search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor sale"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஓங்கபாடி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஆற்றங்கரை படுக்கையில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர் வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • சாராயம் விற்பனை செய்தவர்கள் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால்கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்

    ஜோலார்பேட்டை :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரஞ்சித் (வயது 32), திலிப்குமார் (33), சந்தைக்கோடியூரை சேர்ந்த முருகன் (50), லட்சுமி நகரை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் டி.எஸ்.பி சபியு ல்லா உத்தரவி ன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ)நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன எலந்தம்பட்டி ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65), இவரது மகன் பாண்டியன் (31) ஆகியோர் மது, சாரா யம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று புதுப்பே ட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கலா(55) வீட்டுதோட்டத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்தார். இதை பார்த்த அப்பகுதியில் ரோந்து சென்ற பண்ருட்டி போலீசார் கலாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    • மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • புஷ்பா வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம மரக்காணத்தில்கரி பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவருடைய மனைவி புஷ்பா ( வயது 52). இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராய விற்பது மரக்காணம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் கரி பாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புஷ்பா தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து அவர் வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர். அவரை சாராய வழக்கில் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    சத்யா (வயது 60) என்பவர் தன் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது38), பாச்சேரியை சேர்ந்த சக்தி (29) ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மரக்காணம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    சங்கராபுரம், மே.20-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ராஜா தலைமையிலான போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜெயராமன்(வயது 63), அம்பிகா(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ்(44), ஆரூர் கிராமத்தில் சாராயம் விற்ற அர்ச்சுனன்(75), குளத்தூரில் சாராயம் விற்ற செல்வம்(40) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
    • டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.

    • திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டிவனம் தீர்த்த குளம் மேம்பாலம் அருகே, திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முற்பட்ட தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 15 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் கிடங்கல் ஏரிக்கரை அருகே சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 12 லிட்டர் சராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழங்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×