என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Motors"
- கடையில் உள்ள மின்சார காப்பர் கம்பிகள், மின் மோட்டார்கள் திருடப்பட்டது.
- அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் கோவை சின்னவேலம்பட்டு பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை இயங்கி வருகிறது.
இதனை கோவையை சேர்ந்த தமிழோவியன் என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் தமிழோவி யன் நேற்று கடைக்கு வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்தபோது கடை இருந்த மின்சார காப்பர் கம்பிகள், மின் மோட்டார்கள் திருடு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர் அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் சாலையில் 4 பேர் மின்சார ஒயர்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 20), சுரேஷ் (22), காலாவர்ணம் (22), பாலு என்பதும், கடையில் மின் ஒயர்கள் திருடியதும், ஒயர்களை முத்துப்பேட்டைக்கு விற்க சென்றதும் தெரியவந்தது.அவர்களை அதிராம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்