search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inflation"

    • உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்டவை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
    • இந்தியா தற்போது உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி உள்ளது.

    பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ள உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அரிசி உள்ளிட்டவை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகின்றன.

    இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், பாரதிய விவசாயிகள் சங்கம் நடத்திய சர்வதேச விவசாய மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே கூறியுள்ளதாவது:

    உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவை அடிப்படைத் தேவைகள் என்பதால் அவை அனைத்தும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர், அதனால் அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். பணவீக்கத்திற்கும் உணவுப் பொருட்களின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

    கடந்த 75 ஆண்டுகளில்,விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பெருமைக்குரியது. இந்தியா உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவை விவசாயத்தில் தன்னிறைவாக மாற்றியதற்காக அனைத்து அரசுகளும் பாராட்டுக்குரியது.

    விவசாயிகளின் அந்தஸ்தை உயர்த்த வேண்டியது அவசியம். அரசு விழாக்களில் கூட வழக்கறிஞர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் அழைக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் விவசாயிகளை யாரும் அழைப்பதில்லை.

    விவசாயத்தை கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற ஒரு இயக்கம் தேவை. இது கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேகமாக மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்கவும் உதவும்.

    விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் இல்லை, அவர்களின் வாழ்வாதாரம் மழை போன்ற பல வெளிப்புற காரணிகளைச் சார்ந்தே உள்ளது. விவசாய பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற சவால்களும் அவர்களுக்கு உள்ளன.

    விவசாய மாணவர்கள் இந்தியாவின் சிறந்த பாரம்பரிய விவசாய முறைளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடலூரில் வாழைத்தார் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை , சாத்தான்குப்பம், கீரப்பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளையம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப்பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 700 ரூபாய்க்கும், பூவன்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் 500 ரூபாய்க்கும், ஏலக்கி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாழைப்பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலையில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    • அடுத்து வரும் நாட்களில் மோடி அரசின் புதிய தாக்குதலுக்கு தயாராகுங்கள்
    • மோடி அரசு நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ விசுவாசமாக இல்லை.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தமது சமூக வளைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    மோடி அரசு நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ விசுவாசமாக இல்லை என்றும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் சாமானிய மக்கள் மீது பணவீக்கத்தின் சுமையை ஏற்றி விட்டதாகவும் தற்போது அது தாங்க முடியாததாகி வருகிறது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    வரும் காலங்களில் பணவீக்கம் குறையும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றும், வரும் நாட்களில் மோடி அரசாங்கத்தின் புதிய தாக்குதலுக்கு தயாராகுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    வீடு, வாகனம், தனிநபர் கடன்கள் மற்றும் இ.எம்.ஐ.கள் உயர்ந்துள்ளது, நான் மத்திய அரசை கேட்க விரும்புகிறேன், சம்பளம் வாங்கும் வகுப்பினர் தங்கள் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவார்கள் என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

    ×