search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muposai"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிங்கார கருப்பணார் சாமிக்கு முப்பூசை விழா நடந்தது.
    • 18வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிங்கார கருப்பணார் சாமிக்கு முப்பூசை விழா ஆண்டுதோறும் ஆடி மாத கழுவாடியை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர் பன்னீர், இளநீர்,சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மலர்களால் கருப்பண்ண சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக நள்ளிரவில் ஆடு, கோழி சாமிக்கு பலியிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ அன்னதானம் விருந்து வழங்கப்பட்டன. முப்பூசை விழா ஏற்பாடுகளை இளநீர் குமார், பால்காரர் நடராஜன் மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×