search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menses"

    • ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
    • சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும்.

    மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

    இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும்.அடிவயிற்று பகுதியில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும்.

    மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, வாந்தி, முதுகுவலி இவற்றை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhoea) என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.

    இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்: 1) புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். 2)திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மி.கி. எடுத்து அதை ஒரு கிராம் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க வலி தீரும். 3) குன்ம குடோரி மெழுகு 500 மி.கி. வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும். 4) குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

    கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • எலும்புகளின் ஆரோக்கியத்தை மெனோபாஸ் காலத்துக்குப் பின்பு பராமரிப்பது மிகவும் முக்கியம்.
    • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கான சில வழிகளை பார்ப்போம்...

    மெனோபாஸ் வயது வந்துவிட்டது... இனிமேல் எதற்கு உடற்பயிற்சி எல்லாம்என்கிற எண்ணம் பல பெண்களுக்கும் உண்டு. ஆனால் அது தவறு. அத்தனை காலம் நீங்கள் உடற்பயிற்சியே செய்யாதவர் என்றாலும் மெனோபாஸ் நெருங்கும் போதாவது உடற்பயிற்சிகளை தொடங்க வேண்டியது அவசியம்.

    வெயிட் பேரிங் பயிற்சிகள் என்பவற்றை உடற்பயிற்சி நிபுணரிடம் கேட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.ஒரே ஒரு பயிற்சியை மட்டும் செய்வதைவிட வேறு வேறு பயிற்சிகளை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் மேம்படுத்தும். வெயிட் பேரிங் (Weight bearing) மற்றும் தசைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் எல்லா வயதினருக்குமே மிக அவசியம். மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதில் இந்த பயிற்சிகள் மிக மிக முக்கியமானவை.

    எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து மிக முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கூடியவரையில் உணவின் மூலமே கால்சியம் சேரும்படி பார்த்து கொள்ளுங்கள். கொழுப்பு குறைந்த பால் மற்றும் பால் பொருட்கள், மீன்களில் சார்டைன், சாலமன் போன்றவையும் கால்சியம் சத்து நிறைந்தவை. பிரோக்கோலி, கீரைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றிலும் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

    கால்சியம் சத்து மட்டும் சரியாக இருந்தால் போதாது. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி சத்தும் மிக முக்கியம். அது போதுமான அளவில் இருந்தால்தான் கால்சியம் சத்து கிரகிக்கப்படும்.

    முட்டை, ஈரல் போன்றவற்றில் வைட்டமின் டி இருக்கிறது. காலை மற்றும் மாலையில் இளம் வெயில் உடலில் படும்படி வாக்கிங் போகலாம், தோட்ட வேலை செய்யலாம். இதுவும் வைட்டமின் டி சத்தை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்படி தேவைப்பட்டால் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

    பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் அடிக்கடி காஃபி மட்டுமே அருந்தி பசியாற்றி கொள்வதை பார்க்கிறோம். அதிகளவில் காஃபி குடிப்பதால் அதிலுள்ள கஃபைன், கால்சியம் கிரகிக்கப்படுவதைத் தடுத்துவிடும். காஃபி மட்டுமில்லை, கஃபைன் உள்ள எந்த பானமும் தவிர்க்கப்பட வேண்டும். மெனோபாசை நெருங்கும் பெண்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    வயதாக ஆக உடற்பயிற்சியை தவிர்த்தீர்களானால் உங்கள் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படும். சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கை முறையாக பின்பற்றினால் மெனோபாஸ் வயதில் எலும்புகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வலிகள் தவிர்க்கப்படும். வயதாக ஆக நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைய தொடங்கும். அதன் தொடர்ச்சியாக உணவின் மூலம் உடலுக்குள் சேரும் ஊட்டச்சத்துகளின் அளவும் குறையும். குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு கால்சியமும், வைட்டமின் டியும் மிக முக்கியம். உணவு குறைவதால் இவை போதிய அளவு உடலுக்கு சேர்வதில்லை. உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருந்து, உடலை உறுதியாக வைக்கும்.

    மெனோபாசுக்கு பிறகு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறையும். அதன் தொடர்ச்சியாக எலும்புகள் வலுவிழப்பதும், ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை வருவதும் சகஜமாக இருக்கும்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும் ஹெச்ஆர்டி எனப்படுகிற சிகிச்சை பலனளிக்கும். ஆனால் இதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரிடம் முழுமையான ஆலோசனை பெற்றே, அவரவர் உடலுக்கு ஏற்றபடியான சிகிச்சையை ஆரம்பிப்பது நல்லது.

    எடை அதிகரிப்பு எப்படி எல்லா பிரச்னைகளுக்கும் காரணமாக சொல்லப்படுகிறதோ அதே போல அதிக அளவில் எடையை குறைப்பதுகூட ஆரோக்கியமற்றதுதான். அதிலும் குறிப்பாக மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்கள் அளவுக்கதிகமான எடையை குறைப்பது அவர்களது எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.

    வயதாவது மற்றும் எடைகுறைப்பு இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பும் பெண்கள் அதற்கு முன் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்றே செய்வது சிறந்தது.

    • பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.
    • இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றுபவர் டாக்டர் எஸ்.அனிதா. இவர் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது?, அதற்கான தற்காப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து கூறினார்.

    அவர் கூறியதாவது:-

    'பூப்பு' என்ற வார்த்தை பெண்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. இயல்பாக பூப்பு எய்தும் வயது 13 முதல் 16 வரையும், பூப்பு முடியும் வயது 45 முதல் 50 வரையும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்காலத்தில் 8 மற்றும் 9 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருவம் அடைந்து விடுகின்றனர். பூப்பு எய்திய வயது முதல் பூப்பு முடியும் வயதிற்கு இடையில் தோன்றும் பூப்பு சுழற்சியின் போது ஏற்படும் மாறுதல்களே மாதவிடாய் பிரச்சினை என்று கூறுகிறோம்.

    கோளாறுகளின் வகைகள்

    பூப்புதடை (அமினோரியா) என்பது ஒரு பெண்ணுக்கு 25 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வரும் இயல்பான மாதவிடாய் தடைபடுதல் ஆகும். இயல்பாகவே இது ஒரு பெண் கருத்தரித்துள்ள போதும், பாலூட்டும் காலத்திலும் பூப்புதடை ஏற்படும். பெரும்பாடு (மெனோரோஜியா) என்பது இயல்பாக 4 முதல் 7 நாட்களில் நிற்க வேண்டிய ரத்தப்போக்கு நிற்காமல் தொடர்வதாகும்.

    பூப்புவலி (டிஸ்மெனோரியா) என்பது மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பும், மாதவிடாயின் போதும் ஏற்படும் அதிகப்படியான வலியாகும். இடைப்பூப்பு (மெட்ரோஜியா) என்பது மாதவிடாயானது 15 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது ஆகும். வெள்ளைப்படுதல் (லுகோரியா) என்பது பூப்பு காலத்திற்கு முன்னும், பின்னும், யோனி வழியாக சளிகலந்த நீர் போல் வெளிவரும் இயல்பை விட அதிகரித்த வெள்ளை கசிவாகும்.

    காரணங்கள்

    கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் மற்றும் தசை வளர்ச்சி, பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி, கர்ப்பப்பை சுவர்களின் வீக்கம், ஹார்மோன் பாதிப்பு. கர்ப்பப்பை நார்திசுகட்டிகள், மாறுபட்ட உணவு, உடை என்பன போன்ற வாழ்வியல் மாறுபாடுகள்.

    வேலைப் பளுவால் வரும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், ஆல்கஹால் எடுத்தல். உடற்பயிற்சியின்மை, குழந்தை பேருக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் ஹார்மோன் ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்துவது, அடிக்கடி உருவாகும் நோய் தொற்றுகள் என்பன போன்றவைகள் ஆகும்.

    நிலையற்ற மனநிலை, சோர்வாக உணர்தல், பதற்றம், தூக்கமின்மை, முதுகுவலி, வாந்தி, குமட்டல், உடல் எடை அதிகரிப்பு. அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மார்பகங்களில் வீக்கம், தேவையற்ற ரோம வளர்ச்சி ஆகியவை மாதவிடாய் கோளாறுகளுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

    கர்ப்பப்பை நலன் காக்கும் சித்த மருத்துவம்

    உளுந்து, வெந்தயம், எள், அசோகு, சதாவேரி, சதகுப்பை, வெள்ளை பூசணிக்காய், கற்றாழை, முருங்கை, பெருஞ்சீரகம், குங்குமப்பூ, பிரண்டை முதலியன கர்ப்பப்பை கோளாறுகளுக்கு சிறந்த மூலிகைகள் ஆகும்.

    உளுந்து களி அல்லது உளுந்தங்கஞ்சி செய்து உண்ண அதில் உள்ள இரும்பு சத்து, போலேட் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குகிறது. வெண்பூசணிக்காயை ஜூஸ் அல்லது தயிர் சேர்த்து கறியாக உண்ண அதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட் பூப்பு காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. எள்ளில் உள்ள 'வைட்டமின் -இ' பூப்பு சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை ஊற வைத்து உண்ண ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படும் தொந்தரவுகள் குணமாகும். முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து குடிப்பதால் மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கினால் ஏற்படும் ரத்த சோகை நீங்கும். குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்த அதில் உள்ள க்ரோசின், பிக்ரோ க்ரோசின் என்னும் சத்துக்கள் கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன் மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் குறைக்கும்.

    தற்காப்பு வழிமுறைகள்

    மாதவிடாய் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்தே சத்தான உணவுகளான உலர்ந்த அத்தி, பேரிச்சை, திராட்சை, நெல்லி, பாதாம் ஆகியவற்றை உண்ண வேண்டும். மேலும் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மாதவிடாயின் போது ஏற்படும் வலி, ஒழுங்கற்ற பூப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம். மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உடல் சூட்டை தணிக்க இளநீர், கற்றாழை சாறு, கரும்பு சாறு அருந்தலாம்.

    பொதுவாக நேரம் தவறாமல் உணவு உண்ணுதல் மற்றும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டை ஆகியவை உண்பதுடன், தேவையான அளவு தண்ணீர் அருந்துதல் வேண்டும்.

    மாதவிடாயின் போது குளிர்ந்த நீரில் குளிப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், மைதா சேர்ந்த உணவுகள் உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.

    நடை பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலமும், சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி எடுத்துக் கொள்வதன் மூலமும், மாதவிடாய் கோளாறுகளில் இருந்து முற்றிலும் குணம் பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும்.
    • அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.
    பெண்களுக்கு சாதாரணமாக 3 முதல் 7 நாட்கள் இருக்கும் மாதவிடாய் காலங்களில் சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். இது நபருக்கு நபர் வேறுபடும். இந்தக் காலங்களில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு 'பெரும்பாடு' (மெனோரேஜியா-Menorrhagia) என்று அழைக்கப்படுகிறது.

    மாதவிடாய் காலங்களில் ஒரு சிலருக்கும் அதிகளவு ரத்தப்போக்கு இருக்கும். மேலும் கை, கால் வலி, உடல் சோர்வாக இருக்கும். ஒரு சிலருக்கு அடுத்த மாதவிடாய் வருவதற்கு முன்பாகவே இடையிலும் ரத்தப்போக்கு வரும்.

    காரணங்கள்: கருப்பை சளிக்கவசம் கருப்பை உள்ளுறுப்புகளில் வளருதல் (Endometriosis), கருப்பை தசையான மயோமெட்ரியத்தில் எண்டோமெட்ரியம் வளருதல் (Adenomyosis), கருப்பையில் வளரும் சாதாரண தசைக் கட்டிகள் (Fibroid uterus), சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் (PCOD), சாக்கலேட் கட்டிகள் (Chocolate cyst), கருப்பை தசை கடினமடைதல் (Adenomyomas), பெண்மைக்குரிய ஹார்மோன்களான புரஜஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் இவைகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், கருத்தடைக்காக வைக்கப்படும் காப்பர்-டி போன்ற உபகரணங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது. இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப்போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை தகுதியான மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருத்துவம் பார்ப்பது சிறந்தது.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) திரிபலா சூரணம் ஒரு கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

    2) கொம்பரக்கு சூரணம் ஒரு கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்,

    3) திரிபலா சூரணம் ஒரு கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இருவேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

    4) வாழைப்பூ வடகம் ஒன்று அல்லது 2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்,

    5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை இரவு இருவேளை சாப்பிடலாம்,

    6) இம்பூறல் மாத்திரை ஒன்று அல்லது 2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

    7) உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை சாதம், முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • ‘கருப்பை வாய் புற்றுநோய்’ ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
    • ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

    மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைப்பிடிக்கும் சில ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள், அவர்களை பெரும் சிக்கலில் சிக்கவைத்துவிடுகிறது. தவறு என்பதை உணராமலே, காலங்காலமாக அதைச் செய்கிறார்கள்.

    பெண்கள் முக அழகிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்திற்கு கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே நாப்கினின் காலாவதி விவரங்களைக் கவனிப்பதில்லை.

    காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இரு மடங்கு கூடுதலானது. அதுவும் 'சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பல மடங்காகிறது.

    மேலும், எந்தெந்த நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா?, அந்த நாப்கினின் வெளி உலக கருத்து எப்படி இருக்கிறது? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.

    பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்-பேப்பர்-அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. அதில் டயாக்ஸின் என்ற நச்சுப்பொருள் இருப்பதால், பெண்மை சார்ந்த விஷயங்களில் பல ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகின்றன.

    பெரும்பாலான பெண்கள் அசுத்தம் நிரம்பிய நாப்கினை, 12 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஏனெனில் அசுத்தம் நிரம்பிய ரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். அவை பல்கிப் பெருகும் பட்சத்தில், பல ஆரோக்கிய சீர்கேட்டைச் சந்திக்க நேரிடும். ஏன்...? 'கருப்பை வாய் புற்றுநோய்' ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    நிறையப் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்துப் பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. அதேபோல மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன.

    தடுக்கும் வழிமுறைகள்...

    ஆரோக்கியமான, சுகாதாரமான இயற்கையான நாப்கின்களை பயன்படுத்துங்கள். அதாவது பிளாஸ்டிக் பொருட்களில் தயாராகும் நாப்கின்களைவிட, பருத்தி துணிகளில் தயாராகும் பாரம்பரிய முறையிலான நாப்கின்கள் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நாப்கின்களே, பெண் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் சிறந்தது. 24 மணிநேரமும் பாக்டீரியாக்களுடன் போராடக்கூடிய அயனிகள் அடங்கிய நாப்கின்களும் சந்தையில் இருக்கின்றன.

    ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை சீராக்கும் அகச்சிவப்பு கதிர் மற்றும் உடல் சோர்வடைவதைத் தவிர்க்க உதவும் காந்த சக்தி மற்றும் வைட்டமின் டி அடங்கிய சுகாதாரமான நாப்கின்களும் நிறைய இருக்கின்றன. இதனுடன், மண்ணில் எளிதாக மக்கக்கூடிய நாப்கின்களை தேர்வு செய்து பெண்ணையும், மண்ணையும் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்ல விஷயம் என்றாலும், ஆரோக்கியம் சார்ந்த, குறிப்பாகப் பெண்மை சார்ந்த விஷயங்களில் அதுபோன்ற தவறுகளைச் செய்துவிடக்கூடாது. முடிந்தவரை, இயற்கை முறையில் உயர்தரத்தில் தயாரான நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

    • சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்.
    • பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    'பைப்ரோஅடினோமா' எனப்படும் தசைக்கட்டிகள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிறது. முக்கியமாக 20 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் அளவு கூடுகிறது. ஆனால் இந்த வகை கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். இருப்பினும் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு இது புற்றுக்கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது.

    ஆகவே அவ்வப்போது இதனை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சித்த மருத்துவ தத்துவத்தின் படி, வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபமும் வாதமும் சீர் கேடடைந்து கபவாதம் என்ற நிலை உருவாகி இத்தகைய கட்டிகளை மார்பகத்தில் உண்டாக்குவதாக கூறுகின்றது.

    ஆக கபவாதத்தை சீர் செய்யும் மருந்துகளையும், கட்டிகளை கரைக்கும் மூலிகைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள நோய் நிலையில் முன்னேற்றம் வரும். இவை சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம். ஆக, பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. கட்டிகளை கரைக்கும் சித்த மருத்துவ மூலிகைகளாகிய அமுக்கராக் கிழங்கு, மஞ்சள், சேராங்கொட்டை, கொடிவேலி, கழற்சிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை நாடுவது நல்லது.

    இதில் அமுக்கராக் கிழங்கு கட்டிகளை கரைப்பதோடு மட்டுமின்றி, அது சார்பாக பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கி நன்மை பயக்கும். சேராங்கொட்டை எனும் கொடிய நஞ்சுடைய பாலினை கொண்ட மூலிகையின் நஞ்சினை போக்கி மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. இது சேரும் மருந்துகள் தசைக்கட்டி மட்டுமல்லாது புற்றுக்கட்டிகளிலும் நல்ல பலன் தருவதாக உள்ளது. மஞ்சள் எனும் மாமருந்து தசைகட்டிக்கும் நல்ல பலன் தரும். தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும். இன்னும் பல தாது கலப்பு மருந்துகள் மார்பக தசைக்கட்டிகளில் உதவக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவ மூலிகை கடைசரக்கான வெந்தயம் பால் சுரப்பிகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மார்பக அழற்சி எனும் வீக்கநிலையில் வெந்தயத்தை பயன்படுத்த பித்தம் குறைந்து வீக்கம் தணியும். அதற்கு வெந்தயத்தை அரைத்து பற்றாக்கி மார்பகத்தின் மீது போடலாம்.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மார்பகம் சார்ந்த குறிகுணங்களான, சுற்றி நெறிக்கட்டிகள் காணுதல், மார்பகத்தின் வடிவம் மற்றும் பருமன் மாறுபட்டு காணுதல், வழக்கத்திற்கு மாறான கசிவு, மார்பகத்தின் மேல் ரத்த நாளங்கள் விரிந்து காணுதல், மார்பகம் கடினமாக தோன்றுதல் ஆகிய குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து தோன்றினால் பெண்கள் எந்த வித தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான பரிசோதனை முறைகள் மூலம் மார்பகம் சார்ந்த நோய்களை முன்னதாகவே கணிக்க முடியும். சித்த மருத்துவம் மூலம் தீர்வு தந்து நலமான வாழ்வை நோக்கி நகர முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.
    • மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம்.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

    வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம். மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.

    இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

    மார்பகம் என்பது பெண்கள் பூப்பு அடைந்தபின் வளர்ச்சி அடையும் உறுப்பாக பலர் கருதுகின்றனர். உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, ஆறாவது வாரம் முதல் எட்டாவது வாரத்தில் மார்பகத்தின் வளர்ச்சி உண்டாவதற்கான ஆயத்தம் உடலில் உண்டாகி விடுகிறது. அதன் பின் மார்பகம் சார்ந்த பல்வேறு பகுதிகள் ஒவ்வொன்றாக உண்டாக துவங்கி விடுகின்றன. இத்தகைய வளர்ச்சியில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெண் ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் மட்டுமல்லாது மூளையில் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோலாக்டின் ஹார்மோன் தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் முதன்மையானது.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். இது 'சைக்ளிக் மாஸ்டால்ஜியா' என்று அழைக்கப்படும். இது மட்டுமில்லாது முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலியின் போது சித்த மருத்துவ கடைசரக்குகள் பயனுள்ளதாக உள்ளதை ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. கருஞ்சீரகம், சோம்பு, இஞ்சி, மஞ்சள், ஆளி விதை ஆகியன அதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கருஞ்சீரகத் தைலத்தை கொண்டு மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் சைக்ளிக் மார்புவலிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலிக்கு சோம்பு கசாயம் (பெருஞ்சீரகம்) கைகண்ட மருந்து. அதைப்போல் மார்பக வலிக்கும் பயன் தருவதாக உள்ளது. ஒமேகா-3 எனும் மருத்துவ குணமிக்க கொழுப்பு அமிலத்தை இயற்கையில் கொண்டுள்ள சித்த மருத்துவ மூலிகை ஆளி விதை. பெண்களின் மார்பக வலியை குறைப்பதில் இதுவும் பயனளிக்கும்.

    மஞ்சள் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் மார்பக வலிக்கும் சிறந்த பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. காரணம் இதில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் உடலில் வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிலாண்டின் என்ற வேதிப்பொருளின் செயலை தடுப்பதாக உள்ளது.

    இஞ்சியில் உள்ள 'ஜின்ஜிபேரின்' எனும் அல்கலாய்டு வேதிப்பொருள் உடலில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாகிலாண்டின் மற்றும் லியூகோட்ரின் ஆகியவற்றின் செயலை தடுத்து வலியை குறைக்கும் தன்மையுடையது. ஆக பெண்கள் ஒரு கோப்பை இஞ்சி டீ எடுத்துக்கொள்வது பெண்களின் மார்பக வலியை குறைக்கும் இயற்கை அலுப்பு மருந்தாக உள்ளது. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமைக்கு உதாரணம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும்.
    • தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிக்கும்.

    தூக்கமின்மை என்பது மெனோபாஸ் நிலையில் பெண்களை மிக அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும் குறிகுணமாக உள்ளது. இதில் பெண்கள் பலருக்கும் அனுபவம் இருக்கும். வாதம் பாதிக்கப்பட்ட பலருக்கு தூக்கமின்மை உண்டாகும். வாதத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்க உதவும் மூலிகையில் முக்கியமான ஒன்று பிரம்மி கீரை தான்.

    நீர்பாங்கான இடங்களில் சாதாரணமாக வளரும் மூலிகை இது. இதில் உள்ள 'ப்ரமினோசைடு' எனும் வேதிப்பொருள் நரம்புகளை வலுப்படுத்தி இயற்கையாக தூக்கத்தை உண்டாக்கும். 'பிரம்மி நெய்' என்ற சித்த மருந்தையும் இதற்கு பயன்படுத்தலாம். வாரம் இருமுறை பெண்கள் முக்கியமாக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பிரம்மி தைலம் கொண்டு எண்ணெய் முழுக்கும் எடுக்கலாம்.

    மேலும் தகரை மற்றும் சடாமாஞ்சில் ஆகிய மூலிகைகள் தூக்கமின்மையில் பலன் தருவதாக உள்ளன. இதில் 'வெலராநோன்' மற்றும் 'வெலபோட்ரைட்' ஆகிய மருத்துவக் குணமுள்ள வேதிப்பொருட்கள் இரண்டு மூலிகையிலும் உள்ளது.

    இவை நமது மூளையில் சுரக்கும் வேதி அமிலமான காபா-வின் சிதைவைத் தடுத்து தூக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தகரை வேர் அதிக வேதிப்பொருளைக் கொண்டு தூக்கமின்மையில் சிறப்பாக செயல்படக்கூடியது. இதனையும் தூக்கத்திற்காக ஏங்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

    • மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை.
    • வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    மெனோபாஸ் என்பது மாதவிடாய் இயற்கையான நிறுத்தமாகும் நிலை ஆகும். பெண்களின் கருவுறுதல் காலம் முடிவடையும் தருணமும் இதுதான். அந்நிலையில் பெண்களிடம் ஏற்படும் உடலியல் மற்றும் மனவியல் மாற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை உள்ளடக்கியதை 'மெனோபாஸல் சின்ரோம்', 'கடைபூப்பு குறிகுணங்களின் தொகுப்பு' என்று அறியப்படுகின்றது. இத்தகைய குறிகுணங்கள் அனைத்தும் உடலின் இயல்பான நிகழ்வுகள் தான் என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    உடல் பருமன் உள்ளவர்கள் விரைவிலே மெனோபாஸ் நிலையை எய்துவதாகவும், மெலிந்த தேகம் உள்ள பெண்களின் இறுதி மாதவிடாய் காலம் அதிகமானதாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிடாய் நிகழும் வரை தான் ஓவுலேஷன் எனும் அண்ட விடுப்பு நிகழும். அத்தகைய காலம் தான் கருவுறுதல் நடைபெறும் காலம். ஆக தாமதமாக திருமணமான பெண்கள், கருத்தரிப்பு தாமதமாகும் பெண்கள் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அப்போது தான் மாதவிடாய் சீராக இருக்கும். மெனோபாஸ் உண்டாகும் காலம் தள்ளி போகும். இது கருத்தரிப்புக்கு ஏதுவாக இருக்கும்.

    மேலும் இறுதி மாதவிடாய் நிலையை பல்வேறு உணவுப் பொருட்களும், உணவு முறை மாற்றங்களும், வாழ்வியல் மாற்றங்களும், இன்றைய நவீன வாழ்வியலில் மதுபானம், புகையிலை போன்ற பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கும் தன்மையுள்ளதாக உள்ளது. இத்தகைய கடைசி பூப்பில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறைவு. அதற்கு தீர்வாக எச்.ஆர்.டி எனும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொள்வது பல்வேறு நோய்நிலைகளை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது.

    முக்கியமாக ஈஸ்ட்ரோஜென் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை உண்டாக அதிகம் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு தொடர்ந்து இத்தகைய ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வோருக்கு மாரடைப்பு கூட வரக்கூடும் என்கின்றன சில ஆய்வுகள். இதுமட்டுமின்றி சர்க்கரை நோய், கருப்பை புற்றுநோய், பித்தப்பை நோய்கள், மன அழுத்தம் போன்ற நோய்நிலைகளை உண்டாக்க இந்த ஹார்மோன் மாற்று சிகிச்சை காரணமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. ஆக மருத்துவர் ஆலோசனைப்படி தேவைப்படும் நபர்கள் மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, பெண்கள் உடலுக்கு தேவையான தாவர ஈஸ்ட்ரோஜென் பல்வேறு மூலிகைகளில் இயற்கையாக உள்ளதால் அவற்றை நாடுவது நலம் பயக்கும்.

    அந்த வகையில் சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம் ஆகிய நாடி குற்றங்கள் இரண்டும் மாறுபாடு அடைந்து மெனோபாஸ் சார்ந்த குறிகுணங்கள் உண்டாவதால், அத்தகைய நாடிகளை சீர் செய்யும் பொருட்டு மருந்துகளையோ, மூலிகைகளையோ எடுத்துக்கொள்வது நல்ல முன்னேற்றம் தரும். பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் வாதத்தின் சார்பாக நரம்பு தளர்ச்சி, மனப்பதட்டம், மனநிலை மாற்றங்கள், கருவாய் வறட்சி, தோல் வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை, லேசான வெப்பம், மலச்சிக்கல், மார்பு படபடப்பு மற்றும் மூட்டு வலி போன்ற பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கும். இத்தகைய நிலைகளில் வாதத்தை குறைக்க பல்வேறு மூலிகைகள் பயன்படுவதாக உள்ளன.

    நரம்பு தளர்ச்சி, மன பதட்டம், மன அழுத்தம் போன்ற குறிகுணங்களுக்கு அமுக்கரா கிழங்கு நல்ல பலன் அளிக்கும். ஏற்கனவே கூறியதைப் போல் அமுக்கரா கிழங்கு பெண்களின் அனைத்து பருவ நிலைகளிலும் உண்டாகும் பல்வேறு நோய்நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதனை தினசரி 2 முதல் 5 கிராம் வரை பாலுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் நிம்மதியான தூக்கமும் வரும். ஏனெனில் இறுதி மாதவிடாய் நிலைகளில் தூக்கம் கெட்டு பல பெண்கள் அன்றாட வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

    மூட்டு வலி, உடல் வலிகளுக்கு எளிய நல்ல பலன் தரும் மூலிகை நொச்சி தான். அவ்வப்போது நொச்சி இலையை மஞ்சள் பொடியுடன் சேர்த்து ஆவி பிடிக்கலாம். நொச்சி இலையை மிளகுடன் சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் மூட்டு வலிக்கு நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள லூட்டியோலின், குர்சிடின் ஆகிய வேதிப்பொருட்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதாகவும், நமைச்சலை நீக்குவதாகவும் உள்ளது. இந்த எளிய மூலிகையை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    • பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும்.
    • மெனோபாஸ் நெருங்கும் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு எடுத்துக்கொள்ள நன்மை செய்யும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் தருணத்தில் பித்தத்தின் சார்பாக அதிகம் கோபம், அடிக்கடி எரிச்சலாதல், அதிக உடல் சூடு, அதிக வெப்பத்தை உணருதல், அதிக வியர்வை, முகப்பரு, சில சமயம் தோல் தடிப்பு ஆகிய குறிகுணங்கள் உண்டாகி வருத்துவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இத்தகைய குறிகுணங்களில் பித்தத்தை குறைக்கும்படியான உணவும், மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உள்ளது.

    பித்தத்தை குறைக்குப்படியான பல்வேறு மூலிகைகள் மெனோபாஸ் பித்தம் சார்ந்த குறிகுணங்களுக்கு நற்பலன் தரும். அதிமதுரம், தண்ணீர்விட்டான் கிழங்கு, சந்தனம்,சீரகம், வெந்தயம், வெட்டிவேர், வெண்பூசணி, சோற்றுக்கற்றாழை போன்ற மூலிகைகள் அவற்றுள் சில. இவை முக்கியமாக மெனோபாஸ் நிலையில் பெரும்பாலான பெண்கள் அவதியுறும் 'ஹாட் பிளஷஸ்' எனும் 'திடீர் வெப்ப உணர்வு' குறிகுணத்தினை குறைக்க உதவுவதாக உள்ளன.

    அதிமதுரம், சீரகம், சோம்பு இவை மூன்றையும் கலந்து பாலுடன் சேர்த்து பால் கசாயமிட்டு குடிக்க பித்தம் சார்ந்த அனைத்து குறிகுணங்களுக்கும் நல்ல பலனை அளிக்கும். முக்கியமாக அதிமதுரத்தில் உள்ள டெர்பீன்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருட்கள் ஹாட் பிளஷஸ் குறிகுணத்தை குறைப்பதாக உள்ளது. ஆனால் அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு அதிமதுரம் ஏற்புடையது அல்ல. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பித்தத்தைக் குறைக்கும் 'சீரக சூரணம்' எனும் மருந்து மேற்கூறிய குறிகுணங்களை குறைக்க உதவும்.

    தண்ணீர்விட்டான் கிழங்கு எனும் சித்த மருத்துவ மூலிகை மெனோபாஸ் நிலையில் உண்டாகும் பல்வேறு குறிகுணங்களுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மெனோபாஸ் நெருங்கும் தருவாயில் பெண்கள் தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயமிட்டு எடுத்துக்கொள்ள பித்தவாதம் குறைந்து பெரும்பாலான குறிகுணங்கள் குறைந்து பெண்களுக்கு நன்மை செய்யும். அல்லது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள 'தண்ணீர்விட்டான் நெய்' அல்லது 'சதாவேரி லேகியம்' ஆகிய மருந்துகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

    இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், பிற ஹார்மோன்களை சமநிலைப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும் இதனால் இறுதி மாதவிடாய்க்கு பின்னர் உண்டாகும் கருவாய் வறட்சி, எரிச்சல் ஆகிய குறிகுணங்களும் நீங்கும். பெண்கள் மேற்கூறிய பித்தம் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படும்போது சீரக தண்ணீர் எடுத்துக்கொள்வதும், வெட்டிவேர் மற்றும் சந்தனம் ஊறல் நீர் குடிப்பதும் கூட குறிகுணங்களை சமாளிப்பதில் ஏதுவானதாக இருக்கும்.

    வெந்தயம் எனும் எளிய கடைசரக்கு அதிகப்படியான டெஸ்டோஸ்டீரோன் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் மெனோபாஸ் நிலையில் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆக அவ்வப்போது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமை, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெந்தயம் ஏற்புடையது அல்ல.

    பித்தத்தை குறைத்து நன்மை பயக்கும் சோற்றுக்கற்றாழையை அவ்வப்போது சாறாகவோ அல்லது குமரி எண்ணெய், குமரி லேகியம் போன்ற சித்த மருந்துகளாக எடுத்துக்கொள்ள பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும். நாம் உணவில் பயன்படுத்தும் வெண்பூசணி பித்தத்தை குறைப்பதில் பயனளிக்கும். ஆக, சித்த மருந்தான வெண்பூசணி நெய் கூட பயன்படும். மூலிகைகளை கடந்து சங்கு பற்பம், பவள பற்பம், வெள்வங்க பற்பம் போன்ற இன்னும் பல பற்ப, செந்தூர சித்த மருந்துகள் பயன்படும் வகையில் உள்ளது.

    மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு இயற்கையாகவே குறைவதால் உண்டாகும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களில் முக்கியமான ஒன்று உடல் எடை கூடுதல். இதனால் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, எச்.டி.எல் எனும் நன்மை பயக்கும் கொழுப்பின் அளவு குறையக்கூடும். ஆகையால் பெண்கள் கருஞ்சீரகம், சீரகம் ஆகிய இரண்டையும் வறுத்துப்பொடித்து எடுத்துக்கொள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

    தொடர்புக்கு: drthillai.mdsiddha@gmail.com

    • மாதவிடாய் கப் பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாது.
    • பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய்க் காலப் பயன்பாட்டுக்குக் கிடைத்திருக்கக் கூடிய மிகப் பெரிய வரம், இந்த மாதவிடாய் கப் என்று கூறலாம். பார்ப்பதற்கு சிறிய அளவிலான கப் போன்று இருக்கும் இந்த மாதவிடாய் கப் பல வருடங்களாகப் பயன்பாட்டில் இருந்தாலும், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

    சிலிகானால் செய்யப்பட்ட மாதவிடாய் கப், பெரும்பாலும் அலர்ஜியை ஏற்படுத்தாத வகையிலே தயாரிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திய பின் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்த பின்னர், மறுமுறை பயன்படுத்தலாம். பல ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுத்தப்படுத்துவதால் அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை.

    சிறுநீர் வெளிவரும் வழி, இனப்பெருக்க வழி, மலத்துளை இவை மூன்றையும் தசை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கும். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்தினால் தசைத் தளர்வால் அது இறங்கிவிடும் என்ற அச்சம் தேவையற்றது.

    காப்பர் டீ உள்ளிட்ட கர்ப்பத்தடை சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் மாதவிடாய் கப் பயன்படுத்தும்போது, அந்தச் சாதனங்கள் தங்களது நிலையில் இருந்து மாறிவிடுமோ என்று அச்சப்படலாம். அவ்வாறு நிச்சயமாக நிகழாது.

    எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

    நின்ற நிலையில், அல்லது இண்டியன் டைப் டாய்லெட்டை பயன்படுத்தும்போது அமரும் நிலையில் அமர்ந்து மாதவிடாய் கப்பை பொருத்தவேண்டும். இப்படிச் செய்வது மிகச் சிறந்தது.

    பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், மாதவிடாய் கப்பை இரண்டாக மடித்து உள்ளே செலுத்த வேண்டும். பின் அதனை விடுவிக்கும் போது பாராசூட் போன்று விரிவடையும். அதன்பின் அதனை மெதுவாகச் சுழற்றினால் சரியாகப் பொருந்திவிடும். அதேபோல, ரிமூவ் செய்யும்போது ஆள்காட்டி விரலால் அதற்குச் சிறிது அழுத்தம் கொடுத்தால் தானாக வெளிவந்துவிடும்.

    மாதவிடாய் கப்களில் பல அளவுகள் உள்ளன. பொருந்தும் அளவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

    மாதவிடாய் கப்பை பயன்படுத்துவதில் மேலும் சந்தேகங்கள் இருப்பின் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்தும்போது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை எடுத்துச் சுத்தப்படுத்தி மறுபடி பயன்படுத்துங்கள். நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படக் கூடிய அலர்ஜி இதில் ஏற்படாது.

    ஒரே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். மாதவிடாய் கப்பை பயன்படுத்தும் போது காயம் தவிர்க்க விரல்களில் நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ×