search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laddu"

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - அரை கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்
    பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
    நெய் - கால் கப்
    துருவிய வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு



    செய்முறை:

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

    மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து பொட்டுக்கடலை மாவு, பாதாம் பவுடர், துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள், போட்டு இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும்.

    லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

    சத்தான கவுனி அரிசி லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் - 20
    உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
    ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
    பேரீச்சம்பழம் - 15
    தேன் - சிறிதளவு.



    செய்முறை :

    உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து  நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

    அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

    மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் அமைக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. #Tirupati #Laddu
    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் கோவிலுக்குள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

    ஆனால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான இடத்தை ஒதுக்க தேவஸ்தானத்தால் இயலவில்லை.

    அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்டுக்கான பூந்தியை மட்டும் கோவிலுக்கு வெளியே தயாரிக்க முடிவு செய்து, அதற்கான பிரிவை வெளியில் அமைத்தது.

    அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியில் தற்போது பூந்தி தயாரிக்கப்படுகிறது.

    அதை எவர்சில்வர் பெட்டிகளில் அடைத்து கோவிலுக்குள் அனுப்பி மடப்பள்ளியில் வைத்து, சர்க்கரைப்பாகு கலந்து, உருண்டையாக லட்டு பிடித்து அதே பெட்டிகளில் வெளியில் அனுப்பி பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு லட்டு இருப்பதை தேவஸ்தானம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் லட்டு தயாரிப்பு தொடர்பாக புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

    அதாவது, கடந்த மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழுக்கூட்டத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மடப்பள்ளியை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி புதிய மடப்பள்ளியில் பூந்தி தயாரிப்பதற்கு கடலை மாவைக் கலப்பது, பூந்தி பொரிப்பது, சர்க்கரைப் பாகு செய்து, அதில் பூந்திகளைக் கலந்து தேய்ப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    லட்டுகளை உருண்டையாகப் பிடிப்பதற்கு மட்டும் கோவிலுக்குள் அனுப்புவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

    அவ்வாறு செய்வதால் கோவிலுக்குள் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

    இதுதொடர்பாக ஆகம பண்டிதர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் தெரிகிறது.

    எனினும், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஏழுமலையான கோவிலுக்குள் இருக்கும் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களைத் தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிடுவதாக பக்தர்கள் குறை கூறியுள்ளனர். #Tirupati #Laddu


    வஜ்ரவேல் ஆனந்த் இயக்கத்தில் குணா பாபு - ஸ்வேதா நடிப்பில் உருவாகும் `லட்டு' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #Laddu
    கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் சார்பாக அமுதா ஆனந்த் தயாரிப்பில், ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் சார்பாக பி.ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் படம் `லட்டு'.

    இந்த படத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை, தமிழ் படம் 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர கேடி (எ) கருப்பு துரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

    குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டையரை தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதையும், அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் மையப்படுத்தி படம் உருவாகிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. #Laddu

    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு எளிய முறையில் வீட்டிலேயே பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு -1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு -10



    செய்முறை :

    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

    பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

    ருசியான பாசிப்பருப்பு லட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடப்பதால் பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

    முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.



    பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி அனில்குமார்சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் சிறப்பு ஏற்பாடு பணிகளை முடிக்கவேண்டும். பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. 6,800 கார்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 165 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான துணை அதிகாரிகள் பாலபாஸ்கர், சீனிவாசராஜி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, என்ஜினீயர் சந்திரசேகர் ரெட்டி, கோவில் அதிகாரி அரிந்திரநாத், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மகந்தி பங்கேற்றனர். #TirupatiTemple

    ×