search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melborun Text"

    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை நெருங்கியது. #AUSvIND
    மெல்போர்ன்:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும்  25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.


    ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார். இந்திய வீரர்கள் மயங்க் அகர்வாலை தவிர முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொதப்பினார். இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் நேற்றைய ஆட்ட நேர முடிவில், 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து இருந்த போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனைத்தொடர்ந்து இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை துவங்கி ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன் சேர்த்தனர்.


    நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கவாஜா, 33 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ஷமியிடம் விக்கெட்டை இழந்தார்.  இதேபோல் ஷேன் மார்ஷ் (44) விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவரை ஜடேஜா அவுட் ஆக்கினார். நீண்டநேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஹெட் 34 ரன்களில் அவுட் ஆனார். 157 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. வெற்றிக்கு 242 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் வீரர்கள் வெளியேறியதையடுத்து, இந்தியா வெற்றியை நெருங்கியது. எனினும் விக்கெட்டைக் காப்பாற்ற பின்வரிசை வீரர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். மிகவும் நிதானமாக ஆடிய டிம் பெயின் 26 ரன்களில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டார்க் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 215/8

    கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் பொறுப்புடன் ஆடிய கம்மின்ஸ் அரை சதம் கடந்தார்.  அவர் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்சுடன் லயன் (6 ரன்) களத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட்டுகளே உள்ளன. இதன்மூலம் இந்தியா வெற்றியை நெருங்கி உள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2 விக்கெட்டுகளையும் இந்தியா கைப்பற்றி, கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #AUSvIND #TeamIndia
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. #AUSvIND #Pujara #Viratkohli
    மெல்போர்ன்:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் அடிலெய்டுவில் நடந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நேற்று தொடங்கியது. அகர்வால் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

    ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து இருந்தது. தனது முதல் டெஸ்டிலேயே தொடக்க வீரரான அகர்வால் முத்திரை பதித்தார். அவர் 76 ரன்கள் எடுத்தார். புஜாரா 68 ரன்னும், வீராட்கோலி 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. புஜாராவும் கோலியும் தொடர்ந்து விளையாடினார்கள்.


    இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை தொடர்ந்து நம்பிக்கையுடன் எதிர் கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி அரை சதத்தை தொட்டார். 110 பந்துகளில் 6 பவுண்டரியுடன் அவர் 50 ரன்னை எடுத்தார். 105. 3-வது ஓவரில் இந்திய அணி 250 ரன்னை தொட்டது.


    மறுமுனையில் இருந்த புஜாரா மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 280 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். இந்த டெஸ்ட் தொடரில் இவருக்கு 2-வது செஞ்சூரியாகும். அடிலெய்டு டெஸ்டில் 123 ரன்கள் குவித்து இருந்தார்.

    67-வது டெஸ்டில் விளையாடும் புஜாராவுக்கு இது 17-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.

    மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து இருந்தது. புஜாரா 103 ரன்னும், கோலி 69 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் வீராட்கோலி ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அவர் 82 ரன்னில் வெளியேறினார். 204 பந்துகளில் 9 பவுண்டரியுடன் கோலி இந்த ரன்னை எடுத்தார். அவரது விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார்.

    கோலி ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 293 ரன்னாக இருந்தது. அவரும், புஜாராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்தனர்.

    அடுத்து ரகானே களம் வந்தார். கோலி ஆட்டம் இழந்த சிறிது நேரத்தில் புஜாராவும் வெளியேறினார். அவர் 319 பந்தில் 10 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்தார். கும்மின்ஸ் அவரை ‘அவுட்’ செய்தார்.

    5-வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். 126.3-வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.

    தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்து இருந்தது. ரகானே 30 ரன்னிலும், ரோகித்சர்மா 13 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரகானே 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரிசப்பண்ட் களம் வந்தார். 161.5-வது ஓவரில் இந்தியா 400 ரன்னை தொட்டது. ரோகித்சர்மா 97 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.

    ரிசப்பண்ட் 39 ரன்னும், ஜடேஜா 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    இந்திய அணி 169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 437 ரன் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது. கும்மினஸ் 3 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆரோன் பிஞ்சும், ஹாரிசும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஹாரிஸ் 5 ரன்களும், பிஞ்சு 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.  #AUSvIND #Pujara #Viratkohli
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். #AUSvIND #Pujara #Viratkohli
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கை செய்தது.

    அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.


    இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா - விராட் கோலி ஜோடி நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாடியது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும்.

    இந்திய அணி 117 ஓவர்கள் நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 103 ரன்களுடனும் கோலி 69 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.  #AUSvIND #Viratkohli #Pujara
    ×