search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister namachivayam"

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    சென்னையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 3-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடக்கிறது.

    போட்டிக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தி ஆக்கி போட்டி குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்த கோப்பை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த கோப்பை புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கிற்கு எடுத்து வரப்பட்டது.

    ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.. அனிபால்கென்னடி, புதுவை ஆக்சி சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    புதுவை அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக தனி துறையும் உருவாக்கப்பட்டுள்ளது. புதுவை ஆக்கி மைதானம் சேதமடைந்துள்ளது. விரைவில் ரூ.7 கோடியில் மைதானம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு 2017 முதல் 2023 வரை வழங்கவேண்டிய ஊக்கத்தொகை ரூ.8 கோடி விரைவில் வழங்கப்படும்.

    புதுவை விளையாட்டு வீரர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    புதுவை நகர், கிராமப்புறங்களில் விளை யாட்டு மைதானங்களை சீரமைக்க ரூ.11 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசின் ஒப்புதல் பெற்று மைதானங்கள் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு
    • காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் கூட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு நடந்து வருகிறது.

    மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளை ஒரு கும்பல் திட்டமிட்டு திருடியது. இது புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம்  கூட்டினார். காவல்துறை தலைமை யகத்தில் கூட்டம் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். டி.ஜி.பி சீனிவாஸ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், புதுவையில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும், கஞ்சா, போதைப்பொருட்கள், வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், இரவில் குடித்துவிட்டு வாகனங்களை

    செல்வதை கண்காணிக்கவும், வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.

    மேலும் இரவு நேர ரோந்துகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
    • காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதற்கு மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மின்துறை சொத்துகள் அடிப்படையில், மத்திய அரசு அறிவுறுத்தல்படி மீண்டும் மறு டெண்டர் வைக்கப்படவுள்ளது.

    புதுவை மின்துறை தனியார்மயமானால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர் அதற்கு அரசு தரப்பில விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் விவசாய நிலங்களில் இலவச மின்சாரம் பெறும் பம்ப் செட் மோட்டார்களில் மின்துறை சார்பில் மின்மீட்டர் பொருத்தத் தொடங்கியுள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்துறையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்து மனுல.வும் அளித்தனர்.

    இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவில்லை. தவறாக புரிந்து கொண்டுள்ளனர். புதிய எனர்ஜி மீட்டரை பொருத்துகிறோம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படு கிறது என்பதை கண்டறியவே பொருத்துகி றோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. மின்கட்டண மானியத்தை அரசுதான் செலுத்துகிறது. கட்டணம் வசூலிக்க மாட்டோம். இலவச மின்சாரம் எதிர்காலத்திலும் தொடரும்..

    10 சதவீதம் இடஒதுக்கீடு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அவர் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பிய பின் சென்டாக் கலந்தாய்வு தொடங்கும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வசதி வாய்ப்புகள் புதுவையில் உள்ளது. காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கல்வித்துறையில் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும். வெகுவிரைவாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தவுள்ளோம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் நடந்து விடும். அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளோம். பயிற்சி 2 ஆண்டுகள் நடக்கும்

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய தொழிலங்கள் கூட்டமைப்பின் தெற்கு மண்டலம் சார்பில் சிறு, குறு தொழிற்சாலைகளின் திறன் மேம்பாட்டு திட்டம் தனியார் ஒட்டலில் நடந்தது. திட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி கூறிய பெஸ்ட் புதுவையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் முனைவோருக்கு 2017-ல் தர வேண்டிய ஊக்கத்தொககை ரூ.30 கோடி அளித்துள்ளோம். சேதராப்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்திய 750 ஏக்கர் நிலத்தை தொழில் முனைவோருக்கு தர மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது. 2016-17-ல் தொழில்கொள்கை உருவாக்கப்பட்டு, சில அரசாணைகள் வெளியிட ப்பட்டது.

    மீதமுள்ள முத்திரை த்தாள், மின்கட்டணம், ஜி.எஸ்.டி. விலக்கு, சலுகை தர அரசாணை வெளியிட ப்படும். புதுவையில் தொழில்புரட்சி ஏற்படும். சிறு, குறு தொழில்கள் தொடங்க அரசு அனுமதி தேவையில்லை. 3 ஆண்டுக்கு பின் அனுமதி பெற்றால் போதும் என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். இதற்கான அரசாணையும் வெளியிடப்படும். புதிய தொழில்பூங்கா, ஐ.டி நிறுவனங்கள் கொண்டு வரப்படும்.

    ஏ.எப்.டி. வளாகத்தில் ஜவுளி பூங்கா அல்லது சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கி பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கவர்னர் பரிந்துரைத்துள்ளார். இந்த ஆண்டு நடைமுறை ப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்விவகாரத்தில் மாநில அரசு அரசாணை வெளி யிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒது க்கீடு அமல்படுத்தமுடியுமா? என சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்படும்.

    இது தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு எப்போது அனுப்பினார் என்பது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமிக்குத்தான் தெரியும். அது எங்கு கிடப்பில் உள்ளது என கூறினால் அதை பின்தொடர சவுகரியமாக இருக்கும். மத்திய அரசு தற்போது அனைத்து விஷயங்களையும் செய்து தருகிறது. பல காலமாக கிடப்பில் போடப்பட்ட கோப்புகளுக்கு கூட மத்திய அரசு அனுமதி தருகிறது.

    மாணவர் உள் ஒதுக்கீடு கோப்பு இருந்தால் அதற்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயம் இல்லை. பட்டானூர் நிலத்தை விற்க நாராயணசாமி அனுமதி கேட்டார். அது கிடைக்கவில்லை. எங்கள் ஆட்சியில் அனுமதி கிடைத்துள்ளது.

    சேதராப்பட்டு நிலத்துக்கும் அனுமதி கிடைத்துள்ளது. திருத்திய பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 400 கோடிக்கு மேல் மத்திய அரசு கொடுத்துள்ளது.

    இதுவரை இப்படி பணம் வாங்கியது கிடையாது. மத்திய அரசு இப்போது அளிக்கிறது. தேசிய பஞ்சாலைக்ககழகம் சுதேசி, பாரதி பல்கலை அரசே பெற அசலும், வட்டியும் கோரினர். மத்திய அரசை நாடினோம். இதையடுத்து ரூ.37 கோடி அசல் மட்டும் தந்தால் போதும் என ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் ரூ.29 கோடி ஒதுக்கியுள்ளோம். இந்த நிதியை கொடுத்துவிட்டு, மீதியை அடுத்து தருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • வட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவராக முகமது அசாருதீன், செயலாளராக இளங்கோவன், பொருளாளராக செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் பதவியேற்பு விழா திருக்க னூர் போன் நேரு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைவர் முகமது அசாருதீன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன், சரவணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர். முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடக்கி வைத்தார்.

    விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதுடன், 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர் புஷ்ப ராஜ், வட்டார தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.

    • பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார்.
    • ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து வியாபாரிகள் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பா.ஜனதா அனைத்து மக்கள் குறைகளையும் தீர்த்து வருகிறது. என்.ஆர்.காங்., பா.ஜனதா தேசிய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து புதுவை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார். அதன்படி பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி தாக்கல் செய்யப்படும்.

    அப்போது எந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டார். அதன்படி முதல் முறையாக ரூ. 1,450 கோடி கூடுதலாக நிதியை மத்திய அரசு வழங்கியது.

    2017 முதல் தொழில் தொடங்க ஊக்கத்தொகை கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது ரூ.30 கோடி நிதி முழுமையாக கொடுக்கப்ப ட்டுள்ளது. ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    வருகிற 7-ந் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகிறார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கை களை தெரிவிக்கலாம். பா.ஜனதா நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. ஸ்மார்ட் சிட்டி மூலம் குபேர் மார்க்கெட் சீரமைக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடி வந்துள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட தேத்தம்பாக்கம் கிராமத்தில் ஏரிக்கரை சாலையை புதுவை அசோக் பாபு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் வாய்க்கால் வசதி மேம்படுத்துதல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருக்கனூர் தேவநாதன் நகரில் வெங்கடேசன் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலைகளுக்கு வாய்க்கால் வசதி மற்றும் சாலையை மேம்படுத்துதல் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு பணிகளையும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.
    • புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் இருந்து முதல் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க புதுவையை சேர்ந்த மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

     மேலும் உலக அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கு பெற கிரிதரன், மெர்லின்தனம், பியுஷாதரனி ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீரர்களுக்கு சால்வை அணிவித்து அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர் தாமஸ், புதுவை ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி முத்துகேசவலு ஆகியோர் பங்கேற்றனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
    • தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஒரு அரசு பள்ளி மாணவர் வந்து பேசினார். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு கலவை சாதம் நன்றாக உள்ளது. ஆனால் சாம்பார் சாதம் நன்றாக இல்லை. சாம்பார் சாதம் வழங்கும் நாளில் சரியாக அரிசி வேகவில்லை, சுவையும் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்தார்.

    ஏற்கனவே அக்சயபாத்திரம் தொண்டு நிறுவனம் அரசு பள்ளிகளுக்கு மதிய உணவை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சைவ உணவுகளை மட்டுமே வழங்கும்.

    இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால் பகுதிநேர ஊழியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சியினரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதம் சுவையாக இல்லை என சட்டசபையில் புகார் கூறியிருந்தனர். தற்போது பள்ளி திறக்கும்நேரத்தில் பள்ளி மாணவர் அமைச்சரிடம் நேரடியாக புகார் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் அக்சய பாத்திரம் நிறுவனத்தினரை அழைத்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். சாம்பார் தனியாகவும், சாதம் தனியாகவும் வழங்க முடியுமா? என அமைச்சர் ஆலோசித்து வருகிறார். 

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

    விழாவிற்கு உள்துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பெரிய ஏரியின் தென்கிழக்கு பகுதி தூர்வாரும் பணியினை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் கோவில் குளம் தூர்வாருதல், திருக்கனூர் பெரிய ஏரி கிழக்கு பகுதியினை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருக்கனூர் பெரிய ஏரியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், திருக்கனூர் பள்ளிக்கூடத்தினை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு முறையாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பிரமுகர்கள் போட்டோ ராஜா, முத்தழகன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.

    இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.

    தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.

    இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

    • 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
    • ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

    2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.

    இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

    தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

    ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.

    தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.

    நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×