search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "make up tips"

    • மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை.
    • மேக்கப்பில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன.

    அழகுக்கு அழகு சேர்ப்பதுதான் 'மேக்கப்'. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், 'மேக்கப்' என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர் போடுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருக்கிறது. மேக்கப் என்பது ஒரு படிப்படியான செய்முறை. அதன் விளக்கங்களை கீழே காணலாம்:

    1. முதலில் மேக்கப் செட்டிங் ஸ்பிரே அடித்து, சருமத்தை மேக்கப்பிற்குத் தயார் செய்ய வேண்டும்.

    2. அடுத்ததாக மேக்கப்பின் அடிப்படையாக செயல்படும், பிரைமரை (primer) சருமத்தில் பூச வேண்டும். எண்ணெய்பசை கொண்ட சருமத்திற்கு, ஜெல் வடிவிலான பிரைமரையும், உலர்ந்த சருமத்திற்கு, கிரீம் வடிவிலுள்ள பிரைமரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    3. அதைத் தொடர்ந்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் உள்ள இடத்தில் கலர் கரெக்டரை பூசி, அதை சருமத்துடன் ஒன்றுமாறு செய்ய வேண்டும்.

    4. பின்பு, கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் உதட்டை சுற்றியுள்ள கருமை நிறத்தை மறைக்க, கன்சீலரைப் (concealer) பயன்படுத்த வேண்டும். இதையும் பிளண்டர் வைத்து பிளண்ட் செய்வது அவசியம்.

    5. உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதை முகத்தில் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே வைத்து பூச வேண்டும். முகத்தோடு சேர்த்துக் கழுத்திலும் பூசுவது அவசியம். அப்பொழுதுதான் முகம் தனியாக வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கும். பவுண்டேஷனைக் கீழ் நோக்கி தடவும் முறையே சரியானது.

    6. இதற்கு அடுத்து, காம்பேக்ட் பவுடரை முகத்தில் பூச வேண்டும். முகத்திலுள்ள சிறுசிறு குழிகள், கோடுகளை மறைக்கவும், சரி செய்து சமன்படுத்தவும் இது உதவும்.

    7. இப்பொழுது கண்களுக்கான மேக்-அப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைக்கு ஏற்ற நிறத்தில் 'ஐ ஷேடோ'வைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் ஒரு தங்க நிற நிறமியைக் கலந்து பூசினால், கண்கள் பளிச்சென இருக்கும்.

    8. காஜலை கண்களுக்குக் கீழேயும், ஐ-லைனரை கண்களுக்கு மேலேயும், கவனமானத் தடவ வேண்டும். அது கரைந்து போகாத மற்றும் வாட்டர் ப்ரூப் ஐ-லைனராக இருந்தால் சிறந்தது.

    9. செயற்கையாக விற்கும் கண் இமை முடிகளை, அதன் பசையுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டால், கண்களை மேலும் அழகாகக் காட்ட முடியும். இல்லையெனில், மஸ்காரா தடவி இமை முடிகளை அடர்த்தியாக காட்டலாம்.

    10. புருவத்திற்கென தனியாக ஸ்பூலி பிரஷ் (spoolie brush) கிடைக்கிறது. முதலில் அதன் ஒரு பக்கம் இருக்கும் மையை பயன்படுத்தி, புருவத்தின் பார்டரை வரைந்துவிட்டு, மறுபக்கம் உள்ள பிரஷின் மூலம், புருவ முடிகளை ஒழுங்குபடுத்தி பிளண்ட் செய்துகொள்ள வேண்டும்.

    11. முகத்தில் பிளஷ்ஷிற்கு (blush) பதிலாக ஹைலைட்டரை தேவைப்படும் இடங்களில் பூசி மெருகேற்ற வேண்டும்.

    12. கடைசியாக மேக்கப் பிக்ஸர் ஸ்ப்ரே (fixer spray) அடிக்க வேண்டும். இதன் மூலம் பல மணி நேரங்கள் வரை மேக்கப் கலையாமல் பாதுகாக்கலாம்.

    மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும்.

    மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

    அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம்.

    இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாதுகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது. மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.

    ×