search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kiren rijiju"

    • காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
    • ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    புதுடெல்லி :

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.

    மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமருக்கு எதிராக பேசினால் கைது செய்து சிறையில் தள்ளுவார்கள் என முன்னாள் நீதிபதி பேச்சு
    • காங்கிரசால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள் என மத்திய மந்திரி காட்டம்

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா (ஓய்வு) தேசிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.

    'இன்று நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. ஒரு பொது இடத்தில் நின்றுகொண்டு, எனக்கு பிரதமரின் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என கூறினால், சிலர் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்து, என்னை கைது செய்து, சிறையில் தள்ளலாம். இதனையே குடிமக்களாக நாம் அனைவரும் எதிர்க்கிறோம்' என்று முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறினார்.

    இதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    உண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி இதனை கூறினாரா? என எனக்கு தெரியாது. அவர் கூறியது உண்மையாக இருந்தால் அவரது பேச்சே அவர் பணியாற்றிய நிறுவனத்தை இழிவுபடுத்துவதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை எந்த நேரமும் தடைகள் எதுவுமின்றி தரக்குறைவாக பேசுபவர்கள், கருத்து சுதந்திரம் இல்லை என்று கதறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசமாட்டார்கள். சில மாநில கட்சி முதல்-மந்திரிகளை பற்றி விமர்சிக்க கூட ஒருபோதும் அவர்களுக்கு தைரியம் இல்லை.

    இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

    • நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது.
    • வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    இம்மாதம் 1-ந் தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 72 ஆயிரத்து 62 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 25-ந் தேதி நிலவரப்படி 25 ஐகோர்ட்டுகளில் 59 லட்சத்து 55 ஆயிரத்து 873 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் 4 கோடியே 23 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகவே, அனைத்து கோர்ட்டுகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சம் ஆகும். இது 5 கோடியை நெருங்கி வருகிறது.

    நிலுவை வழக்குகளை முடிப்பது நீதித்துறையின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதில் அரசுக்கு பங்கில்லை. வழக்குகளை முடிக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    வழக்குகள் தேங்குவதற்கு நீதிபதிகள் பற்றாக்குறை, வாய்தா உள்பட பல காரணங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை கேள்வி நேரத்தில், கடந்த ஆண்டில் உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாக செலவிட்ட நாடுகளில் இந்தியா 3-ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் கூறியதாவது:-

    மற்ற நாடுகளில் ராணுவ செலவினம் குறித்த விவரங்கள் ராணுவ அமைச்சகத்திடம் இல்லை.

    இருப்பினும், சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது இணையதளத்தில், இந்தியா 3-வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

    முதல் இடத்தில் அமெரிக்காவும் (80 ஆயிரத்து 67 கோடி டாலர் செலவு), இரண்டாம் இடத்தில் சீனாவும் (29 ஆயிரத்து 335 கோடி டாலர்), 3-வது இடத்தில் இந்தியாவும் (7 ஆயிரத்து 660 கோடி டாலர்) இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    46 இடங்களில், ரேடார் நிலையங்கள் நிறுவி கடலோர பாதுகாப்பு கண்காணிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து தற்போதைய சூழலை பிரதிபலிக்கிறது.
    • இந்தியாவில் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப் பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்பாட்டினால் நீதி வழங்குவது பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அச்சு ஊடகம் குறிப்பிட்ட அளவு பொறுப்புணர்வைக் கொண்டுள்ளது என்றும் ஆனால் மின்னணு ஊடங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் தற்போதைய சூழலை பிரதிபலிப்பதாகவும், இது குறித்து தாம் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இது குறித்து யாரும் பேச விரும்பினால், பொது களத்தில் விவாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்றும், இந்தியாவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்த நீதிபதியோ அல்லது நீதித்துறையோ இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று என்னால் தெளிவாக கூற முடியும் என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

    மத்திய மந்திரி ராஜ்யவர்தன் ரதோரின் ஆன்லைன் சவாலுக்கு வீடியோ மூலம் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். #SalmanKhan #FitnessChallenge
    புதுடெல்லி:

    மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரதோர் கடந்த மே மாதத்தில் ட்விட்டரில் ஒரு சவால் ஒன்றை பதிவிட்டார். அதில் உடல் ஆரோக்கியமாக பராமரிப்பது வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த சவால் விடுக்கப்பட்டது. அதில் நாம் ஆரோக்கியத்துடன் இருந்தால் இந்தியாவும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த சவாலை பிரதமர் மோடி உட்பட பலரும் ஏற்று தங்கள் உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், மத்திய மந்திரி கிரென் ரிஜிஜு இந்த சவாலை பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற சல்மான் கான், தனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனுடன் நாம் ஆரோக்கியமாக இருந்தால் நாடும் ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். #SalmanKhan #FitnessChallenge
    தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அகதிகள் வருவதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். தனது பேச்சில், “வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள்” என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று ரிஜிஜு கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, தவறுதலாக மந்திரி அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    சாலையில் குப்பை கொட்டியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
    புதுடெல்லி:

    ஆடம்பர காரில் இருந்தவாறே, மும்பை சாலை ஒன்றில் குப்பை கொட்டியவரை நடிகை அனுஷ்கா சர்மா கண்டித்த காட்சி, சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆனது. அக்காட்சியை அவருடைய கணவரும், கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி படம் பிடித்து வெளியிட்டு இருந்தார்.



    இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “அனுஷ்கா, விராட்கோலி ஆகியோருக்கு விளம்பரம் தேவை என்றாலும், நல்ல காரியத்தை செய்துள்ளனர். நமது நடத்தையே நமது மனநிலையை பிரதிபலிக்கிறது. தூய்மை உணர்வு, ஒரு சமூக நற்பண்பு. இத்தகைய நற்பண்புகள், பணத்தாலோ, கல்வியாலோ வருவது இல்லை. இந்தியாவை தூய்மையாக வைத்திருப்போம்” என்று கூறியுள்ளார். #KirenRijiju #Anushkar #Virat
    ×