என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mango recipes"
- மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது.
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2
கடுகு - 2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
வெல்லம் - 150 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* மாங்காய், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்
* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு கரையும் வரை சூடுபடுத்தவும். பின்பு, அதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் போட்டு வதக்கவும்.
* பின்னர் வெட்டிய மாங்காய் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் கலந்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு அதில் வெல்ல தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
* கலவை கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.
* இப்பொழுது சுவையான 'மாங்காய் பச்சடி' தயார்.
- மாம்பழம், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடியது.
- ஊறுகாய், அல்வா, பர்பி, சாக்லெட் என்று ஏராளமான உணவுகளை மாம்பழத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழத்தை பொரிப்பதற்கு:
மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1
மைதா - ¼ கப்
சோள மாவு - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மசாலா தயாரிப்பதற்கு:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
முந்திரி - 10
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு
இதர பொருட்கள்:
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா மற்றும் சீரகப்பொடி தலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கசூரி மேத்தி - சிறிதளவு
பிரஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில், மைதா, சோளமாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டியில்லாமல், தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதில், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, புரட்டிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில், வாணலியை வைத்து எண்ணெய்யை சூடாக்க வேண்டும். அதில் மாம்பழத் துண்டுகளைப் போட்டு, மேற்புறம் மட்டும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும்.
இந்த மேல்மாவில் விரும்பினால், முட்டையின் வெள்ளைக் கருவையும் கலந்துகொள்ளலாம்.
பின்னர் அடுப்பில், மற்றொரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு வெண்ணெய் போட்டு, உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, முந்திரி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சூடு ஆறியதும், சிறிதளவு தண்ணீர் விட்டு, பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மீண்டும், வாணலியை வைத்து, அதில் வெண்ணெய் போட்டு, உருகியதும், காஷ்மீர் மிளகாய்த் தூள் கலந்து 30 விநாடிகள் வதக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
5 நிமிடம் கழித்து, மசாலாவின் ஓரத்தில் வெண்ணெய் பிரிந்து வரும்.
அந்த சமயத்தில், பொரித்த மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பின்பு அதில் கசூரி மேத்தி, பிரஷ் கிரீம் கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
இப்போது சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.
புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் - 2,
புளித்த மோர் - 2 கப்,
அரிசி - ஒரு டீஸ்பூன்,
சீரகம், கடுகு - தலா அரை டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய் துருவல் - ஒரு கப்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
மிக்சியில் தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்ததை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டுஇருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானமும் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாம்பழம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு
செய்முறை :
மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
சுத்தமான வாய் அகண்ட பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.
அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் தளதளவென்று அல்வா வந்ததும், வறுத்த முந்திரியை சேர்த்து சிறிது நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் அல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
சூப்பரான மாம்பழ அல்வா தயார்
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
பால் - ஒரு லிட்டர்,
சர்க்கரை - தேவையான அளவு,
பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை :
மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
பாலை நன்கு ஆற விடவும்.
கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.
சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பழுத்த மாம்பழம் - 4
சர்க்கரை - 200 கிராம்
லெமன் ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
மாம்பழங்களை நன்றாக கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை விழுதை போட்டு 5 நிமிடம் வரை கிளறவும்.
பிறகு அதனுடன் சர்க்கரை, லெமன் ஜூஸ் சேர்த்து ஜாம் பதம் வரும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
ஜாம் பதம் தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டை ப்ரீஸரில் வைக்கவும். ஜாமை சிறிது எடுத்து அந்த குளிர்ந்த தட்டில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் ஜாம் உடனே ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். அதை ஒரு விரலால் நடுவே கோடு போடவும். இரண்டு பக்கமும் ஒட்டாமல் தனித்தனியாக பிரிந்தால் அது தான் சரியான பதம். ஜாம் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். பிரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
தோசை, இட்லி, பூரி பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாம்பழத் துண்டுகள் - 2 கப்,
பால் - கால் லிட்டர்,
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு,
சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை :
சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்த வைக்கவும்.
மீதமுள்ள மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, தேவையான அளவு பால் விட்டு மிக்சியில் நன்றாக நுரைக்க அடிக்கவும்.
அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக நுரைக்க அடித்து கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேலே துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை போட்டு பருகவும்.
சூப்பரான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்