search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Governor"

    • கேரளா ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
    • ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பல்கலைக்கழக நியமன விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் அம்மாநில மார்க்சிஸ்ட் அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வேலை செய்கிறார் என்றார்.

    ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க அவர் முயற்சிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆளுநர் தனக்கு ராஜ அதிகாரம் இருப்பதாக நினைப்பது வெட்கக்கேடானது, ஆளுநரின் செயல்பாடு கேரள உயர்கல்வித் துறையை அழிக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார். 

    • இந்த இரண்டு முக்கிய வருவாய் ஆதாரங்கள் குறித்து வெட்கப்படுகிறேன்.
    • லாட்டரி விற்பனை மூலம் ஏழை மக்களிடம் இருந்து கேரள அரசு கொள்ளையடிக்கிறது.

    கொச்சி:

    கேரளா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கேரளா ஆளுநர் கூறியுள்ளதாவது:

    இங்கே, நமது வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம். 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலத்தின் அவமானகரமான நிலை இது. மாநிலத்தின் ஆளுநரான நான், இந்த இரண்டு முக்கிய வருவாய் ஆதாரங்கள் குறித்து வெட்கப்படுகிறேன். லாட்டரி என்றால் என்ன?.

    இங்கே அமர்ந்திருக்கும் உங்களில் யாராவது லாட்டரி சீட்டு வாங்கியது உண்டா? மிகவும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். நீங்கள் (கேரள அரசு) அவர்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறீர்கள். எல்லோரும் மது அருந்துவதற்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். இங்கு மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது மிக அவமானம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். #KeralaFlood #Modi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் குறித்து, டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து மாநில கவர்னர் சதாசிவம் எடுத்துரைத்தார். அப்போது அவரிடம் பேசிய பிரதமர் மோடி, கேரளாவுக்கு தற்போது மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.600 கோடி, வெறும் முன்பணம் மட்டும்தான் எனவும், மாநிலத்துக்கு மேலும் கூடுதல் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.



    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்த கவர்னர் சதாசிவம், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் மற்றும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, கேரளாவில் சேத விவரங்கள் கண்டறியும் பணிகள் முடிவடைந்ததும் கூடுதல் நிதி வழங்கப்படும் என உள்துறை மந்திரியும் உறுதியளித்தார்.

    இந்த தகவல்கள் அனைத்தும் கேரள கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #KeralaFlood #Modi
    ×