search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulaiparri - Thirtha Kalasa"

    • 8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
    • மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று மாலை 3 மணி அளவில் அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த கலச ஊர்வலம், உலகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மேலும் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி,பெருசலங்கை ஆட்டம்,பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    ×