search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஜூலை மாதம் இரு மாணவர்கள் காணாமல் போனார்கள்
    • காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.

    கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு, இவர்கள் இருவரின் உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

    அனைவரையும் அதிர்ச்சியுற செய்திருக்கும் இந்த படுகொலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:

    இனப்படுகொலைகளில் குழந்தைகள்தான் பலிகடா ஆகிறார்கள். அவர்களை காக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது நமது கடமை. கொடூர கொலை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், "வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. மணிப்பூர் காவல்துறை முழு ஒத்துழைப்பையும் தந்து வருகிறது. குற்றவாளிகளை தேடும் வேட்டை துவங்கி விட்டது" என தெரிவித்தார். 

    • மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் காரணமாக கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
    • கலவரம் காரணமாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

    மணிப்பூரில் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட மொபைல் இணைய சேவைகள் தற்போது நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் இன்று காலை வெளியிட்டார்.

    போலி செய்திகள், தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு மொபைல் இணைய சேவைகளை மே 3-ம் தேதியில் இருந்து தடுத்து நிறுத்தி வைத்து இருந்தது. இந்த தடை இன்று மாநிலம் முழுக்க நீக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியா மியான்மர் எல்லை வழியாக சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து நிறுத்த மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், மத்திய அரசு மணிப்பூரில் உள்ள 60 கிலோமீட்டர் எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

    • 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது
    • மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர். ரோக அருள்தாஸ், பொதுச்செயலர். கலைமணி, பேரவை தலைவர். முருகையன், கவுரவத் தலைவர் திருமால் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மணிப்பூரில் நடந்து சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே வெட்கப்பட வைத்துள்ளது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணம் செய்து ஊர்வலமாக நடத்தப்பட்ட சம்பவமும் , 160-க்கும் மேல் அப்பாவி மக்களை கொன்று குவிக்கப்பட்டது, இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தான் நடந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் காவல்துறையில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளனர். ஆனால் 2 பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லபட்ட வீடியோ தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய பா.ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவர்களை நேரில் சென்று ஆறுதல் கூற வராதது அம்மாநிலத்தில் நடக்கும் அநிதிக்கு துணை போவதாகவே ஆதிதிராவிடர் இயக்கம் கருதுகிறது.

    தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் நடந்து வரும் கலவரத்திறகு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பும் உரிய நிவாரணம், இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் சத்யராஜ் மகள் ஈடுபட்டுள்ளார்.
    • மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன.

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

    மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார்.

    அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். இந்த பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறி னார்.

    • மணிப்பூரில் கலவரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கலவரத்தின் உச்சகட்டமாக பெண்கள் வன்கொடுமை தாக்குதலுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

    அதன் வெளிப்பாடாக இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் செய்த கும்பல் அதனை சமூக வலைத்தளத்திலும் பரவச் செய்துள்ளது.

    இத்தகைய சம்பவத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    அந்த வகையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் எதிரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் 2000த்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டு மணிப்பூரில் நடைபெற்று வரும் அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட வீடியோ பதிவில் உள்ள அனைவரும் கைது செய்ய வேண்டும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்ட கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.


    77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.

    பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.

    • இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • மணிப்பூரில் நிகழ்ந்த இந்த வன்கொடுமைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்… கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.





    • இணையதள முடக்கம் காரணமாக மக்களில் பெரும் பகுதியினர் வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
    • குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வன்முறை வெடித்தது. பல இடங்களில் வன்முறை தாக்குதல்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. இணையதள சேவை முடக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டு மக்களில் பெரும் பகுதியினர் மணிப்பூரில் பரவிய வன்முறையின் தீவிரத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த வீடியோவின் தாக்கம் மணிப்பூரின் சுராசந்த்பூரில் இன்று தீவிரமாக வெடித்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். வீதி வீதியாக மக்கள் அணிவகுத்துச் சென்று இந்த சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். 

    • இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். வெறுப்படைந்தேன். இதுபோன்ற கொடூரமான செயலை இனி யாரும் செய்ய நினைக்காத அளவுக்கு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    இதே போல நடிகைகள் ஊர்மிளா மடோன்கர், ரிச்சா சதா, ரேணுகா சஹானே, நகைச்சுவை நடிகர் வீர்தாஸ் உள்ளிட்ட பலரும் மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதே போல 'மணிப்பூர் வன்முறை', 'போதும் போதும்' போன்ற ஹேஷ்டேக்குகள் பெருமளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.




    • ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    ஆறுமுகநேரி:

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டி ஆறுமுகநேரியில் கிறிஸ்தவர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தின் சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தை பங்குதந்தை அலாய்சியஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊர் தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்பட திரளானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க கோவில் தெரு மேட்டுவிளை, மேல தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் மடத்துவிளை பங்குமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    • மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
    • மணிப்பூரில் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்ற அமித் ஷா, மாநில முதல்வர் பைரென் சிங் மற்றும் மாநில மந்திரிகள், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    மாநில உள்துறை மந்திரி நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பாலா, உளவுத்துறை தலைவர் தபன் டேக்கா மற்றும் சில உயர் அதிகாரிகளை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையின் போது மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் சென்றதும், அமித் ஷா மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மந்திரிகளை சந்தித்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை மணிப்பூரில் இருக்கும் அமித் ஷா பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் கலவரத்தில் காவல் அதிகாரி உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வீடு தாக்கப்பட்டது மற்றும் காவல் துறை ஆயுத கிடங்கில் இருந்து பயங்கரவாதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களை திருடி சென்றது என மாநிலம் முழுக்க கலவர சூழல் நிலவுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

    இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து நோனி மாவட்ட ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. டஜன் கணக்காணவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆற்றின் அருகே வராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள். பொதுமக்கள் மேலும், எச்சரிக்கையாக இருக்கவும், மழையின் நிலை மேலும் மோசமடைந்தால் எந்த உதவிக்கும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " துபுல் நிலச்சரிவின் நிலைமையை மதிப்பிடுவதற்கு இன்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிரார்த்தினையில் வைப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவ மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ×