search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mary Kom"

    பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஒன்றில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் வட கொரியாவை சேர்ந்த கிம் ஹயாங் மியை எதிர்கொண்டார். இதில் மேரி கோம் கிம் ஹயாங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே, 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். #MaryKom #WorldBoxing
    உலக மகளிர் குத்துச்சண்டை அரை இறுதி போட்டியில் மேரிகோம், சாஹல், லோவிலினா, சிம்ரன்ஜித் கவூர், ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி உள்ளது. #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.

    பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.

    35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.

    தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal  #WorldBoxing
    பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறி 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #MaryKom #WorldBoxing
    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 48 கிலோ ‘லைட் பிளைவெயிட்’ பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம் சீனாவில் வு யு-வை எதிர்கொண்டார். இதில் மேரி கோம் 5-0 என வு யு-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் 35 வயதாகும் மேரி கோம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதற்கு முன் 2010-ல் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.



    இந்த வெற்றி குறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘இது ஒரு கடினமான சண்டை. மிகவும் கடினமான சண்டையில்லை. அதேவேளையில் மிகவும் எளிதானதும் கிடையாது. ஏராளமான சிறந்த சீன வீராங்கனைகள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான சீன வீராங்கனைகளை சந்தித்துள்ளேன். ஆனார், வு யு-வை இதற்கு முன் நான் எதிர்கொண்டது கிடையாது’’ என மேரி கோம் தெரிவித்தார்.
    உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம், மனிஷா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    புதுடெல்லி:

    10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 48 கிலோ உடல் எடைபிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த இந்திய வீராங்கனையும், 5 முறை உலக சாம்பியனுமான மேரிகோம், அய்ஜெரிம் கேசனாயேவாவுடன் (கஜகஸ்தான்) கோதாவில் இறங்கினார். இது தலா 3 நிமிடங்கள் வீதம் மூன்று ரவுண்ட் கொண்ட ஆட்டமாகும். முதல் ரவுண்டில் ஆதிக்கம் செலுத்திய மேரிகோம், 2-வது ரவுண்டில் கொஞ்சம் தடுமாறினார். சில குத்துகளை வாங்கிய மேரிகோம், ஒரு முறை களத்தை சுற்றி இருக்கும் கயிற்றிலும் எதிராளியால் தள்ளப்பட்டார். இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட மேரிகோம் கடைசி ரவுண்டில் தடுப்பாட்டத்தில் கவனமாக இருந்ததோடு, ஆக்ரோஷமாக சில குத்துகளை விட்டு புள்ளிகளை சேர்த்தார். 5 நடுவர்களும் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, மேரிகோம் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.



    மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மேரிகோம் கூறுகையில், ‘இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அது இப்போது எனக்கு பழகி போய் விட்டது. குத்துச்சண்டை களத்திற்குள் புகுந்ததும் எனது நம்பிக்கை அதிகரித்து விடும். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது சந்தோஷம் அளிக்கிறது. ஆனாலும் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்றார். மேரிகோம் கால்இறுதியில் சீனாவின் யு வூவை நாளை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் ‘இளம் புயல்’ இந்தியாவின் மனிஷா மோன் 54 கிலோ பிரிவில் உலக சாம்பியன் டினா ஜோலாமானுடன் (கஜகஸ்தான்) மல்லுக்கட்டினார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த மனிஷா 5-0 என்ற புள்ளி கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 29-28) உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார். ‘மிகவும் நம்பிக்கையுடன் ஜோலாமானை எதிர்கொண்டேன். களத்திற்குள் வந்ததும் எதிராளி உலக சாம்பியனா அல்லது வெண்கலம் வென்றவரா என்பது எனக்கு ஒரு பிரச்சினையே கிடையாது’ என்று மனிஷா குறிப்பிட்டார்.

    இதே போல் லவ்லினா போர்கோஹைன் (இந்தியா) 69 கிலோ பிரிவில் ஏதெய்னா பைலோனையும் (பனாமா), பாக்யபதி கச்சாரி (இந்தியா) 81 கிலோ பிரிவில் ஜெர்மனியின் அரினா நிகோலெட்டாவையும் தோற்கடித்து கால் இறுதியை உறுதி செய்தனர்.

    அதே சமயம் முன்னாள் சாம்பியன் இந்தியாவின் சரிதா தேவி ஏமாற்றம் அளித்தார். அவர் 60 கிலோ பிரிவில் 2-3 என்ற புள்ளி கணக்கில் அயர்லாந்தின் கெலி ஹாரிங்கிடம் தோற்று வெளியேறினார். போட்டிக்கு பிறகு 36 வயதான சரிதா தேவி கூறுகையில், ‘நடுவர்களின் தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மூன்று ரவுண்டிலும் எனது கை தான் ஓங்கி இருந்தது. ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஆசிய போட்டியின் போது சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தேன். அதனால் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என்றார். #WorldBoxing #Championship #MaryKom #ManishaMaun
    ×