search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karthigai Deepam"

    • கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.

    அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 11-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த ஆண்டிற்கான மகா தீபம் ஏற்றப்படும் நிறைவு நாளையொட்டி மகா தீபத்தை தரிசனம் செய்ய நேற்று மாலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.

    மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

    ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது.

    கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் நிறைவடைகிறது.

    தொடர்ந்து நாளை காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரையை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

    வருகிற 27-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அப்போது மகா தீப மை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

    அதன் பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
    • நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருகிறார்.

    கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார்.

    தை மாதம் மாட்டு பொங்கல் பண்டிகையன்று நடைபெறும் திருவூடலின்போது, பிருங்கி மகரிஷிக்கு மட்டும் தனியாக சென்று காட்சியளித்த காரணத்தால், கோபம் கொண்ட உண்ணாமலையம்மன் ஊடல் கொண்டு தனியாக அம்மன் கோவிலுக்குச் சென்று விடுவார். பின்னர் அண்ணாமலையார் மட்டும் தனியாக பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து கிரிவலம் வருவார்.

    கார்த்திகை தீப திருவிழா முடித்து அடுத்த 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் திருவிழாவின்போது, 2-ம் நாள் கிரிவலம் வரும் மகிமையை உணர்த்தும் விதமாக தன்னைத்தானே குடும்பத்துடன் சுற்றி கிரிவலம் வருவார்.

    அதன்படி நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடக்கிறது.

    உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    மேலும், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.

    நாளை அண்ணாமலையார் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகளும் முழு வீச்சில் செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாாகள்.

    மேலும் கிரிவல பாதை முழுவதிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது.
    • தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. மூலவர் சன்னதி முன்பு அதிகாலை 3.40 மணியளவில் சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர்.

    பின்னர், அந்த தீபத்தை வெளியே கொண்டு வந்து, 5 விளக்குகளை ஏற்றினர். தொடர்ந்து பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது.

    மாலையில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்தார்.

    தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்புறமுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மாலை 6 மணியளவில் 'மகா தீபம்' ஏற்றப்பட்டது.

    பருவதராஜ குல சமூகத்தினர் மகா தீபத்தை ஏற்றி வைத்தபோது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியுலா வந்தனர். பரணி தீபம் மற்றும் அர்த்த நாரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 40 லட்சம் பக்தர்கள் மகா தீபம் தரிசித்தனர்.

    மகாதீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை ஆரூத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு சாற்றப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • கெட்வெல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • கனமழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

    நெல்லை:

    கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் முகூர்த்த நாட்கள் காரணமாக நெல்லையில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    விறுவிறுப்பான விற்பனை

    நெல்லை மாவட்டத்தின் பிரதான மொத்த மலர் சந்தையான நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட் வெல் பூ மார்க் கெட்டில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சந்தைகளுக்கு வரும் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    விலை உயர்வு

    குறிப்பாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் நெல்லை மாவட்டம் மானூர், அழகிய பாண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந் தும், தென்காசி மாவட்டம் மாறாந்தை பகுதிகளில் இருந்தும் நெல்லை பூ மார்க்கெட்டுக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம்.

    தற்போது மழையின் காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்து வரத்து குறைவாக இருந்தது. பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களின் காரணமாக பூக்களின் தேவை அதிகரிப்பு இருந்து வருவதால் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    மல்லிகை பூ

    அதன்படி நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,500-க்கு இன்று விற்பனையானது.

    பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ப னை செய்யப்பட்டது. இதே போல் கேந்தி பூ ரூ.100-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனையானது.

    • இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சொக்கப்பனை தீபம்

    நேற்று மகா மண்டபத்தில் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பரணி தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நெல்லையப்பர் மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவர்கள், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டவுன் ஆர்ச்சுக்கு அடுத்தப்படியாக பாரதியார் தெரு திரும்பும் சாலையில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபம் நடக்க உள்ளது.

    மாற்றுப்பாதை

    இதற்காக டவுன் சொக்கப்பனை முக்கு பகுதியில் பனை மரங்கள் மற்றும் பனை ஓலைகள் கொண்டு சொக்கப்பனை அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகின்ற னர். இதனை காண ஏரா ளமான பக்தர்கள் வருவார்கள். இதனையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுபாதையில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடு களை போக்குவரத்து போலீ சார் செய்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை: 

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தது. விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர். பரணி தீபத்தை முன்னிட்டு 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலை திக்குமுக்காடியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் 101 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு 2,700 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    • ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும்.

    மதுரை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக மதுரை மார்க்கெட்டுகளில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளனர்.

    மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக சந்தையில் வளாகத்தில் இன்று பூக்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

    கார்த்திகை தீப திருநாளையொட்டி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக 400 முதல் 800 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த மல்லிகை பூக்கள் இன்று கிலோ 1,800 ரூபாயாக விலை உயர்ந்தது. இது தவிர பிச்சி பூக்கள் 800 ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 900 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. ரோஜா மலர்கள் 100 ரூபாய்க்கும், சம்பங்கி 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதாலும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அதிக அளவில் பூக்களின் தேவை இருப்பதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது பனி சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு தினமும் 50 டன்களுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருந்த நிலையில் தற்போது அதன் வரத்து 30 டன்னாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவே விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இனி டிசம்பர் மாதம் முழுவதும் பனி காலம் என்பதால் மல்லிகை பூக்களின் மகசூல் பெருமளவில் குறையும். இதன் காரணமாக இதன் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்ற பூக்களை ஆர்வத்துடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கார்த்திகை தீபம் நாளை ஏற்றப்படுகிறது.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி இன்று மற்றும் நாளையும் சென்னையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் அந்த ரெயில் 2 நாட்கள் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இன்று மற்றும் நாளையும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்குடி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர் பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ராணிப்பேட்டை, ஆற்காடு, காஞ்சிபுரம், பெங்களூரு, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் வசதிக்காகவும் ஆங்காங்கே சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பஸ்களை கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    தீப தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிந்து வருகின்றனர்.

    நகரில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. பக்தர்களின் வசதிக்காக 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுத்தம் செய்யப்பட்டு பளிச்சிடுகிறது.

    பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த நகருக்குள் வரும் 9 சாலைகளிலும் பார்க்கிங் மையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை சார்பில் கிரிவலப்பாதையில் 85 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் எங்கும் அரோகரா கோஷம் என்ற மந்திரங்கள் பக்தர்களிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆன்மிக நகரம் பக்தி பரவசமாக காட்சி தருகிறது.

    • ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.
    • எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

    திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

    இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது

    இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது.

    பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

    கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.

    நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல

    கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

    எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே

    எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும்.

    எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள்

    ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும்.

    தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

    அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும்.

    அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

    • அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.
    • வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம்.

    தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி),

    பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது.

    திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி.

    எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

    கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.

    தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில்

    சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன.

    எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,

    கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும்

    எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி,

    அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான,

    வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும்

    சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    • பெரும்பாலான பக்தர்களை அவரே ‘வா’ என்று அழைத்து விடுவார்.
    • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே

    அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

    திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டு சென்று, வரம் வாங்கித் திரும்ப வேண்டும்

    என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்த பாக்யம் கிடைத்து விடாது

    பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார்.

    14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

    இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள்.

    "இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

    உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

    உங்களையும் அறியாமல் தினமும் 'ஓம் நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

    அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா?

    என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும்.

    ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள்.

    இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

    இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும்.

    நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும்.

    பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

    மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்,

    " இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

    மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும்.

    பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

    சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர்

    அருள் மள, மளவென வரிசையாகத் தேடி வரும்.

    இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

    சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள்.

    அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு

    அவரே வரும்படி செய்து அருள் பாலித்து விடுவார்.

    பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

    அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து 'ஓம் நமச்சிவாயா நமஹ' ஓம் அருணாச்சலேஸ்வரா நமஹா'

    என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

    முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும்.

    இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள்.

    அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும்.

    மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள்.

    அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

    அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

    ×