search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Members"

    • புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
    • பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, துறைக்கு தொடர்பில்லாதவர் பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் செயல்பாடுகள் திருப்தியி ல்லாததால் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும்.காலியாக உள்ள கண்காணிப்புப் பொறி யாளர், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வரைவாளர் பதவிகளை தகுதி வாய்ந்த வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், முதிர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    • பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தர். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இதில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையை அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தர வேண்டும். ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    இறுதியில், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி சென்று இளைஞர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மாவட்ட ஒன்றிய, நகர ,பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்று பேசினார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ராஜேஷ் கண்ணா , கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    தி.மு.க. தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி ஆதரவற்ற , முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    அன்றைய தினம் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    • 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.
    • அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பேணி காக்கும் பொருட்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது.

    மேற்படி நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியிடத்து விபத்து மரணம் போன்றவற்றுக்காக நிவாரண உதவி, நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேற்படி அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை கடநத 19-6-2020 முதல் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளும் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

    நலவாரியங்களில் உறுப்பினராக சேர்வதற்கு பணிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் போன்ற ஆவணங்களுடன் http://www.tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு கோரி விண்ணப்பித்து கொள்ளலாம்.

    ஏற்கனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள் தங்களது பதிவினை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணையதளம் வழியாக புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    எனவே நெல்லை மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் மேற்கண்டவாறு நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து வாரியங்கள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.

    இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம், கூடுதல் பொறுப்பு) குலசேகரன் தெரிவித்துள்ளார்.

    • புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நத்தபள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நடராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் தலைஞாயிறு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உறுப்பினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகில் இச்சிப்பாளையத்தில் அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று இரவு 9.30 மணிக்கு சங்கத்தின் செயலாளர் பரமேஸ்வரன் (51) எழுத்தர் வைத்தி(45) இருவரும் சங்கத்தின் ‌ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

    அப்போது அங்கு அருகில் உள்ள சங்க உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து இரவு நேரத்தில் சங்கத்தை திறப்பதன் அவசியம் என்ன என்று சங்கத்தை முற்றுகை இட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் விரைந்து வந்து சங்க செயலாளாளர் பரமேஸ்வரனிடம் விசாரனை நடத்தினர்.

    ஈரோடு கூட்டுறவு துணைப்பதிவாளர் இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்திட சில ஆவணங்களை உடனடியாக கொண்டு வரச் சொல்லி உள்ளார் அதற்காக தான் வந்தோம் என்று கூறியதை உறுதி செய்த பிறகு சங்க உறுப்பினர்களிடம் கூறி ஆவணங்களை எடுத்துக் செல்ல அனுமதித்தனர்.

    இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 18 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் இதுவரையிலும் வழங்கப்படவில்லை எனவே தான் இந்த நிலையில் இரவு நேரத்தில சங்கம் திறக்கப்பட்டதால் எங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது அதனால் தான் அனைவரும் ஒன்று திரண்டோம் என கூறினார்கள்.

    இதனால் அந்தப் பகுதியில் கமர் 3 மணி நேரம் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. #tamilnews
    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
    தூத்துக்குடி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அலுவலர்களுக்கு தேர்தல் கல்விக்குழு தொடர்பான பயிற்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது;-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக 67 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். வாக்காளர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, தேர்தல் கல்விக் குழு உறுப்பினர்கள், தொடர்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்விக்குழுவின் செயல்பாடுகளை தொடர்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்து குழுவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலில் தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், தேர்தல் தாசில்தார் நாகராஜன், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பள்ளிக்கல்லூரி தேர்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    கர்நாடக மாநில சட்டமன்ற மேல்சபைக்கு இன்று 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேல்சபையில் உள்ள 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    காலியாகும் மேல்சபை பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த ரவிகுமார், தேஜஸ்வினி கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, கே.பி.நஞ்சுன்டி, ருத்ரே கவுடா ஆகியோர் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். காங்கிரஸ் சார்பில் சி.எம்.இபுராகிம், கே.கோவிந்தராஜ், அரவிந்த் குமார், ஹரிஷ் குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எப்.எம்.பாரூக், எஸ்.எல்.பைரே கவுடா ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேற்கண்ட 11 பேரும் கர்நாடக மாநில சட்டமன்ற மேல்சபைக்கு இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று தேர்வாகியுள்ளவர்களில் ரகுநாத் ராவ் மல்காபுரே, சி.எம்.இபுராகிம் மற்றும் கே.கோவிந்தராஜ் தற்போது மேல்சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்த தேர்தலின் மூலம் இவர்களின் பதவிக்காலம் இன்னும் ஆறாண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×