search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Juice"

    • தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது.
    • கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது. கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான பிற காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    மஞ்சள் காமாலைக்கு தீர்வளிக்கும்:

    ஆயுர்வேதத்தின் படி, கரும்பு இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்ட பொருளாகும். இது கல்லீரலை வலுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலை நோய் நெருக்கவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணைபுரியக்கூடியது. எந்தவகை நோய்பாதிப்பின்போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்பு சாறு உதவக்கூடியது.

    நோய்த்தொற்றுகளை தடுக்கும்:

    கரும்பு சாறு டையூரிடிக் பண்புகளை கொண்டது என்பதால் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கரும்பு சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கரும்புச்சாறு போக்கும். கரும்பு சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. சோடியமும் குறைவாகவே இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்பு சாறுக்கு முக்கிய பங்கு உண்டு.

    செரிமானத்தை மேம்படுத்தும்:

    செரிமான மண்டலம் சீராக இயங்கவும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கரும்பு சாறு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.

    எலும்புகளை வலுவாக்கும்:

    கரும்புச் சாற்றில் உள்ளடங்கி இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கி, எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

    கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக கோடை கால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும். அதனை சரிபடுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது. மேலும் கரும்பு சாறில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.

    • வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும்.
    • இன்று வெள்ளரிக்காய் மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வெள்ளரி - 2

    மிளகு - அரை டீஸ்பூன்

    புதினா - சிறிது

    உப்பு - சிறிதளவு

    ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

    மோர் - தேவையான அளவு

    செய்முறை :

    வெள்ளரிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகு, உப்பு, ஐஸ்கட்டிகள், மோர், புதினா சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    அரைத்த ஜூஸ் வடிகட்டியில் ஊற்றி வடிகட்டி கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

    இப்போது சூப்பரான குளுகுளு வெள்ளரிக்காய் மோர் ரெடி.

    • வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது.
    • வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும்.

    வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக்கூடியவை.

    கோடை காலத்தில் தாகத்தை தணிப்பது போல், பல நன்மைகளை உடலுக்கு செய்கிறது. விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.

    கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், ஒரு மாதத்தில் மேனி மெருகேறும். வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்.

    கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். அதேபோல், வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும். இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.

    நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதிப்புகளைத் தரும். தினமும் வெள்ளரிக்காய் ஜூஸினை குடித்து வந்தால், எளிதில் கழிவுகள் வெளியேறும். கொழுப்புகள் கரையும்.

    வெள்ளரிக்காயுடன் எந்த வகையான காய் மற்றும் பழங்கள் சேர்த்து உணவில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழச்சாறாகவும் குடிக்கலாம்.

    வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. அது சிறுகுடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஜீரண உறுப்பில் உண்டாகும் நல்ல பாக்டீரியாக்களை பெருக்கச் செய்கிறது. இதனால் பசி நன்றாக எடுக்கும்.

    தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஒரு நாளைக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைக்கும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

    கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். எனவே இத்தகைய வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவது நல்லது.

    உடல் பருமனாக இருப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் இளைத்து விடும். இதில் அதிக நீர்சத்து இருக்கிறது. கொழுப்பினை கரைக்க தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் உள்ளன. வெள்ளரிக்காய் நீரினை சமன் செய்ய தேவையான எலக்ரோலைட்ஸ் அதிகம் கொண்டுள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் நிச்சயம் வெள்ளரிக்காய் உதவி செய்யும்.

    வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். அதிலும் இதனை தினமும் தவறாமல் குடித்து வந்தால், டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை அதிகம் உள்ளது. உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.

    வெள்ளரிக்காயில் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை குடித்து வர, உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.

    வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.

    வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை குடித்து வர கண்களில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

    குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

    • தினமும் இந்த ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும்.
    • இந்த ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளரிக்காய் - 1

    எலுமிச்சை - 1

    புதினா - சிறிது

    துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் வெள்ளரிக்காயை போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் புதினா, துருவிய இஞ்சியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும்.

    இப்படி தினமும் செய்து வரும் போது, 15 நாட்களிலேயே உங்கள் தொப்பையில் ஓர் நல்ல மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். அதிகளவு தொப்பை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

    • பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது.
    • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 100 கிராம்,

    பால் (காய்ச்சி ஆறவிடவும்) - அரை லிட்டர்,

    சர்க்கரை - 3 டீஸ்பூன்,

    வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.

    செய்முறை :

    பாதாமை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் அதன் தோலை உரித்து, மிக்ஸியில் கொஞ்சம் பால் சேர்த்து விழுதாக அரைத்து, சர்க்கரை சேர்க்கவும்.

    இதனுடன் ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மீதமுள்ள பாலுடன் சேர்த்துப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பாதாம் மில்க் ஷேக் ரெடி.

    • பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • இந்த மில்க் ஷேக் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    பழுத்த பப்பாளிப்பழம் - 1/2

    தேங்காய்ப் பால் - 1 கப்

    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1/4 கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    செய்முறை :

    பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பப்பாளிப்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

    சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.

    • கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம்.
    • இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள்.

    அழகான, பளபளப்பான சருமத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சரும அழகை பேணுவதற்கு ரசாயன அழகு சாதன பொருட்களை பலரும் சார்ந்திருக்கிறார்கள். அவை எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்வதில்லை.

    சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காய்கறி, பழங்களின் சாறுகளை தொடர்ந்து பருகி வந்தால் நிவாரணம் பெறலாம். அவை இயற்கையாகவே சரும நலன் காக்க உதவுவதோடு பளபளப்பான, பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.

    ஒரு டம்ளர் பழ ஜூஸ் அல்லது காய்கறி சாறு சருமத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டிலும் ஆன்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை சருமத்திற்கு சேதம் விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். வீட்டிலேயே எளிதாக தயாரித்து பருகிவிட முடியும்.

    வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். பளபளப்பான தோற்ற பொலிவுக்கும் வித்திடும். அதில் உள்ளடங்கி இருக்கும் அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காபிக் அமிலம் சருமத்தில் நீர் தேங்கி நிற்பதை தடுக்கும்.

    இதனால் முகம் வீங்கி இருப்பது தவிர்க்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கும்.

    கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் ஜூஸாக தயாரித்தும் பருகலாம். இதில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை சரும அழகை மேம்படுத்தும். கீரை ஜூஸ் சுவையாக இருக்காது என்பதால் பலரும் அதனை விரும்புவதில்லை. அதனை பருகுவது உடலில் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு துணை புரியும்.

    கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் இவற்றை தனியாகவோ அல்லது ஒன்றாகவோ தயாரித்து பருகி வரலாம். இந்த ஜூஸை தொடர்ந்து பருகிவந்தால் முகப்பரு, பொலிவற்ற, மென்மையற்ற சரும தோற்றம் போன்ற பிரச்சினைகளை மறந்துவிடலாம். சருமம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் விரட்டியத்து மென்மையாகவும், பொலிவாகவும் உணர வைக்கும்.

    இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பானத்தை பெண்கள் பலரும் தவறாமல் பருகுவார்கள். இந்த சாற்றில் பொட்டாசியம் மற்றும் நியாசின் அதிகம் கலந்திருக்கும். மேலும் முக்கியமான தாதுக்களை தக்கவைத்து, சருமத்தை மேம்படுத்த உதவும்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

    தேவையான பொருட்கள்

    பால் - 1/2 லிட்டர்,

    ரோஸ் மில்க் எசென்ஸ் - 100 மிலி,

    சர்க்கரை - 200 கிராம்,

    ஏலக்காய் தூள் - 10 கிராம்.

    செய்முறை

    பாலை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்.

    சர்க்கரை, ஏலக்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைக்கவும்.

    பால் நன்றாக ஆறியதும் அதில் ரோஸ் மில்க் எசென்ஸ், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.

    தேவைப்படும் போது ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.

    தேவைப்பட்டால் பாதாம் பருப்பை சீவி அதில் அலங்கரித்து தரலாம்.

    • குழந்தைகளுக்கு இந்த டிரிங் மிகவும் பிடிக்கும்.
    • இந்த டிரிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகேடோ) - 2

    கெட்டியான பாதாம் மில்க் - அரை கப்

    கோகோ பவுடர் - அரை கப்

    துருவிய டார்க் சாக்லேட் - கால் கப்

    நாட்டுச் சர்க்கரை - அரை கப்

    அலங்கரிக்க:

    சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.

    பிரிட்ஜில் குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும்.

    இப்போது சூப்பரான அவகேடோ சாக்கோ ரெடி.

    • இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்

    தேவையான பொருட்கள்:

    தயிர் - ஒரு கப்

    பால் - அரை கப்

    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - ஒன்று

    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர், ஏலக்காய் சேர்க்கவும்.

    கொஞ்சம் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து தயிருடன் சேர்க்கவும்..

    அத்துடன், முழுமையான கொழுப்புள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    இதனை கொஞ்சம் நேரம் ஃபிரிட்ஜ்ஜில் வைத்து பிறகு பரிமாறலாம்..

    பரிமாறும்போது, ஒரு தம்ளரில் ஊற்றி அதன் மீது, பொடியாக நறுக்கிய வறுத்த முந்திரி, பாதாம் போட்டுக் கொடுத்தால் அசத்தலாக இருக்கும்..

    • மதுரையில் பிரபலமான ஜிகர்தண்டா இப்போது அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.
    • இதனை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால் - 1 லிட்டர்

    நன்னாரி சிரப் - 3-4 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1/2 கப்

    பிரஷ் க்ரீம் - 1/2 கப்

    பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்

    வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் சுண்டும் வரை காய்ச்சவும்.

    பின் அதில் சர்க்கரை சேர்த்து, குறைவான தீயில் மீண்டும் பாதியாக சுண்டும் வர கொதிக்க விட வேண்டும். அதன் நிறம் மாறி பாதியானதும், அதில் 1 கப் பாலை எடுத்து தனியாக குளிர வைக்க வேண்டும்.

    பிறகு மீதமுள்ள பாலை மீணடும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    பின்பு அதில் பால் கோவா சேர்த்து நன்கு கலந்து, பின் அதில் பிரஷ் க்ரீம், வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்து, ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் 3-4 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது அது ஐஸ் கட்டி போன்று இருக்கும். அதனை உடைத்துவிட்டு, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும்.

    பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் ப்ரீசரில் வைத்து எடுக்க வேண்டும். இதேப்போன்று 2 முறை ப்ரீசரில் வைத்து உறைய வைத்து எடுத்து அரைத்து, இறுதியில் அதனை ப்ரீசரில் 8 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.

    அதற்குள் பாதாம் பிசினை ஒரு பௌலில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும்.

    இறுதியில் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் நன்னாரி சிரப், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினி, தனியா எடுத்து வைத்துள்ள பால் டம்ளரில் 3/4 அளவு வரும் வரை ஊற்றி, பின் அதில் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு பரிமாறினால், மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி!!!

    • பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது.
    • பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

    முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள்.

    அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறதாம்.

    மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைட்ரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது.

    வாரத்துக்கு 6 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், சோம்பலும் வராது என்று இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

    இதன் தலைவர் விஞ்ஞானி கேட்டி வான்லி, "முதியவர்கள் சிறிய வேலைகளை செய்தாலும் சோர்வடைந்து விடுகிறார்கள். வயதாகும்போது அவர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விடும் என்பதுதான் இதற்கு காரணம். இதனால் திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காது. எனவே, ஆய்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களின் ரத்த நாளத்தை விரிவடைய செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்தால் திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருந்தார்கள்," என்றார்.

    அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து செயல்படக்கூடியது. அதனால் பீட்ரூட் அருந்துவதற்கு முன்பு முதியவர்கள் தங்கள் உடலுக்கு ஒத்துவருமா? என்று டாக்டரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.

    ×