search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayam"

    • அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகள் காவ்யா (வயது 19). இவர் ஆமத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த காவ்யா திடீரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான என்ஜினீயரிங் மாண வியை தேடி வருகின்றனர்.

    சின்னகாரியாபட்டி ஜெகஜீவன் ராம் தெருவை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மகள் வள்ளிமுத்து (வயது 18). இவர் விருது நகரில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார். சம்ப வத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற வள்ளி முத்து திடீ ரென மாயமானார். பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் செல் வராஜ் (55). மனநலம் பாதிக் கப்பட்டிருந்த இவர் சம்பவத் தன்று மாயமானார். இது குறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் அச்சின் (வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் குறித்து அவரது தாய் ரேவதி உசிலம்பட்டி டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது 17 வயது மகள் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ரோகிணி (வயது 19) என்ற மகள் உள்ளனர். ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி ரோகிணி கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகிணியின் சகோதரர் ராஜகுரு சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாணவி ரோகிணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவிகள் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொ.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 19). இவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் செக்கானூரணி பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரமங்கலம் அருகே உள்ள சக்கரப்ப நாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகள் கௌசல்யா (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்-தனியார் ஊழியர் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் புஷ்பகலா (வயது 23). பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று வேல்முரு கன் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகள் வீட்டில் இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத் தில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மான புஷ்பகலாவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் முத்துசங்க ரன் (36). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு கடன் கொடுத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து கணவரை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி முத்துமாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணன்கோவில் உதயா நகரை சேர்ந்தவர் நஜூமுதீன். இவரது மகன் பசீல்ரகீம். இவர் வெளியூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் நஜூமுதீன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன் 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
    • தங்கசாமியை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் துறை முகத்திலிருந்து கடந்த 14 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்ப டையில் மோகன், இளையராஜா,ரகு, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை நம்பியார்நகரை சேர்ந்த தங்கசாமி என்பவர் படையிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிக்கல் மயில் தொலைவில் கடலில் விழுந்ததார்.

    இதனையடுத்து சக மீனவர்களும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மாயமானதால் உடனடியாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காரைக்காலில் துறைமுக த்திலிருந்து 12 விசை ப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கசாமியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலமும் தேடும் பணியை தொடங்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே தாத்தா வீட்டில் தங்கியிருந்த இளம்பெண் திடீர் மாயமாயானார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த பெண் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டிபட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் கோபி–ராஜ் மகள் மலர் (வயது 19). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகள் மலரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்து–பட்டி போலீஸ் சரகத் திற்கு உட்பட்ட நக்கலக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகுமலை (62) வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    கடந்த 4 மாதங்களாக மலர் அங்கு தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மலர் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீ–சார் வழக்குப்பதிவு செய்து மாயமான மலர், தானாகவே எங்கேனும் சென்றாரா அல்லது யாராவது மர்ம நபர்களால் கடத்தப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசா–ரணை மேற்கொண்டு வருகி–றார்கள்.

    • மீரா தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
    • வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மீரா (17), தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவர்,நேற்று காலை10மணிக்கு டியூஷன் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்துபுறப்பட்டுசென்றவர் வீடுதிரும்பவில்லை.பலஇடங்களில்தேடியும் எங்கும் கிடைக்காததால் மீராவின் தந்தை முருகன்பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • கல்லூரி மாணவி- இளம்பெண் மாயமாகினர்.
    • ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த வர் சுந்தரராஜன். இவரது மகள் சுபஸ்ரீ(வயது23). முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடு கள் செய்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தந்தையிடம் சுபஸ்ரீ கூறியுள்ளார்.

    அதற்கு அவரை பற்றி விசாரித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபஸ்ரீ மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. இதை தொடர்ந்து பாண்டியன்நகர் மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் சுந்ததராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சி புரத்தை சேர்்ந்த நடராஜ். இவரது மகள் அங்காளஈஸ்வரி(19). காக்கிவாடன்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து வெம்பக்கோட்டை ேபாலீஸ் நிலையத்தில் நடராஜ் புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.
    • அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா (வயது 40). இவர் திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று காலை கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் லதாவின் கணவர் பூபதி, மாலை வரை தனது மனைவி வீட்டுக்கு வராதால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூபதி, பல்வேறு இடங்களில் லதாவை தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய் துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் லதா, தானாக எங்காவது சென்று விட்டா ரா? அல்லது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் கிராம நிர்வாக அலுவலர் திடீரென மாய மான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×