என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mount everest
நீங்கள் தேடியது "Mount Everest"
எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. #Everest #Trash
காட்மாண்டு:
இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வீரர்கள் தங்குவதற்கான கூடாரங்கள், ஏறுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனித கழிவுகள் குப்பைகளாக எவரெஸ்ட் சிகரத்தை ஆக்கிரமித்து உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை அகற்ற முடிவு செய்த நேபாள அரசு அதற்காக நவீன யுக்தியை கையாண்டது. அதாவது மலையேற்றம் செல்லும் குழுவினர் சுமார் ரூ.2,64,000-ஐ வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பின்பு சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது ஒவ்வொரு வீரரும் தலா 8 கிலோ குப்பைகளை தன்னுடன் எடுத்து வந்து செலுத்திய தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம்.
இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 டன் குப்பைகளும், 15 டன் மனித கழிவுகளும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டும் மலையேற்ற வீரர்கள் டன் கணக்கில் குப்பைகளை கீழே கொண்டு வந்தாலும் சிகரத்தில் தொடர்ந்து குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு கவலை தெரிவித்துள்ளது. #Everest #Trash
இமயமலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையை பெற்ற இதன் உச்சியில் கால்பதிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள் சிகரத்தில் ஏறி வருகின்றனர். இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆண்டுதோறும் டன் கணக்கில் குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வீரர்கள் தங்குவதற்கான கூடாரங்கள், ஏறுவதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மனித கழிவுகள் குப்பைகளாக எவரெஸ்ட் சிகரத்தை ஆக்கிரமித்து உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகளை அகற்ற முடிவு செய்த நேபாள அரசு அதற்காக நவீன யுக்தியை கையாண்டது. அதாவது மலையேற்றம் செல்லும் குழுவினர் சுமார் ரூ.2,64,000-ஐ வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பின்பு சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது ஒவ்வொரு வீரரும் தலா 8 கிலோ குப்பைகளை தன்னுடன் எடுத்து வந்து செலுத்திய தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம்.
இதன்படி கடந்த ஆண்டு மட்டும் சுமார் 25 டன் குப்பைகளும், 15 டன் மனித கழிவுகளும் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டது.
இந்த ஆண்டும் மலையேற்ற வீரர்கள் டன் கணக்கில் குப்பைகளை கீழே கொண்டு வந்தாலும் சிகரத்தில் தொடர்ந்து குப்பைகள் குவிந்து வருவதாக சாகர்மாதா மாசு கட்டுப்பாட்டு குழு கவலை தெரிவித்துள்ளது. #Everest #Trash
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை மனிஷா வாக்மர் எவரெஸ் சிகரத்தின் மீது ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். #ManishaWaghmare #MountEverest
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.
மனிஷா விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மகாராஷ்டிரா அரசு சிவ் சத்ரபதி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ManishaWaghmare #MountEverest
மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத் நகரில் உள்ள மரத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா வாக்மர். இவர் இந்திராபாய் பதக் மகிளா கல்லூரியில் விளையாட்டுத்துறை தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மிகச்சிறந்து மலையேற்ற வீராங்கனை.
இவர் பல உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மிக உயரமாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி மனிஷா புதிய சாதனை படைத்தார். நேற்று இரவு தனது பயணத்தை தொடங்கிய மனிஷா, எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் மரத்வாடா பகுதியைச் சேர்ந்த பெண் என்ற பெருமை பெற்றுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X