search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvENG"

    • இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
    • இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.

    குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
    • தரம்சாலா டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 700 என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட இரண்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது.

    நேற்று சுப்மன் கில்லை வீழ்த்தியிருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் குல்தீப் யாதவை 30 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

    முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

    • ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதம் அடித்துள்ளார் சர்பராஸ் கான்.
    • தேனீர் இடைவேளைக்குப்பின் முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன் குவித்துள்ளது. கில், ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசிய நிலையில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிகல், சர்பராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

    சர்பராஸ் கான் தனது ஐந்து இன்னிங்சில் 3 அரைசதம் விளாசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர்களை எட்டிய அவர் இன்னும் மூன்று இலக்க ரன்னை (100) தொடவில்லை.

    நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் தொடக்கத்தில் 30 பந்தில் 9 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின் 55 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மதிய தேனீர் இடைவேளையின்போது அவர் அவர் 59 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டம் இழந்தார். சோயிப் பஷீர் வீசிய பந்தை ஆஃப் சைடு கட் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பந்து ஷார்ட் ஆக வீசப்படவில்லை. டாஸ்அஃப் ஆக வீசப்பட்ட பந்து சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆனது. இதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனார்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே அவர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்கொண்ட விதம் சுனில் கவாஸ்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

    பொதுவாக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அரைசதம் அடித்து விட்டோம், சதம் அடித்துவிட்டோம் என கவனக்குறைவாக விளையாடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

    கவாஸ்கர் டான் பிராட்மேனுடன் உரையாடியபோது, இது தொடர்பாக பிராட்மேன் கூறிய கருத்தை கவாஸ்கர் சர்பராஸ்கானுக்கு நினைவூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "டான் பிராட்மேன் உடன் உரையாடும்போது அவர் என்னிடம் "நான் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கூட ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்ளும்போது, என் மனதில் நான் ஜீரோவில் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொள்வேன்" என்றார். ஆனால் சர்பராஸ் கான் இங்கு இதுபோன்ற ஷாட்டை செசன் தொடங்கிய முதல் பந்திலேயே அடித்துள்ளார்" என்றார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்ட நிலையில், இந்தியா 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 473 ரன்களை எடுத்துள்ளது.
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    தரம்சாலா:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

    இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

    ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார் ரோகித் சர்மா. இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில்லும் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரை சதமடித்தனர். சர்ப்ராஸ் கான் 56 ரன்னும், படிக்கல் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஜடேஜா, துருவ் ஜுரல் தலா 15 ரன்னும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

    • ரோகித், கில் சதம் அடித்து அசத்தினர்.
    • ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், படிக்கல் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா ஸ்கோரில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அடங்கும்.
    • இந்த தொடரில் ரோகித் சர்மாவின் 2-வது சதம் இதுவாகும்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, கில் ஆட்டம் தொடங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கில் 64 பந்தில் அரைசதம் அடிக்க, ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்றார்.

    அரைசதம் அடித்த பின் கில் ரோகித் சர்மாவுக்கு இணையாக சதத்தை நோக்கி வந்தார். 147 பந்தில் 99 ரன்களை தொட்டார் ரோகித் சர்மார். 56-வது ஓவரை பஷீர் வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன் அடிக்காமல் மெய்டன் ஆக்கினார் ரோகித் சர்மா.

    ஹார்ட்லி வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து 154 பந்தில் சதம் அடித்தார் ரோகித் சர்மா. இந்த தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும்.

    ரோகித் சர்மா சதம் விளாசிய நிலையில்,  அடுத்த ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில்லும் சதம் அடித்தார். இவர் 137 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் சதம் அடித்தார்.

    • ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கில் 64 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். சுப்மன் கில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 64 பந்தில் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா சதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

    45 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், கில் 65 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • அஸ்வின் தனது 100-வது போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் மிரட்டினர். இருவரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்டது.

    குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மேலும் குறைந்த பந்துகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் களத்தில் இருந்து வெளியே வந்தனர். பொதுவாக ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பந்தை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி தூக்கி காண்பித்தவாற வெளியேறுவார்கள். அவரை சக வீரர்கள் கைத்தட்டி பாராட்டு பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    அதன்படி குல்தீப் யாதவ் வெளியே வர வேண்டும். ஆனால் இது அஸ்வினுக்கு 100-வது போட்டி என்பதால், நீங்கள் பந்தை தூக்கி காண்பித்து வெளியேறுங்கள் என அஸ்வினுக்கு அன்பு கட்டளையிட்டார். அத்துடன் பந்தை அஸ்வினிடம் தூக்கி போட்டார்.

    அதற்கு அஸ்வின் இல்லை... இல்லை... நீதான் ஐந்து விக்கெட் எடுத்தது. நீ சென்றால்தான் நன்றாக இருக்கும் என்று குல்தீப் யாதவிடமே பந்து மீண்டும் தூக்கிப் போட்டார். ஆனால் குல்தீப் யாதவ் நீங்கள்தான் செல்ல வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினா். அதற்கு அஸ்வின் உடன்படவில்லை. இறுதியாக குல்தீப் யாதவ் பந்துடன் வெளியேறினார். இருவரின் இந்த தன்னலமற்ற வேண்டுகோளை ரசிகர்கள் பாராட்டினர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

    தர்மசாலா:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார்.

    இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணியை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சுழலில் சிக்கி 218 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் தொடக்க சிறப்பாக அமைந்தது. கிராலி - டக்கெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார்.

    ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிய இந்திய அணி, முதல் விக்கெட் எடுத்த பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். முக்கியமாக குல்தீப் ஓவரை விளையாட முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அக்ஷர் படேல் 2205 பந்துகளில் 50 விக்கெட்டுகளையும் பும்ரா 2530 பந்துகளில் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். வெறும் 1871 பந்துகள் வீசி இந்த சாதனையை குல்தீப் படைத்துள்ளார்.

    • இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • இங்கிலாந்து அணியின் கிராலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்தார்.

    தர்மசாலா:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று காலை தொடங்கியது.

    இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. 4 போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் 5-வது டெஸ்ட் தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆகாஷ் தீப்புக்கு பதிலாக ஜஸ்பிரீத் பும்ரா இடம் பெற்றார். தேவ்தத் படிக்கல் டெஸ்டில் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகும் 5-வது இந்திய வீரர் ஆவார். ஏற்கனவே ரஜத் படிதார் துருவ் ஜூரல், சர்பிராஸ்கான், ஆகாஸ் தீப் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். காயம் அடைந்த ரஜத் படிதார் இடத்தில் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. ஆலி ராபின்சன் நீக்கப்பட்டு மார்க்வுட் இடம் பெற்றார்.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோக்கும் இன்று 100-வது டெஸ்டில் விளையாடினார்கள். 100-வது டெஸ்டில் இதுவரை 76 வீரர்கள் விளையாடி உள்ளனர்.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கிராவ்லி யும், பென் டக்கெட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 14.2 ஓவர்களில் 50 ரன்னை தொட்டது.

    இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென்டக்கெட் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

    அப்போது ஸ்கோர் 64 ஆக இருந்தது. அடுத்து ஆலி போப் களம் வந்தார். மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரியில் 50 ரன்னை தொட்டார். அவரது 14-வது அரை சதமாகும்.

    2-வது விக்கெட் ஜோடியையும் குல்தீப் யாதவே பிரித்தார். போப் 11 ரன்னில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. கிராவ்லி 61 ரன்னில் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய குல்தீப் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிராலி 79 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 29 ரன்னிலும் ஸ்டோக்ஸ் 0 ரன்னிலும் குல்தீப் ஓவரில் வெளியேறினார்.

    இதனையடுத்து அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அஸ்வினும் அவர் பங்குக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 57.4 ஓவரில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டும் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.
    • அதிவேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கியது. இந்த போட்டி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 100-வது போட்டியாகும்.

    இதனையொட்டி அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் மைதானத்திற்குள் அழைத்துச் சென்றார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு 100-வது போட்டியில் விளையாடுவதையொட்டி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100 என எழுத்தப்பட்ட இந்திய அணிக்கான தொப்பியை வழங்கினார்.

    பின்னர் அஸ்வின் மைதானத்திற்குள் கால் எடுத்து வைக்கும்போது, இரண்டு பக்கமும் வரிசையாக நின்று சக வீரர்கள் கவுரவித்தனர்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு 37 வயதாகிறது. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி இலங்கை அணிக்கெதிராக முதன்முறையாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். டி20 அணியில் ஜூன் 12-ந்தேதி ஜிம்பாப்வே அணிக்கெதிராக களம் இறங்கினார்.

    2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி டெல்லியில் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

    65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 116 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 156 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 35 முறை ஐந்து விக்கெட்டுகளும், 8 முறை 10 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந்தேதியும், டி20-யில் 2022-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதியும் கடைசியாக விளையாடியுள்ளார்.

    10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். அதிவேகமாக 350 (66 போட்டிகள்) விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றவர்.

    ×