என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "marriage function"
சென்னை:
வடபழனி முருகன் கோவிலில் நடைபெறும் காதுகுத்து நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைக்கு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை பையுடன் காணாமல் போனது.
இதுபற்றி வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்ய பிரகாசம், இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். கோவிலில் உள்ள 2 கேமராக்களை ஆய்வு செய்த போது பட்டுச்சேலை உடுத்தி நகைகளை அணிந்தபடி சுற்றித்திரிந்த பெண் ஒருவர் சிக்கினார். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
அந்த பெண்ணை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அவர் மீண்டும் கைவரிசை காட்டுவதற்காக கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அதன்படி மீண்டும் கோவிலுக்கு வந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் விஜயசாந்தி, கடலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
விஜயசாந்தியை கைது செய்த போலீசார் 4 பவுன் நகையை மீட்டனர். இவர் 2006-ம் ஆண்டில் இருந்து இதுபோன்று கோவில்களில் திருமண நிகழ்ச்சியில் புகுந்து நகை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்