search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mea"

    அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் பட்டியலை தாக்கல் செய்ய மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #RTI #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் போது பாதுகாப்பு அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் தவிர, பிரதமருடன் செல்லும் தனி நபர்கள் குறித்த விபரங்களை தர வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

    இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சகம் தர மறுக்கவே, மத்திய தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், “பிரதமருடன் விமானத்தில் பயணிக்கும் தனி நபர்கள் குறித்த பட்டியலை மனு தாரருக்கு அளிக்க வேண்டும்” என தலைமை தகவல் ஆணையர் மாத்தூர் வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். 
    நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. #NiravModi #NiravPassport
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.



    இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியிடம் 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. கடைசியாக இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சமீபத்தில் ஜூன் 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றபோது பாஸ்போர்ட் விவரங்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

    நிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் பெற்றார் என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிரவ்  மோடி விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.

    அதாவது, நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் எந்த கட்டத்திலும் இருக்காது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நிரவ் மோடிக்கு புதிதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்போதும், அவரது முந்தைய பாஸ்போர்ட் தானாக ரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு தெரியப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை கண்டறிய உதவும்படி கூறியிருப்பதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார். #NiravModi #NiravPassport
    கோகினூர் வைரம், திப்பு சுல்தான் போர்வாள் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர அரசு செய்தது என்ன? என பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். #CIC #PMO #MEA
    புதுடெல்லி:

    கோகினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் மதுக்கோப்பை, திப்பு சுல்தானின் போர்வாள், புத்தர் பாதம், சரஸ்வதி மார்பிள் சிலை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பொக்கிஷங்கள் முந்தைய காலங்களில் பல்வேறு படையெடுப்பின் கீழ் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    இதற்கிடையே, இந்தியாவின் இந்த பொக்கிஷங்கள் எப்போது இங்கு கொண்டுவரப்படும் என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் தொல்லியல் துறையை நாடுமாறு பதிலளித்துள்ளனர்.



    இதையடுத்து, தொல்லியல் துறையிடம் கேட்டதற்கு, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை கொண்டு வருவது நாங்கள் அல்ல. இருக்கும் பொருள்களை அப்படியே பார்த்துக் கொள்வதுதான் எங்கள் வேலை என தெரிவித்தனர்.  இதனை அடுத்து மனுதாரர் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

    மேல்முறையீட்டு மனுவை விசாரித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆசார்யுலு இதுதொடர்பாக, வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கலாச்சார துறை அமைச்சகம் பதிலளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். #CIC #PMO #MEA
    ×