search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPad"

    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரும் நிகழ்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் எதிர்பார்க்கப்படும் சாதனங்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent

     

    ஆப்பிள் நிறுவனம் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மிகப்பெரும் நிகழ்வினை அக்டோபர் 30ம் தேதி நடத்த இருக்கிறது. இரண்டாவது விழா நியூ யார்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெற இருக்கிறது.

    கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS  மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 உள்ளிட்ட மாடல்களை அறிமுகம் செய்தது. 

    இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் “மேக்கிங்” என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.



    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய சாதனங்கள் வெறும் ஐபோன் மட்டுமின்றி அன்றாட தொழில் செய்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஐபேட் ப்ரோ மாடலில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம், யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்துடன் விலை குறைந்த மேக்புக் மற்றும் புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் மேக் மினி 2014ம் ஆண்டில் இருந்து அப்டேட் செய்யப்படவில்லை. இத்துடன் வேகமான இன்டெல் பிராசஸர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஐமேக், ஐமேக் ப்ரோ மற்றும் 12-இன்ச் மேக்புக் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் இயங்குதளங்களில் ஆப் உருவாக்குவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவன சாதனங்களில் க்ரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப் ஸ்டோர் நெறிமுறைகளை சமீபத்தில் அப்டேட் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. புதிய தடை ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மார்ச் மாத வாக்கில் காலென்டர் 2 செயலியை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியது. இந்த ஆப் பயனர்களின் சாதனங்களை க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய பயன்படுத்திக் கொண்டு, மாற்றாக பிரீமியம் அம்சங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    க்ரிப்டோகரென்சி செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக ஆப்பிள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கிடையாது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் விதிமுறைகளை மீறியதால் காலென்டர் 2 செயலி நீக்கப்பட்டதாக ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் க்ரிப்டோகரென்சிக்களுக்கு எதிரான புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதிய நெறிமுறைகள் ஐஓஎஸ், மேக் ஓஎஸ், வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் செயலிகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் ஆப்பிள் அறிவித்திருக்கும் புதிய நெறிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    கோப்பு படம்

    - ஆப்பிள் இனி விர்ச்சுவல் கரென்சி வாலெட் செயலிகளை அனுமதிக்கும், எனினும் இதற்கு டெவலப்பர்கள் தங்களை நிறுவனங்களாக பதிவு செய்திருக்க வேண்டும்.

    - க்ரிப்டோகரென்சி மைனிங்-ஐ சாதனத்துக்கு வெளியே செய்யும் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது கிளவுட்-சார்ந்த மைனிங் செய்யும் செயலிகள் அனுமதிக்கப்படுகின்றன.

    - செயலிகளை கொண்டு பயனர்கள் பணம் செலுத்துவது, பண பரிமாற்றம் அல்லது அனுமதிக்கப்பட்ட எக்சேஞ்ச்களில் க்ரிப்டோகரென்சிக்களை பெறவும் முடியும்.

    - இதேபோன்று காயின்களை வழங்கும் செயலிகள், பிட்காயின் பரிமாற்றங்கள், இதர க்ரிப்டோகரென்சி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ நிதி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை சட்டரீதியாகவும் இருக்க வேண்டும்.

    - பயனர்களை சமூக வலைத்தள நடவடிக்கை, மற்றவர்களை குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோடு செய்ய தூண்டுவது மற்றும் செயலிகளை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றுக்கு க்ரிப்டோகரென்சி செயலிகள் அதன் பயனர்களுக்கு விர்ச்சுவல் காயின்களை வழங்க கூடாது.


    கோப்பு படம்

    புதிய விதிமுறைகளால் சில மூன்றாம் தரப்பு க்ரிப்டோகரென்சி செயலிகள் தடை செய்யப்படும் சூழலில் இருக்கும் நிலையில், ஆப்பிள் க்ர்ப்டோகரென்சி செயலிகளின் போக்கு முற்றிலும் மாற்றியமைக்கும். புதிய விதிமுறைகளால் எத்தனை செயலிகள் நீக்கப்படும் என்ற தகவல்கள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.

    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளுக்கும் புதிய விதிமுறை பொருந்தும் என்பதால், மேக் மற்றும் ஜெயில்பிரேக் செய்யப்பட்ட ஐபோன்களில் தொடர்ந்து க்ரிப்டோகரென்சிக்களை மைன் செய்ய முடியும்.
    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்குவோருக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை சலுகை வழங்குகின்றன.
    புதுடெல்லி:

    ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.

    அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.

    கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.

    புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.
    ×