என் மலர்
நீங்கள் தேடியது "inquiry"
- தனது விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- வயலில் உள்ள போர் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வட்டம், நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கன்னு (வயது 55). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் உறவினர்கள் செல்லக்கண்ணுவை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் வயலில் உள்ள போர் கொட்டகையில் செல்லக்கண்ணு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து உறவினர்கள் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் செல்லக்கண்ணு மரணத்தில் மர்மம் உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில் போலீசார் செல்லக்கண்ணு உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேந்தமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
- இதையடுத்து நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்:
சேந்தமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 34). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுகன்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 மாதமே ஆன வர்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உதவி கலெக்டர் விசாரணை இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சுகன்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுகன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உண்டியல் காணாததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் மாதம் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் அடைக்கப்பட்டது. இதனை அறிந்து நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்தனர். பின்னர் கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு தப்பி ஓடினர்.
இன்று காலை கோவிலின் கேட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டும், உண்டியல் காணாதது கண்டும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் உண்டியலை தூக்கி சென்றது அவர்களுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உண்டியல் தூக்கி சென்றதால் அதில் எவ்வளவு பணம், நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருட்டு நடந்த இந்த கோவிலில் ஏற்கனவே கடந்த மாதம் உண்டியல் உடைத்து பணம் ,நகை திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்டியலையே திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முனியம்மாள் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார்.
- போலீசார் விரைந்து சென்று முனியம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம், பெரும்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது தாய் முனியம்மாள் (வயது87). இவர் திருக்கோவிலூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறும் பஜனைக்காக சென்றார். அப்போது அந்த பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் முனியம்மாள் தனியாக இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக முனியம்மாள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
அதிர்ச்சி அடைந்த அவர் உயிர்பிழைக்க கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அவர் தண்ணீரில் அடித்துசெல்லப்பட்டார். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த போலீசார் விரைந்து சென்று முனிய ம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியபாலம் அருகே முனியம்மாள் உடல் கரை ஒதுங்கிக் கிடந்தது. உடலை கைப்ப ற்றிய போலீசார் பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருக்கோ விலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீன் குஞ்சுகளள் 3 டன் எடையுள்ளதாகவும், 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும்.
- மர்ம நபர்கள் குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா?
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எருக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோகன்.
இவர் திருவள்ளூர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர்.
இவருக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மீன் பண்ணை அமைந்துள்ளது.
இதில் குளங்களை அமைத்து மீன் வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் அசோகன் மீன் பண்ணைக்கு சென்று பார்த்தபோது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் வளர்க்கப்பட்ட கட்லா, ரோகு, மிருகுளா போன்ற மீன்கள் செத்து மிதந்துள்ளன.
இந்த குளத்தில் 5000? மீன் குஞ்சுகளை அவர் வளர்த்து வந்ததாகவும் அவை 3 டன் எடையுள்ளதாகவும் 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படு கிறது.
இது குறித்து அசோகன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி அந்த குளத்தில் மிதந்த மீன் மற்றும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மர்ம நபர்கள் இந்த குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- எம்.கே.மூப்பனார் சாலை அருகே புது ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை யில் இன்று மதியம் பொதுமக்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த அவர்கள் பிணத்தை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில் எம்.கே.மூப்பனார் சாலை அருகே புதுஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் பிணத்தை கயிறால் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்தவ ருக்கு 40 வயது இருக்கலாம் என சந்தேகித்தனர்.
இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இறந்தாரா?
தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் ?
என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை.
- கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கும்பகோணம்:
சென்னை உயர் நீதிமன்ற தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவு படியும், தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் செயலர் வழிகாட்டுதல்படி, கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவருமான.சண்முகப்பிரியா ஜெயில் அதாலத் என்று அழைக்கப்படும் சிறைச்சாலை நீதிமன்றம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நடத்திட நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டார்கள்.
அதன்படி திருவிடைமருதூர் கிளைசிறைச்சாலையில் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்சிவபழனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.
விசாரணை கைதிகளாக இருந்த சிறைவாசிகள் 49 பேரிடம் அவர்களின் வழக்கு விபரம் குறித்து நேரடியாக உரையாடி, அவர்களில் யாருக்கேனும் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்கறிஞர் நியமனம் தேவைப்படுகிறதா என்று கேட்டறிந்தார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 9 பேரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சட்டப்படி தகுதியுள்ள இருவரிடம் மட்டும் ஜாமீன் மனுக்கள் எழுதிப் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்தார்.
முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் விசாரணை கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட அறிவுரை மற்றும் நீதிமன்றம் சார்ந்த சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.
கும்பகோணம் கிளை சிறையில் பாரதிதாசன், நீதித்துறை நடுவர் எண்1 ஏற்று நடத்தினார். 51 விசாரணை கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறைவாசிகள் 4 பேர் மட்டும் வழக்கறிஞர் நியமனம் கோரி மனு அளித்தனர்.
அதில் இருவர் மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கறிஞர் நியமித்திட பரிந்துரை செய்தார்.
ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து கும்பகோணம் சட்டப் பணிகள் குழுவின் தன்னார் வலர்கள்ராஜேந்திரன் மற்றும்குணசீலன் செய்திருந்தனர்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.
- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவரிடம் எஸ்.பி. விசாரணை செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ரவி. இவரிடம் புதன்சந்தையைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த திங்கள்கிழமை கைப்பேசியில் பேசினாா். அந்தப் பெண் பாலியல் ரீதியில் பேசியபோதும் அதைக் கேட்ட ரவி, காவலா் என்ற முறையில் அந்தப் பெண்ணைக் கண்டிக்காமல், அவருக்கு துணைபோகும் விதத்தில் பேசியுள்ளாா்.
இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலா் ரவியை அழைத்து நேரில் விசாரணை நடத்தினாா். இச்சம்பவம் தொடா்பாக எஸ்.பி.யிடம் கேட்டபோது, ஆடியோவில் பேசிய பெண் யாா்? அவா் எதற்காக பேசினாா்? தனிப்பிரிவு காவலருக்கும், அவருக்கும் தொடா்பு என்ன குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
- வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கப்பட்டது.
- மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, நாகூர், கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடுப்போன மற்றும் தொலைந்துப் போன கைப்பேசிகளை கண்டுப்பிடித்து தருமாறு மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகை மாவட்ட சைபர் க்ரைம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான போலிசார் விசாரணை நடத்தி தொலைந்து போன மற்றும் திருடுப்போன 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 75 கைப்பேசிகளை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட கைப்பேசிகளை உரியவர்களிடம் நேற்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஒப்படைத்தார்.
- புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
- புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
கடலூர்:
புவனகிரி அருகே ஆதிவரகநந்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54) சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரத்திலிருந்து புவனகிரிக்கு பஸ்சில் வந்தார். புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புவனகிரியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே வந்த கார் மோதி ரவி தூக்கி வீசப்பட்டார்.
இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ரவியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து கழுத்தில் இருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர்.
- கூச்சல் போட்டதால் திருடர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நேற்று வழக்கம் போல வாரச்சந்தை நடைபெற்றது.
பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள திருமண மண்டபம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று மாலை சந்தைக்கு சென்று காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது ரிஜிஸ்டர் ஆபீஸ் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் இரவு 7 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் மின்னல் வேகத்தில் வந்து தேவி என்பவரின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்தனர்.
கழுத்தில் நக கீரல் பட்டதால் செயினை இருக்கமாக பிடித்துக் கொண்டார். உடன் வந்த பெண்கள் கத்தி கூச்சல் போட்டதால் செயினை அறுக்க முடியாத திருடர்கள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி போலீசார் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக கூறினர்.
பேராவூரணி காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் நியமித்து தீபாவளி பண்டிகை மற்றும் கூட்டம் நேரங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.