search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry"

    • விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார்.
    • படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அணில்குமார் (வயது 21). இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி தொடர்பான தேர்வு எழுத படித்தும் வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். சாப்பிட்டுவிட்டு படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    நள்ளிரவு 1 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்துள்ளார். அப்போது அணில்குமார் வீட்டின் தோட்டத்தில் உள்ள தேக்குமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். சத்தம்போட்டு அணில்குமாரின் பெற்றோரை பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தார். அனைவரும் சேர்ந்து அணில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அணில்குமார் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா? அல்லது போலீஸ் ஆக முடியவில்லை என்ற ஏக்கமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
    • மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.

    இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர்.

    அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜதுரை.

    இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 45).

    இந்நிலையில், இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையா ளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர்.

    மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தப்பி ஓடிய மர்மநப ர்களை போலீ சார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • காடாம்புலியூர் போலீசார் விசாரணை
    • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பண்ருட்டிக்கு வந்தார்? எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் கடைவீதியில் சந்தேகப்படும் படியாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் ஆட்டோவை பரிசோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 40), சின்னசேலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (24), காமராஜ் (45) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொந்தமாக வாங்கிய இடத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.
    • ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் வசித்து வருபவர் வைரமுத்து (வயது 48), டிரைவர். இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் (22) வசந்த் (21) என்ற மகன்கள் உள்ளனர்.

    வைரமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் 4 சென்ட் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு மனையை விற்க முடிவு செய்தார். இதனை அறிந்த வைரமுத்துவின் மனைவி முத்துலட்சுமியின் தங்கை பார்வதி தன்னிடம் நிலத்தை விற்குமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு சம்மதித்த வைர முத்து அந்த இடத்தினை பார்வதிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இடத்திற்குரிய தொகையை பார்வதி சிறிது சிறிதாக கொடுத்துவந்துள்ளார். இதன் காரணமாக வைர முத்துவிற்கும் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி தங்கைக்கு ஆதரவாக பேசி யதால் குடும்பத்தில் பிரச் சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்து கொண்டு வைரமுத்துவைப் பிரிந்து சென்று தென்காசி மாவட்டம் பொதிகை நகரில் இரு மகன்களுடன் தனியே வசித்து வருகிறார்.

    வீட்டுமனை விற்ற பணமும் முழுமையாக கிடைக்காததாலும், மனைவி, மகன்கள் பிரிந்து சென்றதாலும் வைரமுத்து மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற வைரமுத்து அங்கு வந்திருந்த தனது இரு மகன்களிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் வைரமுத்து மன வேதனைக்கு ஆளானார். இது குறித்து தனது தாய் மற்றும் உறவிரகளிடம் கூறி மனவேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் , குடும்பம் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் அந்த வீட்டுமனை தான் என்றும், அதனால் அந்த இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளார். அதற்கு தாய் மற்றும் உறவினர்கள் வைரமுத்துவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வீட்டுமனை பகுதிக்கு பெட்ரோல் கேனுடன் வைரமுத்து சென்றார். அங்கு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே வைரமுத்து பரிதாபமாக பலியானார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அவர் தீக்குளித்ததை உடனடியாக யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    அந்த வழியாக சென்ற வர்கள் வைரமுத்து இறந்து கிடப்பதைப் பார்த்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமை மற்றும் குடும்பப்பிரச்சினையால் வைரமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
    • 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

    இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாண்டியன் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • கிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் ராஜபாண்டியன் (40)விவசாயி. இவர் நேற்று இரவுதாழம்பட்டி லிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி -கும்பகோ ணம் சாலை பணிக்கும் குப்பம் அருகே வந்து கொண்டி ருந்தபோதுபண்ருட்டியிலிருந்துசாத்திப்பட்டு சென்றுகொண்டிருந்த

    மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜபாண்டியன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் தெரிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.
    • புருஷோத்தமன் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் புரு ஷோத்தமன் (வயது 33). இவர் மோட்டார் சைக்கி ளில் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியி லிருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு லாரி புருஷோத்தமன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இவர் ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே புருஷோத்தமன் பரிதாப மாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சுழி அருகே சொத்து பிரச்சினையில் மகன், தாயை உருட்டு கட்டையால் தாக்கினார்.
    • இந்த சம்பவம் குறித்து பரளச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மேலப்பாறைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது63). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். முத்தம் மாளின் கணவர் முத்துச் சாமி ஏற்கனவே இறந்து விட்டார்.

    அதன் பின்னர் தனது தோட்டத்தில் அவர் தனியாக வசித்து வந்தார். மேலப்பாறைக் குளத்தில் வசிக்கும் மகள்கள் முரு கேஸ்வரி, முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்.

    இந்த நிலையில் அவர் தோட்டத்தில் தனியாக இருந்தபோது மகன் முத்துக் குமார் வந்தார். அவர் சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என கூறி தகராறு செய்தார். மேலும் மகள்கள் வீட்டிற்கு முத்தம் மாள் செல்லக்கூடாது எனவும் கூறி வாக்குவாதம் செய்தார்.

    ஆனால் அதற்கு சம்மதிக் காமல் முத்தம்மாள் பதில் வாக்குவாதம் செய்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையால் தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

    இதில் காய மடைந்த முத்தம்மாள் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து பரளச்சி போலீஸ் நிலையத்தில் முத்தம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
    • 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது.

    சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கள் மீது மற்றொரு பயணிகள் ரெயில் மோதியதில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 291 பயணிகள் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.

    ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த விசாரணை அறிக்கையில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்னல் மாற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது? என்பது பற்றி அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மெயின் லைனில் சென்று கொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்த பாதைக்கு திரும்பியது ஏன்? என்பது பற்றியும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

    40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி அந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபற்றி மற்றொரு குழு விசாரணை நடத்தி வருகிறது.

    • வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது.
    • காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா ?

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி (வயது 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று காலையில் வெளியில் சென்றார். பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவு 9 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திவிட்டு சென்றார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கார் திடீரென தீப்பற்றியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த முகமது ஷாலியை எழுப்பி தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விக்கிவாண்டி போலீசார், காரை யாரேனும் கொளுத்தி விட்டனரா? அல்லது காருக்குள் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    ×