு ஆகியோ ரின் குரலிசை நிகழ்ச்சியும், மதுரை அகில இந்திய வானொலி நிலைய கலைஞர் மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை இசை நிகழ்ச்சி, கலைமாமணி ஆத்தூர் கோமதி குழுவினர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

    இசைஞானியுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளையராஜா, இதுவரை நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
    இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘இசைஞானியுடன் ஒருநாள்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா தன் மெட்டுக்களால் மாணவர்களை அசத்தினார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார். ஒரு மாணவி அவரிடம் ’இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?’ என்று கேட்க, ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்த தில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும்.



    இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி -தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜாவே இல்லை’’ என்று பதில் அளித்தார்.

    ×