search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "L Murugan"

    • இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி எல்.முருகன் கோவைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய சகோதரிகள், தாய்மார்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச கழிப்பிடமும் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் புதிய டிரோன் டெக்னாலஜி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3 கோடி பேரை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. அதுவே பாரத பிரதமருடைய இலக்காக இருந்து வருகிறது.

    அதேபோல புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்படி பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன்னேற்ற பிரதமர் நரேந்திர மோடி வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
    • பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    திருச்செந்தூர்:

    மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். குலசேகரன்பட்டினத்தில் மட்டும் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அங்கிருந்து ரோகிணி என்ற சிறிய வகை ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இந்தியா இன்று விண்வெளி துறையில் மிகப்பெரிய சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் உலகில் எந்த நாடும் செல்ல முடியாத பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-3 சென்று சாதனை படைத்துள்ளது.

    இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் ரூ.560 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். 

    இதே போல் வ.உ.சி. துறைமுக விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் மின்மயமாக்க பணிகள், 9 புதிய ரெயில் பாதைகள், அம்ரித்-2 திட்டத்தின் கீழ் 34 ரெயில் நிலையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

    என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிவேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். இந்த யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    மீன்வளத்தை பெருக்கவும் மாற்று தொழில் செய்யவும், மீனவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 65 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மீனவர்களுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜனதா அரசு.

    இதுக்கு முந்தைய அரசு வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க. தான் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக மட்டுமே ரூ.1,800 கோடி கொடுத்துள்ளது.

    குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இதற்காகர் பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்தார். பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.


     அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றார்.

    • போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள்

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழா பல்லடத்தில், பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

    இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இது தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    "என் மண் என் மக்கள் யாத்திரை" தி.மு.க. அரசின் ஊழல்களையும், இயலாமையையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், பிரதமரின் 10 ஆண்டுகளாக சாதனைகளையும் எடுத்துச்செல்லும் யாத்திரையாக அமைந்தது. 234 தொகுதியிலும் யாத்திரை முடிந்துள்ளது.

    தமிழகத்தில் கிராமம் தோறும் கஞ்சா ஊடுருவி இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தி.மு.க. நிர்வாகியே ரூ.3000 கோடி அளவிற்கு கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

    இந்த போதைப்பொருள் விஷயத்தில் தி.மு.க. எந்தளவு கடத்தல்காரர்களை பாதுகாத்து இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கத்தை சொல்ல வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் நாளை பிரதமர் பங்கேற்கும் மாநாட்டிற்கு வருகிறார்கள். மேலும் யார் யார் வருவார்கள் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பாருங்கள்.

    இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, யார் வருகின்றார்கள் என்பதை கொஞ்சம் காத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மந்திரி எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும்.

    மத்திய மந்திரி எல்.முருகனிடம் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். தமிழகத்தில் எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?

    இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

    கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பா.ஜ.க. செய்யாது.

    எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவரை கேவலப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்ன இளைஞரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம் என்றார்.

    • மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.
    • மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்கெனவே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை மந்திரியாக பொறுப் பேற்றுக் கொண்டார்.

    பாராளுமன்ற மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டு 68 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. அதன் அடிப்படையில் மத்திய மந்திரி எல்.முருகனின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதையடுத்து புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் வருகிற 27-ந் தேதி நடத்துகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.


    இதேபோல் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் மத்தியபிரதேச பிரதேசத்தில் இருந்து உமேஷ் நாத் மஹராஜ், மாயா நரோ லியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மந்திய மந்திரி எல்.முருகன் 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூர் ஆகும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

    2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தை பெற்றார். 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக பணிபுரிந்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தார்.

    அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி வரை அவர் அப்பதவியில் இருந்தார். 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் மத்தியபிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.

    • பிரதமர் மோடியின் நினைவில் தமிழகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
    • எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (பிப்ரவரி 11) மாலை சென்னை வந்திருந்தார். தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் பகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிகழ்ச்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமருக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழகம், பிரதமர் மோடியின் நினைவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது."

    "பிரதமர் எங்கு சென்றாலும், தமிழை குறித்தும் தமிழ் மக்களை குறித்தும் பேசுகிறார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு பத்ம விருது அறிவித்து கௌரவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியின் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. உலகில் எங்கு சென்றாலும் தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை.
    • டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புயல் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம்சாட்டி பேசினார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார்.

    உடனே, நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். தயவு செய்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராகவும் இருக்க தகுதியற்றவர் என எல்.முருகனை நோக்கி, டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

    அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் மறுப்பு தெரிவித்து பேச தொடங்கினார். இதனால் டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    எல்.முருகனுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.-க்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல்- குழப்பம் நிலவியது. டி.ஆர்.பாலுவை பேசவிடாமல் தடுத்தனர். அதைதொடர்ந்து டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.-க்கள், கூட்டணி கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க.வுடன் நடந்த வாக்குவாதம்- மோதல் குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் அமைச்சராக இருப்பதை தி.மு.க.-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டி.ஆர்.பாலு எம்.பி. எனது சமூகத்தையும், என்னையும் அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தினார்.

    சமூக நீதியை ஓட்டு வங்கிக்காக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக தலித் சமூகத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கு வழங்கி உள்ளார். காசி சங்கமம் நிகழ்ச்சி நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் காசிக்கு வருவதற்கும் காசி மக்கள் இங்கு வருவதற்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டின் செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். தமிழ் கலாச்சாரம், பண்பாடு மீது பிரதமருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

    இவ்வாறு எல்.முருகன் கூறினார். 

    மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "

    டி.ஆர்.பாலு தான் அரசியலில் இருக்க தகுதியற்றவர். பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது" என்றார். 

    மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், "தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பற்றி பாராளுமன்றத்தில் பேசியதன் மூலம் அச்சமூகத்தையே அவமதித்து விட்டார். இது கண்டிக்கதக்கது" என்றார்.

    • தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

    கோவை:

    கோவையில் இன்று நடைபெறும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் விமானம் மூலம் கோவை வந்தனர்.

    விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் இன்று 2-வது முறையாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் வேலைகளை முடுக்கி விடுவதற்காகவும், அறிவுரைகள் வழங்குவதற்காகவும் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டணி குறித்து, வேட்பாளர்கள் குறித்து தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள். மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட்டால் அதற்கான பணியை செய்யவும் தயாராக உள்ளோம்.

    விஜய் புதிய கட்சி தொடங்கினாலும், பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அவர்கள் பார்வையாளர்களாக இருப்பர் என அவரே சொல்லிவிட்டார். பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பங்கு குறைவாக தான் இருக்கும்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தலை மையில் 19 சதவீத வாக்குகள் மற்றும் தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி என பார்த்தோம். அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இல்லாத கட்சிகள் தமிழ கத்தில் ஜெயிக்க முடியாது என்பது ஏற்கனவே பொய்யாகி இருக்கிறது.

    நாட்டை பாதுகாக்கும் முக்கிய அமைப்பு என்.ஐ.ஏ. நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவோருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

    அவர்களின் வேலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    • நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.
    • தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அடிப்படையிலிருந்து உழைப்பால் உயர்ந்து தேசத்தின் ஏழாவது துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறைகளை கையாண்ட நிர்வாக திறன் படைத்தவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும், பாரத தேசத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவருமான அப்பழுக்கற்றவர்.

    மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அய்யா அவர்கள், அத்வானி ஜி அவர்களின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

    தேசம் முழுவதும் ரத யாத்திரைகள் நடத்தி பாரத ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டவர்.

    தன்னுடைய வயதளவு இருக்கும் அனுபவங்களை வைத்து, தேசத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும், பெருமதிப்பிற்குரிய மூத்த அரசியல்வாதியான எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு, தேசத்தின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என கூறியுள்ளார்.

    • வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.
    • பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வள்ளி கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூரில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பிறந்தவர் பத்ரப்பன். வள்ளி கும்மியாட்ட கலைஞராக உள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பத்ரப்பன், சிறுவயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்டு இருந்தார். அதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்க ளில் வள்ளி கும்மி என்னும் கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

    இதுதவிர 20 ஆண்டுகளில் தாசனூரில் உள்ள மாணவ, மாணவிகள் 170 பேருக்கு இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்தார். மேட்டுப்பாளையம் நகராட்சி ராஜபுரத்தில் உள்ள மகளிர் குழுவிற்கும் இலவசமாக வள்ளி கும்மி கிராமிய கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.

    வள்ளி கும்மிக்கு சிறப்பு சேர்த்த இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

    கிராமிய கலையான வள்ளி கும்மி கலையில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், அதை மாற்றி பெண்களும் அதிகளவில் பங்கேற்கவும், அவர்களுக்கு பயிற்சியும் அளித்த பெருமைக்குரியவர் பத்ரப்பன்.

    அந்த கலையின் வாயிலாக தேசப்பற்று, வரலாறு ஆகியவற்றையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து வள்ளி கும்மி கலைக்கு சேவையாற்றி வரும் இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.

    இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும், நக்கீரன் என்ற மகனும், முத்தம்மாள் என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவியும், மகனும் இறந்துவிட்டதால் தனது மகள் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்து விவசாயம் பார்த்து வருகிறார். முத்தம்மாளின் கணவர் ரங்கசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.


    பத்மஸ்ரீவிருது குறித்து பத்ரப்பன் கூறியதாவது:-

    நாட்டுப்புற கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலைவடிவம் மூலம் தான் மற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.

    இக்கலை என்னோடு அழிந்து விடாமல் இருப்பதற்காக மேட்டு ப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக் கொடுத்துள்ளேன்.

    அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கத்தை தர முடியும்.

    பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத்துறைகளிலும் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும். எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறனே். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை நான் எனக்காக கருதாமல் ஒட்டுமொத்த கிராமிய கலைஞர்களுக்கு கிடை க்கும் பரிசாகவும், அங்கீகாரமாகவும் கருதுகிறேன்.

    நான் ஏற்கனவே தமிழக அரசின் கலைமாமணி விருது, கலைமுதுமணி விருதுகளை பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மஸ்ரீவிருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல்.முருகன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து எல் முருகன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதவாது

    ஒயிலாட்ட நாட்டுப்புற கலைகளின் முன்னோடியான, அய்யா பத்ரப்பன் அவர்களுக்கு, மத்திய அரசு "பத்மஶ்ரீ" விருது அறிவித்ததை அடுத்து உடனடியாக அவர்களது இல்லதிற்கு சென்று ஐயா அவர்களை நேரில் சந்தி்த்து மிகுந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்.

    வள்ளிக்கும்மி எனும் நாட்டுப்புற நடனத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலம், தெய்வங்களின் வரலாறு, தேச வரலாறு மற்றும் சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து பேசுபவர்.

    ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த கலையில், பெண்களுக்கும் சமமான அதிகாரமளித்து பயிற்சி கொடுத்த முன்னோடி.

    தொடர்ந்து 66 ஆண்டு காலமாக தான் நேசித்து செய்யும் இக்கலையின் மூலம், 150-க்கும் மேற்பட்ட தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி, குருவாக்கியுள்ளார். 300-க்கும் அதிகமான "கும்மி" நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×