search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Management Centre"

    • மதுரை மாவட்ட கூட்டுறவு மேலாண்மை மையத்தில் பட்டய பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
    • இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1-ந் தேதி ஆகும்.

    மதுரை

    மதுரை மாவட்ட பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான 22-வது அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியானது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பணிபுரியும் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறாத நிரந்தர பணியாளர்களுக்கு பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பாகும்.

    இப்பயிற்சிக்கான கல்வித்தகுதியாக பழைய 11-ம் வகுப்பு தேர்ச்சி (old S.S.LC) அல்லது புதிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஓராண்டு தொடர்ப ணியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அல்லது அரசு பதிவாளர் உத்திரவின்படி விபரம் குறிப்பிட வேண்டும்.

    சங்கதீர்மானம், துறை களஅலுவலரின் சான்றிதழ் பெறவேண்டும். தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்களுக்கு மேலாண்மை பட்டய பயிற்சி கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை வருகிற 28-ந் தேதி வரை அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1-ந் தேதி ஆகும்.

    இப்பயிற்சியானது ஆகஸ்ட் 8-ந் தேதி தொடங்கிறது.இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு திருநகரில் உள்ள பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 0452-3551204 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மதுரை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    ×