என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "judgment"
- உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
- 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34).
இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது் ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன் (33), வெங்கடேஷ் (33), மணி (38), முனி என்கிற மணிகண்டன் (27), விஜி என்கிற விஜய் (27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
மேலும் கணேசன் வீட்டில் இருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.
ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
- சேலம் இரும்பாலை அருகே தாய் தனது 2 வயது மகளை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் சேலம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
- இதில் அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி கோமதி (வயது 28) இவர்களுக்கு மகாலட்சுமி (3), கவுசிகா ஸ்ரீ (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் ஆண் குழந்தைகளே இல்லை என்று சந்திரசேகர் மனைவி கோமதியிடம் அடிக்கடி தகராறு ெசய்து வந்தார்.
அதனால் கோபித்துக்கொண்டு கோமதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் குழந்தைகளுக்கு குருணை மருந்தை கொடுத்து தானும் அதனை குடித்தார். இதில் இரண்டு வயதுக் குழந்தை கௌசிகா ஸ்ரீ உயிரிழந்தார். கோமதி மற்றும் மகாலட்சுமி ஆகிய 2 பேரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற கோமதிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
பீகாரின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜூலை 22-ந்தேதி மர்ம நபர் ஒருவர் கற்பழித்தார். இது தொடர்பாக மறுநாளே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு அராரியாவில் உள்ள போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 4-ந்தேதி சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு, இரு தரப்பிலும் வாதம் மற்றும் தண்டனை என அனைத்தும் ஒரே நாளில் நடந்தது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் வேகமாக (ஒரே நாளில்) தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இந்த வழக்கு மாறியிருக்கிறது. ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விவரம் கடந்த 26-ந்தேதி தான் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கடந்த 2018-ம் ஆண்டு 3 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் மற்றும் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் தங்கள் இறுதி சுற்று வாதங்களை முன்வைத்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு எழுத்துபூர்வ வாதங்களை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
டி.டி.வி.தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் கோரும் வழக்கின் மீது நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Doubleleafsymbol
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.
இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.
இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்றபோது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள்.
பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள்.
இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.
கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சதீஷ்குமார் (28), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்தவர்.
2. தமிழரசி (27), சதீஷ்குமாரின் மனைவி.
3. கலா (48), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை.
4. தனலட்சுமி, திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி.
5. மதபோதகர் அருள்தாஸ்
6. ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி
7. பாத்திமா (35), வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி.
8. மகா என்ற மகாலட்சுமி (20) பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி.
9. ராதா என்ற கிரிஜா (35), நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை.
10. ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.
11. கவிதா என்ற ராஜலட்சுமி (34), வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவரின் மனைவி.
12. அன்பழகன் (28), சேலம் அயோத்தியாபட்டணம்.
13. அமுதா (28), அன்பழகனின் மனைவி.
14. மோகன் என்ற மோகன்ராஜ் (28), திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.
15. மதிவாணன் (23), திட்டக்குடி.
16. அன்பு என்ற செல்வராஜ், விருத்தாசலம்.
17. டவர் என்ற ஆனந்தராஜ், திருக்கண்டேஸ்வரம்.
18. பாலசுப்பிரமணியன் (42), விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகர்.
19. ராதா என்ற ராதிகா (30) பண்ருட்டி செக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி.
மேற்கண்ட 19 பேர் மீதும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.
இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.
எனவே இரு மாணவிகளுக்கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி லிங்கேஸ்வரன் மாலை 4 மணி அளவில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாலட்சுமியை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். #Students #Harassment
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் கூறுகிறது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வும் செய்துள்ளது” என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு வரவில்லை என்று, அந்த குழுவின் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மறுத்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவல் அளித்திருப்பது இதுவே முதல் முறை. மேலும், மோசடியான தீர்ப்பை பெற சுப்ரீம் கோர்ட்டை தவறாக வழி நடத்தி உள்ளது.
செல்லுபடியாகாத அந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது கண்ணியத்தைக் காத்துக்கொள்வதற்காக இதைச் செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நிவாரண மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் தவறாக நடந்துகொண்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை மீது ஒரு இருண்ட நிழல் விழுந்துள்ள போது, மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலிக்கக்கூட முகாந்திரம் கிடையாது.
பொய் வாக்குமூலம் அளித்ததற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் சுப்ரீம் கோர்ட்டிடம் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக இப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், சக நீதிபதிகளும் ஆங்கில மொழியையும், இலக்கணத்தையும் புரிந்துகொள்ளவில்லை என்று மத்திய அரசு சொல்கிறது.
மேலும், நீதிபதிகள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர் என்றும் அரசு கூறுகிறது.
மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களை தவறாக வழிநடத்தி இருக்கிறது. அத்துடன், தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளித்து, அதை பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்திருக்கிறது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையையும் மீறி உள்ளது.
தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை அளிக்கவே இல்லை.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பொறுத்தமட்டில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு சரியான அமைப்பு அல்ல என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. மரியாதைக்குரிய சுப்ரீம் கோர்ட்டும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி, தனது தவறான நடத்தைக்காகவும், சுப்ரீம் கோர்ட்டையும், நாடாளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தியதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் எத்தனை பத்திரிகையாளர் சந்திப்பை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், உண்மையை அவர்கள் மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையே, இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கிறது. ‘ரபேல்’ விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? என்பது அப்போது தெரியவரும். #RafaleCase #SupremeCourt #Judgment
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.
108 நாட்கள் பிணைக்கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான்.
இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த வழக்கு கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 47 பேர் சாட்சி அளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்