search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law"

    • விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர்.
    • இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 30 -வது மாநில மாநாடு நேற்று தொடங்கப்பட்டது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியாக நாகப்பட்டினம் புத்தூரில் இருந்து நாகை அவுரிதிடல் வரை பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் ஹன்னன் முல்லா மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரம் கணக்கான விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது:-

    பொதுக் கூட்டங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலும் அளிப்பதில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க முடியாத மோடியை விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வைத்து தோற்கடித்துள்ளனர். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தியாக இருக்க வேண்டுமென அமித்ஷா தெரிவிக்கிறார். பல கலாச்சாரம் உள்ள நாட்டில் இது போன்ற கருத்து தெரிவித்தால் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு சேர்க்கும் என்றார்.

    • சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாளால் வெட்டினர்.
    • இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     மதுரை

    கருப்பாயூரணி நொண்டி கோவில் தெரு மூர்த்தி மகன் பரத்வஜன் (வயது 23). இவர் சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் காளவாசலை சேர்ந்த ஷீபா என்பவருக்கும் திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பரத்வஜன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பரத்வஜன் ஆண்டார் கொட்டாரம் மலைப்பகுதிக்கு வந்தார். அங்கு வந்த 2 பேர் அவரை அரிவாளால் வெட்டினர்.

    இதில் பரத்வஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
    • இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.


    தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது கூறினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
    எடப்பாடி:

    சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டினையே உதாரணமாக கூறலாம். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில், மதுரை மாநகருக்குள் நுழையமுடியாமல் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை நகரில் அதிகாலையில் எந்த ஒரு அச்சமும் இன்றி நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதுவே தற்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதற்கு முன் உதாரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் தினந்தோறும் மிக தரக்குறைவான வார்த்தைகளால் என்னை திட்டி பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற நிலையினை அறிந்து பண்புடன் பேசவேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மக்கள் நலம் காக்கும் சிறப்பான கூட்டணி. ஆனால் தி.மு.க சந்தர்ப்பவாத கூட்டணியாக அமைத்துள்ளது. தி.மு.க மக்கள் நலனை ஒருபோதும் கருத்தில் கொண்டதில்லை. இதற்கு உதாரணமாக அண்மையில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 வழங்கியதை தடுக்க பல்வேறு முயற்சி செய்தததையே கூறலாம்.

    அதேபோல் தமிழக ஏழை தொழிலாளர்களுக்கு அரசு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தடுக்க பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வி கண்டுள்ளனர்.

    நான் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினத்திலிருந்து, மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பெரும் பகுதி மு.க.ஸ்டாலினால் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக தூண்டப்பட்டவையாகும்.

    இப்போராட்டங்களுக்கு உரிய முறையில் தீர்வுகண்டு தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க சூழ்ச்சிகரமான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த காலத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக கூறிய தி.மு.க.வினர் தமிழகத்தில் எத்தனை நபர்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கினார்கள் என கூறமுடியுமா?

    அதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என கூறி பிரசாரம் செய்துள்ளார்.

    தமிழகத்தை பாலைவனமாக மாற்றும் எண்ணம் கொண்டவருக்கு நாம் வாக்களிக்கலாமா? தமிழக மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    விரைவில் நகர மற்றும் கிராமப்புற பகுதியில் வாழும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். பொள்ளாச்சியில் நடைபெற்ற மனித தன்மை அற்ற அந்த நிகழ்வினை வன்மையாக கண்டிக்கிறோம். அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் முன் நிறுத்தி அரசு கடுமையான தண்டனையை பெற்றுத்தர தயாராக உள்ளது.

    எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக்கல்லூரி, 11 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை, புதிய குடிநீர் திட்டம், புதிய நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், மின்வாரிய கோட்ட அலுவலகம் மற்றும் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் புதிய கால்நடை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கிய அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடர்ந்திடவும், காவிரி உபரி நீரினை கொண்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீர் நிலைகளை நிரப்புவதற்கான புதிய பாசனத்திட்டத்தினை நிறைவேற்றிடவும், நதி நீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் காவிரி கோதாவரி ஆற்றினை இணைப்பதன் வாயிலாக தமிழகம் முழுவதும் பாசன வசதி பெருகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Egypt #Internet
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் இணைய வழி குற்றத்தை தடுக்கும் வகையில் வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேசபாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைத்தளங்களை முடக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.



    நாடாளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் இந்த சட்ட மசோதா நிறைவேறியது. இதையடுத்து அதிபர் அப்தெல் பாட்டா அல்-சிசி இந்த புதிய சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.

    இந்த சட்டத்தின் படிஇணையத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தளங்களை உருவாக்கி நடத்துபவர்கள் மற்றும் அந்த வலைத்தள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

    நாட்டின் நிலையற்ற தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள புதிய சட்டம் உதவும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

    மேலும் இந்த சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே சுமார் 500 வலைத்தளங்கள் முடக்கப்பட்டுவிட்டதாக கெய்ரோவை தலைமையகமாக கொண்ட சுதந்திரமான சிந்தனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது.  #Egypt #Internet #Tamilnews
    தமிழக சட்டசபையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    பீளமேடு:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்ற மரண கயிறு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சுக்கு நூறாக்கி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளி உள்ளது.

    திருச்சியில் பஸ் டிரைவர் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே அனிதாவும், பிரதீபாவும் இதே நீட் தேர்வால் உயிரிழந்து உள்ளனர்.

    நீட் தேர்வு மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும் என்ற வாதம் பொய்யானது. தமிழகத்தை சேர்ந்த தணிகாசலம் உள்ளிட்ட பல டாக்டர்கள் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2வில் 91.9 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளஸ்-2 வில் 65 சதவீதம் பெற்ற பல மாநிலங்கள் முன்னணி இடத்தில் உள்ளது.

    தமிழக மாணவர்களை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என கூறி உள்ளார். அவருக்கு என்ன ஆணவம்?

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


    தற்போதைய ஆணைப்படி இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டசபையை கூட்டி ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும். அப்போது தான் ஆலையை திறக்க முடியாது.

    மகாராஷ்டிராவில் ஆலையை உடைத்த போது அனில் அகர்வால் ஏன் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாத் போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறி உள்ளார்.

    நானும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன. அப்படி என்றால் நானும் சமூக விரோதியா? அவர் நாவை அடக்கி பேச வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் சில அமைப்புகள் மூலம் பணம் பெற்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஓட்டுவோம் என கூறி உள்ளார். அவ்வாறு ஓட்டினால் ஆலை இருக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? பணமா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant
    எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #SVeShekher
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் 10-வது வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்கு விடிவு தந்திருக்கும் பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கையெழுத்திட்ட மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. -காங்கிரஸ் கட்சிகள் தமிழ மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்தியில், மாநிலத்தில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது அவர்கள் ஒரு முறை கூட தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் காவிரி விவகாரத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதனை தீர்க்க கூடிய இடத்தில் தி.மு.க. -காங்கிரஸ் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி சம்பவத்தில் பயங்கரவாத சக்திகளை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. இனி மேலாவது அதனை செய்ய வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக பாரதிய ஜனதா சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அங்கு தேவையானவற்றை செய்வோம்.

    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்திற்கு தொழிற்சாலை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் எதை கொண்டு வந்தாலும் சிலர் திட்டமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் தமிழகம் முன்னேற கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒன்றரை கோடி தமிழர்களை கொன்று குவித்து ராஜபக்சேவின் கைக்கூலிகள். அவர்களை ஒன்றரை கோடி தமிழர்களின் ஆவி சும்மா விடாது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தேசத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது.

    கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க., நாடகம், சினிமாவில் வளர்ந்து வருகிறது. அவர்கள் தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டு கால பாரதிய ஜனதா ஆட்சியில் பல்வேறு கோடி திட்டங்களை செய்துள்ளது. காங்கிரஸ் ஏற்றி வைத்த கடன்கனை அடைத்து வருகிறது.


    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. எஸ்.வி. சேகர் பிரச்சனையில் சட்டம் தன் கடமையை செய்யும். கர்நாடகாவில் காலா படம் திரையிட கூடாது என்பது என்ன நியாயம். இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சி.ஆர். நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராசு, தேசிய செயற்குழு உறுப்பினர் கல்யாண சுந்தரம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். #BJP #PonRadhakrishnan #SVeShekher
    ×